Monday, October 26, 2009

சங்கத்துக்கு லீவு

டும்...டும்...டும்....

இதனால நம்ம பதினெட்டு பட்டி ஜனங்களுக்கு சொல்லிக்கறது என்னன்னா, தலீவருக்கு அடுத்த ஒரு வாரத்துக்கு பெண்டு நிமுத்தர வேல இருக்கறதால, சங்கத்துக்கு ஒரு வாரத்துக்கு லீவுங்கோ.....

அதுக்குள்ள நீங்க எல்லாரும் எழுதன வரைக்கும் படிச்சுட்டு, உலவு பட்டன அமுக்கி அண்ணனுக்கு வோட்டு போடுங்க.

திரும்பி வரசொல்ல அண்ணன் ஒரு பெரிய ஆச்சர்யப்படற மாதிரி வேல செய்யப் போறதா சொல்லிருக்காரு. அதுனால மறுபடியும் வந்து பாருங்க, ஓடி போயிராதீங்கங்கோ......

டும்...டும்...டும்....


சிகாகோ... get.. set.. go..



தேதி: அக்டோபர் 10
நேரம்: மாலை 6:30

திரு கார்கில் ஜெய் அலைபேசியில் அழைத்து, "என்னப்பா நாளைக்கு காலைல மாரத்தான் போலாமா?" என்றார்.
"போலாமே ஆனா என்கிட்ட சாதாரண ஷூ தான் இருக்கு" என்றேன்.
"டேய், ஓடரத்துக்கு இல்லடா பாக்கறத்துக்கு" என்றார்.
"என்ன என்னால ஓட முடியாதுன்னு நெனச்சீங்களா? நான் 30 கீ.மீ தூரத்த, 11 மணி நேரத்துல நடந்துருக்கேன்" என்றேன்.
"டேய் இவங்கலாம் 2 மணி நேரத்துல ஓடி ரெகார்ட் பண்ணுவாங்கடா! வரயா வரலையா? " என்று கூறிய கோப சூட்டில் என் காதுகள் பழுத்துவிட்டது. நேரில் இருந்திருந்தால் நெற்றிக் கண்ணை திறந்திருப்பார்.
"எத்தன மணிக்கு?" - நான்.
"மார்னிங் 6:30"
"சிகாகோ குளிருல அந்த டைம்-ல அனிமல்ஸ் கூட எந்திரிக்காது, வர ட்ரை பண்றேன்" - என்று நான் போனை வைத்தேன்.

என்னதான் நான் சலித்துக்கொண்டாலும், சிகாகோ என்றாலே நிதி நிறுவனங்கள் மற்றும் பலமாடி கட்டிடங்கள் மட்டுமே இருக்கும் என்று நினைத்த எனக்கு, இது ஒரு புது அனுபவமாக இருக்கும் என்று நம்பினேன். அந்த எண்ணம் வீண் போகவில்லை.

டைம்-அ எப்படி போக்கலாம்னு யோசிக்கும்போது, ஒரே மேகமூட்டம், சாம்பராணி வாசம் எங்க தாத்தா என் முன்னாடி வந்து 'எப்போதும் போல எது செய்வதற்கு முன்னாடியும் அதை தெரிஞ்சு செய்யனும்'னு சொன்னாரு. சட்டுன்னு மேகம் கலஞ்சுது. சரி நாம மாரத்தான் பத்தி தெரிஞ்சுபோம்னு நம்ம தலிவர் கூகுளை கூப்பிட்டேன். இப்போ கேள்வி பதிலை பார்ப்போம்.

காவி: மாரத்தான்-னா என்ன?அதுக்கு பேர் எப்படி வந்தது?
தலிவர்: சுமார் 42.195 கீ.மீ அல்லது 26.385 மைல் ஓட வேண்டும், இதில் யார் ஓட வேண்டுமென்பது முக்கியம் இல்லை. வெற்றி பெற வேண்டும் என்ற வெறியுடன் இருப்பவர் தொடங்கி, தொடக்கத்தில் எடுக்கும் புகைபடத்தில் முகம் வர வேண்டுமென்று நினைப்பவர் வரை எவரும் ஓடலாம், ஆனால் கூட்டத்தில் அவர் முகம் வரும் என்பதற்கு கியாரண்டி கிடையாது.
அதுக்கு ஏன் இந்த பேரு வந்துச்சுன்னா, முன்னொரு காலத்தில் கிரேக்க படை பெர்சியா படையை வென்றது, இதை அறிவிக்க ஒரு தூதுவன் மாரத்தான் என்னும் ஊரிலிருந்து பெர்சியா வரை நிற்காமல் ஓடிச்சென்று அங்கு மக்களவையில் தங்களது வெற்றியை அறிவித்து மயங்கி விழுந்து உயிரை விட்டான். அதிலிருந்து இந்த தலை தெறிக்க ஓடும் போட்டிக்கு மாரத்தான் என்ற பெயர் வந்தது. (பாவம் உயிர் விட்ட அந்த தூதுவனின் பெயரை வைத்து இருக்கலாம்). அவர் எவள்ளவு தூரம் ஓடினார் என்று எவருக்கும் தெரியவில்லை, ஆனால் மாரத்தான்-இன் தூரம் 1921-இல் தான் முடிவு செய்யப்பட்டது, அதற்கு முன்பு வரை தனக்கு தோன்றிய தூரமென போட்டி அமைப்பாளர் முடிவு செய்யலாம்.

காவி: சிகாகோ மராத்தானை பற்றி கொஞ்சம் சொல்லு தலிவா
தலிவர்: சிகாகோ மராத்தான் 1905-ல ஆரமிச்சாங்க. சிகாகோ downtown-ல தெருத்தெருவா ஓடுவாங்க. லேக் மிச்சிகன்-ல ஆரமிச்சு அப்படி, இப்படி போய் மறுபடியும் அங்கேயே வந்து முடிப்பாங்க. இந்த தடவ எங்க சுத்துராங்கனு நீயே மேப்ப பார்த்து தெரிஞ்சுகோ. இந்த தடவ இத பேங்க் ஆப் அமெரிக்க நடத்தறாங்க. முதல் ஆளு ரெகார்ட் முறியடிச்சா $100,000 தரதா சொல்லிருகாங்க. இதுக்கு மேல நேர்ல பாத்துக்கோ.

நன்றி தலிவா!!!

நாளைக்கு காலைல கிளம்பனும். அலாரம் வைப்போம், சரி ஒரு 5:30-க்கு அலாரம் வைப்போம்.

தேதி: அக்டோபர் 11
நேரம்: காலை 6:15

என்னதான் அலாரம் வெச்சாலும் நான் இந்த டைம்-க்கு தான் எந்திரிச்சேன். நம்ம தலைவருக்கு போன் பண்ணினால், அவர் அங்கு நின்று போட்டோ எடுத்துக் கொண்டிருந்தார். சீக்கரம் கெளம்பி வா என்ற அவரது ஆணைக்கு இணங்கி சடாரென கெளம்பினேன். அங்கு போய் அந்த கூடத்தில் அவரை தேடி கண்டுபிடிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.

அவர் எனக்கு எல்லாரும் ஓட ஆரமித்ததை சொல்ல ஆரமித்தார்.
'சும்மா பெரிய கூட்டம், நான் கூட ஓடலாம்னு நெனச்சேன்னு' சைக்கிள் கேப்புல, சரி பையன் என்ன சொன்னாலும் நம்புவான்னு அவருக்கு நெனப்பு. நானும் நம்பிட்டேன்.
'அதுவரைக்கும் நான் அவ்வளவு கூட்டத்த பாத்தது இல்ல, நாம அந்த பக்கமா போய் நின்னு அந்த ரோடு-ல வரும்போது போட்டோ எடுப்போம்'னு சொன்னாரு. நானும் போனேன். அதோட அவுட்புட்டை நீங்கள் இந்த போட்டோக்களில் பார்க்கலாம்.





'எவ்வளோ கஷ்டம் தெரியுமா, என்ன ஸ்டாமினா வேணும் தெரியுமா?' என்று அளந்து கொண்டிருந்தார்.
'இதெல்லாம் என்ன சித்தப்பு, நான் கூடதான் $2000 ஷூ, அங்க அங்க gatorade, இத்தன பேரு கைத்தட்டுனா ஓடுவேன். this is not that big, you know' என்றேன்.
நீங்களே சொல்லுங்க இத்தன வசதி இருந்த ஏன் ஓட மாட்டாங்க. நம்ம ஊருல வசதி கம்மி, நம்ம ஊருல உட்ட நாம கிராமத்து பசங்கலாம் சாதரணமா ஓடுவாங்க. infrastructure, facility நம்ம ஊருல இல்ல, அதுதான் மேட்டர்.
சிலபல போட்டோகளை எடுத்துவிட்டு, நாங்கள் முடிவடையும் இடத்திருக்கு வந்தோம். அங்க ரெண்டு பேரு பேசிட்டு இருந்தாங்க. நம்ம ஒலிம்பிக்ஸ் சாம்பியன் சாமி வாஞ்சிறு வந்துருக்கார், அவருதான் அந்த $100,000 வாங்க போறாருன்னு. நமக்கா, என்னடா பேரு சாமி வாஞ்சிறு-ன்னு... சாமியவே திட்ட சொல்லி பேரு வச்சுருக்காங்க அப்படினு போட்ட மொக்கைக்கு சிரிக்கும் முன்னரே.
'வராங்க.. வராங்க..' கார்கில் எழுப்பினார்.
'எங்க..எங்க..' என்று நான் வினவ. அங்கு நம்மாளு சும்மா கூலா கைய ஆடிட்டு வந்துட்டு இருந்தாரு.
'யோவ், சீக்கரம் வாயா, அவனவன் நீ $100,000 வாங்கரயானு பாக்க வந்துருக்கான். நீ என்னடான மெதுவா ஆடி அசஞ்சு வர.' என்று சத்தமாக திட்டினேன்.
04......
03.....
02....
நம்ம ஆளு சட்டுன்னு உள்ள பூந்து ஒரு செகண்ட்-ல $100,000 -அ தட்டிட்டு போய்ட்டான், குடுத்துவச்சவன் மாதிரி.
இன்னும் நான் சொல்லிட்டு இருந்தேன். என்ன இருந்தாலும் இவளோ facilities இருந்த யார் வேணாலும் ஓடலாம். அப்படி சொல்லிட்டு திரும்பி வரும்போதுதான் நம்ம வாழைப்பழ காமெடி நடந்தது.

இதுல இன்னொரு சிறப்பு என்னன்னா, பெண்களுக்கு தனி தூரம். பள்ளிகூட மாணவர்கள் கூட ஓடினார்கள். இங்க வந்தபோதுதான், மராத்தான்-ல ஓடி பல பேரு செத்துபோயிருக்காங்க-ன்னு கேள்விப்பட்டேன். எனக்கு உடனே நாம மராத்தான் தூதுவன் ஞாபகம் வந்தது. ஒருவேளை எல்லா போட்டியிலும் அவன் ஆவியா வந்து ஒரு உயிரை கொண்டுபோரானோ-ன்னு எனக்கு சந்தேகம். இந்த ஈரம் படம் பாத்ததுல இருந்தே இப்படித்தான்.

இப்படி சும்மா சும்மா நான் இது இல்ல அது இல்லன்னு பேசிட்டு வந்துட்டு இருக்கும்போது, எதுவும் தேவை இல்ல, மனசு இருந்த போதும். அத்தோட உழைப்பும் சேர்ந்தால் எதிலும் வெற்றி பெறலாம் என்று நிரூபித்தார் ஒருவர். அவர் போட்டோ கீழே.


பி.கு: நான் செய்த இத்தனை torture-களுக்கு நடுவிலும் இவ்வளவு போட்டோக்களை அங்கும் இங்கும் தொங்கி தொங்கி எடுத்த நம்ம கார்கில் ஜெய்... ரெம்பா நல்லவர்ர்னு உங்களுக்கு சொல்லிக்கறேன்


Friday, October 23, 2009

வாழைப்பழ காமெடி

சமைக்கரத்துக்கு முன்னால கழுத ஒரு பதிவ போட்டுட்டு போயிடலாமேன்னு பாத்தேன்.
இது நம்ம சிகாகோ மராத்தான்-ல நடந்த காமெடி.

எல்லாரும் ஓடி முடிக்கற எடத்துல வாழைப்பழத்த சும்மா மலை மாதிரி குவிச்சு வெச்சுருந்தாங்க. அட பாக்க வந்த நமக்குத்தானோனு நம்ம்ம்பி பொய் எடுக்க பாத்தேன். உடனே அங்க இருந்த ஒரு ஆளு, this is only for runners அப்படினு சொன்னாரு. உடனே நம்ம மண்ட மேல ஒரு பல்பு எரிஞ்சுது, Don't lie, I saw even winner eating a banana என்றேன். அப்படியே எரிக்கற மாதிரி ஒரு பார்வை பாத்துட்டு, ஒரு வாழைபழத்தால அடிச்சாரு. அத அப்படியே அல்லேக்க கேட்ச் பிடிச்சு அப்பா வந்த வேல நல்ல படிய முடிஞ்சுதுன்னு நடைய கட்டினேன்.

சிகாகோ மராத்தான்-ஐ பற்றிய விரிவான பதிவு அச்சில் உள்ளது. விரைவில் வெளிவரும்.


ஆஹா வந்துருச்சு!!!

"வானம், நிலா, நீலம்...."
"பூ, வண்ணம், வண்டு, தேன்....."

அட சே, நமக்கு காதல் வந்தாச்சு ஆனா கவித வர மாட்டேங்குதே. அது சரி, பல்லு இருக்கவன் பக்கோடா சாப்பிடுவான், நம்ம அதெல்லாம் ட்ரை பண்ண முடியுமா? மேட்டர்-க்கு வருவோம். நம்ம அழகிய தீயே படத்துல சொல்ற மாதிரி எனக்குள்ளயும் பூம் வந்துருச்சு. அவ அவ்வளோ அழகு, எவ்வளோ அழகுன்னா, அவ்வளோ அழகு. அவள வடிச்சவனே நான்தானே. கற்பனையா பூ.. அப்படினு துப்பிட்டு browser-அ க்ளோஸ் பண்ணாதீங்க. உண்மையாத்தான் சொல்றேன்.

ரெண்டு வரில தான் பேசிட்டு இருந்தா, நான் அவள மூணு வரில பேச வச்சது நான். எனக்கு பிடிச்சவங்கள மத்தவங்களுக்கு தெரிய வைக்கணும்னு நெனச்சேன் அதுக்கு வழி செஞ்சது அவதான். என்ன யார் யார்க்கு பிடிக்கும், என் எழுத்து யார் யார்க்கு பிடிக்கும்னு சொல்றதும் அவதான். அவளுக்கு பாட்டுனா ரொம்ப பிடிக்கும், அதனால பாட்டு சொல்லி தர FM மூலமா டீச்சர் செட் பண்ணிருக்கேன். நான் எழுதுனது எனக்கே மறந்தாலும் அவ ஞாபகப் படுத்துவா. இதுக்கு மேல ஒருத்தனுக்கு என்னங்க வேணும்.அவ போதும்ங்க எனக்கு. அவள பாத்துகரதுதான் என் வாழ்க்கைல முதல் லட்சியம்.

அவ பேரு... அவ பேரு... ஐயோ வெக்க வெக்கமா வருதே!!!!... அவ பேருதாங்க ஜிகர்தண்டா. இப்போ என் லவ்-க்கு சாங் dedicate பண்ணிருக்கேன், அதைத்தான் கேளுங்க, ப்ளே பட்டன பிரஸ் பண்ணுங்க.




Wednesday, October 21, 2009

கல்லூரி வாழ்க்கை -1

கல்விக்கு வயது ஒரு தடை இல்லை என பலர் சொல்லி கேள்விப்பட்டிருக்கோம். அதை நான் இங்கு நேரில் பார்த்து வருகிறேன். இங்கே வருகையில் என்னமோ நாமதான் பெரிய வேலைக்காரன் மாதிரியும், பல நாள் வேல செஞ்சுட்டு வந்த மாதிரியும் இந்த சின்ன பசங்க கூட எப்படி படிக்க போறேனோன்னு ஒரு பீலிங் எனக்கு இருந்தது. இங்கு வந்து பார்த்தால் தான் தெரியுது, என்னுடன் படிக்கும் சிலருக்கு எங்கள் ப்ரொபசரை விட வயது அதிகம். அந்த அங்கிள் கூட படிக்கும் போதும் அவர்கள் நிஜ வாழ்க்கையில நடந்த விஷயத்தை அலசும்போதும், அட இப்படியும் பண்ணலாமோ என்ற எண்ணம் நமக்கு வரும். அதை எதிர்பார்த்துதானே நான் இங்கு படிக்க வந்தேன்.

அதுசரி நான் மட்டும் படித்தால் போதுமா நம்ம ஐடியா-வை எதிர்நோக்கி நமது நண்பர் கூட்டமே காத்துக் கெடக்குதே. அதுவும் இங்கே நான் படிக்க வந்து மூன்று மாதங்கள் ஆச்சே, கண்டிப்பாக எனது எண்ணங்களை எழுதும் நேரம் வந்துருச்சு எனது பொதுச் சேவையை தொடங்குகிறேன். முதலில் எனது நான்கு ப்ரொபசர்களை பற்றியும், வகுப்புகளை பற்றியும் எழுதுவோம், அப்பறம் இங்க என்ன நடக்குதுன்னு எழுதலாம்னு நினைக்கறேன். எதாவது மாற்றம் வேணும்னா சொல்லுங்க பண்ணிரலாம். சரி நாம கிளாஸ் ஸ்டார்ட் பண்ணலாமா?

முதலில் நான் நமது இந்தியாவிலும் இங்கும் கல்லூரியில் காணும் வித்தியாசம் என்னன்னா, வகுப்பின் முதல் நாளே எந்த வாரம் என்ன நடத்த போகிறார் என்பதை பேராசிரியர் கொடுத்துவிடுவார். எந்த வாரம் என்ன assignment செய்யவேண்டியது என்பதும் அதில் அடங்கும். அதை பாலோ பண்ணலே போதும் நமக்கு எல்லாம் விளங்கீரும். பார்த்த உடன் ஆச்சிர்யம் தாங்கவில்லை. சே சப்ப மேட்டர்-ன்னு நெனச்சேன் ஆனா மெய்யாலுமே கஷ்டம்தாங்க.நம்ம சிவாஜி-ல சொல்ற மாதிரி 'ச்ற்றிக்டு...ச்ற்றிக்டு...ச்ற்றிக்டு..' எங்க காபி அடித்தாலும் நம்ம சாமி விக்ரம் மாதிரி பாத்த எடத்துலயே சுட்ருவாங்க. சும்மா மிலிடரி ஆபிசர் கணக்கா கரெக்ட் டைம்க்கு கிளாஸ்-க்கு வருவாங்க. சொன்னத முடிப்பாங்க. போய்ட்டே இருப்பாங்க. உன் பேரு என்ன? உன் ஊரு என்ன-ன்னு நம்ம ஊரு காலேஜ்ல கேக்கற மாதிரி டைம் வேஸ்ட் பண்ண மாட்டாங்க. படி, எழுது, போய்டே இரு. அவளோதான் இவங்க பாலிசி.

இந்த செமஸ்டரில் நான் நாலு பாடங்களை எடுத்துருக்கேன். முதலில் எனக்கு வயிற்றில் புளியை கரைக்கும் Financial accounting, அடுத்தது எல்லார் வயிற்றிலும் புளியை கரைத்துக் கொண்டிருக்கும் Economics, மூன்றாவதாய் Organizational Behavior, கடைசியாய் நம்ம Marketing.

முதலில் நம்ம accounting-அ பாப்போம்.

நம்ம ப்ரொபசர் பேரு ஹாமில்டன். (உடனே F-1 ரேசர் மாதிரி வருவாருன்னு நினைக்காதீங்க, சும்மா சட்டைல முதல் பட்டன கழட்டிவிட்டு வருவாரு) அவரு பல கம்பெனி-ல CFO வா இருக்காரு. கணக்கு வழக்கு தெரியாமல் செலவு பண்ணிய எனக்கு எதை எப்படி செய்யவேண்டும் என்று சொல்லித்தந்தார் இவர். இவர் டீலிங் எனக்கு பிடித்து இருந்தது. சிறு குழந்தை கூட இவரிடம் பாடம் கற்றால் accounting பண்ண ஆரமித்துவிடும்.

இந்த வகுப்பிற்கு முன்னர் credit/debit என்றால் எனக்கு கார்டு ஞாபகம்தான் வரும். இப்போதுதான் அதன் அர்த்தமும் அதை எப்படி உபயோகிப்பது என்றும் தெரிகிறது. என்னதான் வயசானாலும் திங்கக்கிழமை காலைல ஸ்கூல் போனும்னா கஷ்டம்தான். அரைகுறை தூக்கத்துல எழுந்து, ஒரு காக்கா குளியலை போட்டுட்டு கிளாஸ்-க்கு போன நம்மள நித்ராதேவி அப்போதான் தேடி வருவாங்க. சரஸ்வதியும் நித்ராவும் நண்பிகள், சேர்ந்தே இருப்பாங்க. ஆனா, அந்த நித்ரதேவிய சும்மா அடிச்சு வெரட்டுற மாதிரி கிளாஸ் எடுப்பாரு. நல்ல வாத்தியார்.

பரிட்சைல சின்ன சின்ன தப்பு பண்ணினா க்ளோஸ், யோசிக்கவே மாட்டாரு மொத்த கிளாஸ் முன்னாடி மானத்த வாங்கிடுவாரு. இத சொல்றதாலே, எங்க என் மானம் போயிடுச்சோன்னு நீங்க நினைக்கலாம், சே சே நாம எஸ்கேப் ஆயிட்டோம் இல்ல.

மற்ற கல்லூரிகளில் accounting வாத்தியார் பற்றி தெரியாது, என்னை கேட்டால் இவர் சொல்லித்தருவது மிக மிக அதிகம்.

மொத்தத்தில் ஹாமில்டன் 'ஹோ'மில்டன்

இவரைப் பற்றிய மேலும் விவரங்களுக்கு
http://www.stuart.iit.edu/about/faculty/charles_hamilton.shtml


அடடா, மணி அடிச்சுடாங்களே, சரி அடுத்த கிளாஸ்-ல பாப்போம். (தொடரும்)


Friday, October 16, 2009

தீபாவளி நல்வாழ்த்துக்கள்

வந்துருசுய்யா தீபாவளி.
பட்டாசுகளுக்கு அக்காவுடன் சண்டை போட்ட தீபாவளிகள், புத்தாடை வேண்டி அப்பா அம்மாவுடன் சண்டை போட்ட தீபாவளிகள், பிகர் நோக்க நண்பருடன் சண்டை போட்ட தீபாவளிகள், படம் பார்க்க வரிசையில் சண்டை போட்ட தீபாவளிகள். இந்த முறை எல்லாம் இருக்க, சண்டை போட அருகில் யாரும் இல்லை. என்ன கொடும பாத்தீங்களா?

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். இந்த தீபாவளியும் எல்லா தீபாவளி போல் உங்கள் வாழ்வில் மங்களம் பொங்க வைக்கட்டும்.


Wednesday, October 14, 2009

படிப்பதெல்லாம் நல்ல ப்ளாக் அல்ல

எனது கம்ப்யூட்டரில் இது வரையில் rss owl மூலம் பல ப்ளாக்களை தொடர்ந்து வந்தேன். முன்னெல்லாம், கூகிள் ரீடர் உபயோகித்தேன், அது சரிப்படவில்லை. rss owl அது அப்டேட் செய்துகொண்டே இருக்கும், உடனுக்குடன் பார்க்கலாம். நல்ல விஷயங்களுக்கு அது சரி, மற்றதற்கு.

விஷயம் என்றதும் என் நினைவிற்கு வருகிறது, விஷயத்திற்கு வருவோம். ப்ளாக்களை நான் தொடர்வதால் எப்போதும் ஏதாவது ஒரு ப்ளாக் அப்டேட் ஆகும்.
பல சமயங்களில் எனது படிப்பை அது கெடுத்துள்ளது. ஏதாவது அப்டேட் வந்தால் முதலில் அதைத்தான் படிப்பேன். அது எனக்கு சரியாகப்படவில்லை. ஒரு நாள் முழுவதும் அடுத்தவர் எழுதுவதை படிக்கிறோமே, எது தேவை என்று அறிந்து படிக்கிறோமா? என்று எனக்குள்ளே ஒரு கேள்வி கேட்டேன், பதில் தெரியவில்லை, ஏனென்றால் நான் அப்படி பாகுபடுத்தி பார்ப்பது இல்லை. எல்லாவற்றையும் படிப்பேன்.

இந்த வாரம் ஒரு முடிவு எடுத்து பல ப்ளாக்களை எனது கம்ப்யூட்டரில் இருந்து தூக்கி எறிந்துவிட்டேன். அதற்கு நான் சில காரணங்கள் வைத்து தூக்கி எறிந்தேன்.

முதலில், கெட்டவார்த்தைகள் அதிகம் பயன்படுத்தியவை. மனதில் நல்லவையே நினைக்கவேண்டும் என்று சொல்லிவிட்டு, படிப்பது கெட்டவயாக இருக்கக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில். கெட்ட வார்த்தை பயன்படுத்துபவர், கண்டிப்பாக கோபத்தில் ப்ளாக் எழுதியிருப்பார். கோபத்தில் பேசுவதை கேட்கவும் கூடாது. கோபத்தில் எழுதுவதை படிக்கவும் கூடாது.

இரண்டாவது, காமம் தலை தூக்கிய பதிவுகள் கொண்ட வலைப்பூ. காமம் என்பது விளையாட்டு பொருள் அல்ல, அதை அனைவருடனும் பங்கிட்டுக்கொள்ள. இவர்கள் காமத்தை வெறும் உடல் இச்சை என்று பார்பவர்கள். எனவே, அதற்கு அடுத்த கெட் அவுட்.

மூன்றாவது, தான் பெரிய எழுத்தாளன் என்று ஒன்றிரண்டு வலைபதிவாளர் சொன்னவுடன், தன் கதையை அனைவரும் படிக்கவேண்டுமென்ற ஆர்வத்தில் எழுதுபவர்கள். ஒரு சில கதைகள் நன்றாக இருந்தாலும், பல கதைகள் சரியாக இருக்காது. அதனால் மூன்றாவது கெட் அவுட்.

மேற்சொன்ன காரணத்தால்தான் நான் என் வலை பூவை மிக சிலருக்கு மட்டும் சொல்லுகிறேன். பலருக்கு இது பிடிக்காமல் போகலாம், மற்றவர் நேரத்தை வீணடிக்க நமக்கு அனுமதி இல்லை.

இதனால் உங்களுக்கு சொல்லுவது என்னவென்றால், எது நல்ல ப்ளாக் என்று நினைகிறீர்களோ அதை மட்டும் தொடருங்கள். மற்றதை இன்றே தூக்கி எறியுங்கள்.

அடடா பாத்தீங்கள என் மடியிலே கை வைக்கறீங்க, என்னோடது நல்ல ப்ளாக் பா.


Sunday, October 11, 2009

உள்ளம் இறங்கிவிடய்யா முருகா!!!

என்ன ஒரு பக்தி , முருகனே நேரில் வந்து விடுவானே இப்படி பாடினால்.
ராகம்: நீலமணி
எழுதியவர்: அனயம்பட்டி ஆதிசேஷய்யர்

அருணா சாயிராமிடம் பிடித்தே தமிழ் பாடல்களை அவர் மார்கழி மகா உற்சவத்தில் பாடுவது. எளியோருக்கும் புரியும் வகையில் இருக்கும் பாடல்கள்.


Friday, October 09, 2009

காந்திக்கு நோ பல்

காந்தியை பற்றி பேசினாலே நோபல் பரிசு தராங்களாம். அப்படி பாத்தா நம்ம சஞ்சய் தத்க்குதான் நோபல் பரிசு தரணும். நெல்சன் மண்டேலா, தலாய் லாமா இப்போ நாம ஒபாமா. எல்லாரும் காந்திய பாலோ பண்றவங்க.

அது சரி காந்திக்கு நோபல் பரிசு. அவருக்கு ஏற்கனவே 'நோ பல்', அதனால விட்டுட்டாங்களோ. கடவுளுக்குதான் வெளிச்சம்.


Wednesday, October 07, 2009

நம்ம ஊர்க்காரர் ஒருத்தர் நோபல் பரிசு வாங்கிட்டார்

நோபல் பரிசு வாங்கும் மூன்றாவது தமிழர்,
சந்திரசேகர வெங்கடராமன் - 1930
சுப்ரமணியன் சந்திரசேகர் - 1983
வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் - 2009

ஆனால், அவர் அமெரிக்க குடிமகன். எங்க இருந்தா என்ன தமிழர் அவளோதான்.

இதில் வெங்கட்ராமன் சந்திரசேகர் என்ற பெயர் சுற்றி சுற்றி வந்துள்ளது. அடுத்து யாருக்கு மகன் பிறந்தாலும் இந்த பெயரை வைக்குமாறு கேட்டுகொள்கிறேன். மொத்தம் வாங்கிய ஏழில் மூன்று தமிழர்களுக்கு என்று கூறும்போது, ஒரு தமிழனாக எனக்கு பெருமையாகதான் உள்ளது. உங்களுக்கும் இருக்கும் என நம்புகிறேன்.

பதிவு போட்டால் மட்டும் போதுமா அவர் எதுக்கு நோபல் பரிசு வாங்கினாருன்னு தெரிய வேணாமா. மேம்போக்கா சொல்லனும்னா, நமது உடலில் இருக்கும் ribosome-களின் அமைப்பை கண்டுபிடிப்பதுதான் அவரது ஆராய்ச்சி. அதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் உடலை பற்றிய இன்ன பிற விவரங்களை அறியலாம்.


Tuesday, October 06, 2009

தமிழ் படமெல்லாம் ரீமேக்

இதை படித்த உங்களுக்கே இவ்வளவு அதிர்ச்சியா இருக்குன்னா, இதை கேட்ட எனக்கு எவ்வளவு அதிர்ச்சியா இருக்கும். மேலே படியுங்கள் கதையை.

நானும் என் நண்பரும் இன்று மாலை University of Chicago Booth School of Business -இல் நடந்த ஒரு Innovation பற்றிய கருத்தரங்கிற்கு சென்றுவிட்டு வந்து கொண்டிருந்தோம். என் நண்பர் பெங்களூர்க்காரர், தமிழ் நன்றாகவே பேசுவார், நம் பீட்டர் மணி போல் இல்லை. Innovation பற்றி பேசிக்கொண்டு வந்த போது, பேச்சு திசை மாறி மீடியா சினிமா என்று போனது. அவர் பொசுக்கென்று 'தென்னாட்டில் எல்லா படங்களும் ரீமேக்தான்' என்றார்.

அதற்கு பின் நடந்த உரையாடல் இதோ.
' என்ன கன்னட படங்களை பற்றி சொல்லுறீங்களா' - நான்.

' இல்ல தமிழ், தெலுங்கு, கன்னடம் எல்லாமே' என்றார்.

'Excuse me, எத வெச்சு அப்படி சொல்லறீங்க' என்றேன்.

'நான் பார்த்த படம் எல்லாமே அப்படிதான்'

'என்ன படம் பாத்தீங்க?'

'சந்தோஷ் சுப்ரமணியம், சம்திங் சம்திங், கில்லி' என்று என்னால் மறுக்க
முடியாத சில படங்களை சொல்லிக்கொண்டே போனார்.

'நீங்க தப்பான லிஸ்ட் படங்களை பாத்துருகீங்க. அன்பே சிவம், விருமாண்டி, பருத்தி வீரன், சுப்ரமணியுரம்' என்று நான் என் தரப்பு படங்களை சொன்னேன்.

'தெரில அதெல்லாம் பாத்தது இல்ல நான் பார்த்த வரைக்கும் this is my opinion' என்றார்.

'அப்போ நீங்க தமிழ் படமே பார்க்கல' என்று கூறிக்கொண்டிருக்கும் வேளையில் எங்கள் ஸ்டாப் வந்துவிட்டது.

ஒரு ரீமேக் குடும்பத்தால தமிழ் படங்களின் பார்வையே சில இடங்களில் வேறு மாதிரி உள்ளது. ஆனால் மகிழ்ச்சி அடைய வேண்டிய விஷயம் என்னவென்றால் பலர் தமிழ் படங்களின் மீது நல்ல அபிப்பிராயமும் கொண்டுள்ளனர். இதுக்கு நாம என்ன செய்ய முடியும். ஏதாவது நல்ல படம் வந்த டவுன்லோட் பண்ண லிங்க் அனுப்பலாம் அவ்வளவுதான்.:)


Sunday, October 04, 2009

தமிழன் அடி வாங்குறான்

இதுவரையில் காலேஜ்-இலும் சரி, வேலை பார்க்கும் போதும் சரி. நமக்கு தெரிஞ்ச தமிழ் பேசும் பசங்களோட இருந்துட்டு. இப்போ சுத்தி பாக்கற பக்கமெல்லாம் வா ஹை போ ஹை தான். தமிழ் நாட்டுல இருந்து நாம வரதுக்கு முன்னாடியே, வட நாடுலிருந்து நானூறு பேரு வந்துட்டாங்க. 'க்யா கொடுமை ஹை சரவணன் ஜி'

நம்ம ரூம்-ல ரெண்டு பேரு, பீட்டர் மணியும், அல்போன்ஸ் ராஜும். பீட்டர் மணி பெங்களூர், சென்னைல கொஞ்ச நாள் வேல பாத்தானாம். தமிழ் பேசறேன்னு சொல்லுவான், பேசினா லக்கி மேன் கௌண்ட மணி பாம் மென்னு துப்பர மாதிரி பேசுவான். ஆனா பய புள்ள தப்பாதான் பேசறேன்னு ஒத்துப்பான்.

அல்போன்ஸ் ராஜ், மும்பைல இருந்து வந்தவன். தமிழ் பேசணும்னு அவனுக்கு ஆசைன்னு சொன்னான். 'டேய், கார்த்தி பின்னிட்ட ஒருத்தன் நீ பேசறத பாத்துட்டு தமிழ் கத்துக்கணும்னு ஆச படறான்' என்று நான் எனக்கே தோள் தட்டிக்கொள்ளும் போதே, 'Teach me few bad words man' என்றான். தட்டிய கைகள் அப்படியே நின்றன. அது என மாயமோ எனவோ தெரில, வட நாட்டு பசங்க தமிழ் கத்துக்கணும்னா, முதல்ல கெட்ட வார்த்தைதான் கேக்கரனுங்க. சொல்லி தந்தா முதல நம்மலதான் திட்டுவானுங்க. எத்தனையோ முறை வாங்கிய திட்டுக்கள், மாணவ பருவத்துல இதெல்லாம் சகஜமப்பா.

நம்ம ரூம்லதான் தமிழ் பேச முடியறதில்ல, நாம நட்பின் சிகரங்களுக்கவது போன் பண்ணலாம்னா. பெரிய அறிஞர் அண்ணா ரேஞ்சுக்கு கடமை கண்ணியம் கட்டுப்பாடுன்னு இருப்பாங்க. 'டேய் மீடிங்க்ல இருக்கேன் அப்பறம் கூப்பட்றேன்னு' வாய்குள்ள போன விட்டு பேசுவாங்க, இல்லாட்டி அவன் வாய்ஸ் மெசேஜ் கூட பேச வேண்டியதா இருக்கும்.

இதுல வீட்டுக்கு கூப்படலாம்னு என் போன்-ல இருந்து try பண்ணேன். வெள்ளைகாரி ஒருத்தி 'this facility is not available' அப்படினு சொல்றா. ஏதோ english தெரிஞ்சதால, (என்ன சிரிக்கற மாதிரி தெரியுது?) பொழச்சிட்டு இருக்கேன்.

இயக்குனர் சீமான், நீங்க சொன்னதுல தப்பே இல்ல, தமிழன் எங்க போனாலும் அடி வாங்குறான்.

PS: நாளைக்கு பரீட்சை இனிக்கு ப்ளாக் எழுதறேன்னா, எவளோ அடி பட்டிருபெனு நெனச்சு பாருங்க.


Related Posts with Thumbnails

blogger templates | Make Money Online