Thursday, December 09, 2010

செம்ம அடி...

அடின்னு சொன்னாலே நம்ம வெத்தலை பாக்கு தமிழைய்யா பசங்கள துரத்தி துரத்தி டஸ்டர்ல அடிப்பார், அதுதான் ஞாபகம் வரும். அவரு கிளாஸ்க்கு வரதே தமிழ் சினிமா போலீஸ் மாதிரி கடைசி பத்து நிமிடங்கள்தான், அதுல இந்த காமெடிலாம் நடக்கும். இது மாதிரி ஒவ்வொரு வாத்தியார் ஒவ்வொரு மாதிரி அடிப்பாங்க, சோஷியல் வாத்தியார் ரெண்டு கையாலும் எழுதுவார், அடிப்பார் - தெளிய வெச்சு தெளிய வெச்சு அடிப்பார். எல்லா நாளும் மதியம் சாப்பிட்டதும் படிக்கணும், இல்லாட்டி ரவுண்ட்ஸ் வரும் நம்ம இஞ்சி இடுப்பு வாத்தியார் குச்சி வெச்சு மண்டையில அடிப்பார். சும்மா உக்காந்தாலே தூக்கம் தள்ளும், இதுல சாப்பிட்டு உக்காந்தா... எப்படியோஅவர் வரும்போது மட்டும் இரண்டு வரிகளை திரும்ப திரும்ப சொல்லி படிப்பது போல் நடிக்க வேண்டியிருக்கும். அதுவும் ஆண்கள் மட்டும் படிக்கும் பள்ளிக்கூடமா, கேட்கவே வேண்டாம் பசங்களுக்கு சராமாரியா திட்டு விழும், பசங்களும் ஏதோ சிம்ரன் (அப்போ சிம்ரன் தான் ஃபேமஸ்) வந்து ஐ லவ் யூ சொன்ன மாதிரி இளிச்சிகிட்டு நிப்பாங்க.


அடிகள் ரெண்டு வகைப்படும், ஒன்னு முதலில் சொன்ன துடைச்சுவிட்டு போகும் சும்மா அடி, இன்னொன்னு, நான் சொல்லப் போகும் செம்ம அடி. செம்ம அடிங்கறது, மெண்ட்டலி பாதிக்கக் கூடிய அடி. இது வாங்கினால் சுலபத்தில் அழியாது. கடந்த வாரத்தில் இது போல இரண்டு விஷயங்கள் நடந்தது.

கிரிக்கெட் என்றாலே தாங்கள்தான் என்று மார்த்தட்டிக் கொண்டிருந்த ஆஸ்திரேலிய அணியை தற்போது முழு வேகத்தில் இயங்கும் இங்கிலாந்து அணி துவம்சம் செய்தது. ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சில் எங்கள் தெருவில் இருக்கும் வெங்கிட்டு தாத்தா வாக்கிங் ஸ்டிக்கால் சிக்ஸர் அடிப்பார். அவ்வளவு மோசம், கடந்த இரண்டு இன்னிங்ஸில் ஆறு விக்கெட் மட்டுமே எடுத்து கிட்டத்தட்ட 1150 ரன்கள் கொடுத்துள்ளனர். நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் ஓய்வு பெற்ற வார்னே மீண்டும் வரலாம் என்று பேச்சு எழுந்த்துள்ளது. இந்த நிலைமை நீடித்தால் டான் பிராட்மேன் கல்லறையிலிருந்து எழும் நாள் வெகு தூரத்தில் இல்லை. இதன் மூலம் என்ன தெரிகிறதென்றால், ரிக்கி பாண்டிங் ஒரு மொக்க கேப்டன், அவர் டீமில் இருந்த ஆட்கள் அவரை இவ்வளவு நாள் காப்பற்றி வந்துள்ளனர் என்பது உறுதியாகிறது. என்னதான் இன்னும் மூணு மேட்ச் இருக்குன்னாலும், ஆஸ்திரேலியா இதிலிருந்து வெளியே வருவது கஷ்டம்தான். தங்களுக்கு சாதகமாக பிட்ச் தயார் பண்ண சொல்லி அதில் செம்ம அடி வாங்கும் ஆஸ்திரேலிய அணியைப் பார்த்தா ஒரு வரி சொல்ல வேண்டும்... ‘வாட் அ பிட்டி...’

இன்னொரு மிக முக்கியமான சம்பவம். அமைதிக்கான நோபல் பரிசை இந்த முறை சீனாவைச் சேர்ந்த லியூ ஃசியாவ்போ என்பவர் பெற்றுள்ளார். அவர் ஜனநாயகத்திற்கு சாதகமாக எழுதிய கவிதையால் அவரை சிறை வைத்தது கம்யூனிச சீனா. அவருக்கு பரிசளித்ததையும் கண்டித்தது. அத்தோடு நில்லாமல், ஏதோ எனக்கு உடம்பு சரியில்ல அதனால பள்ளிக்கு லீவ் விடுங்க என்பது மாதிரி. யாரும் அந்த பரிசளிப்பு விழாவிற்க்கு செல்லக்கூடாது என்று சத்தம் போட்டு கத்தியது. இதனால் பாகிஸ்தான், வியட்னாம் போன்ற நாடுகள் செல்வதில்லையென முடிவெடுத்தது. இந்தியா என்ன செய்யும் என்று பலர் எதிர்பார்த்து காத்திருந்தனர். இதுவரையில் முதுகெலும்பு இல்லாமல் இருந்த இந்தியா முதல்முறையாக நிமிர்ந்து நின்று கண்டிப்பாக செல்வோம் என்று சொல்லியுள்ளது. குட்ட குட்ட குனிவார்கள் என்று எதிர்பார்த்த சீனாவிற்கு இது செம்ம அடி. அடுத்து என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். எங்கயாவது சீனா நமக்கு செம்ம அடி கொடுக்க போகுது... :)

நம்ம ரெண்டு அடியையும் பார்த்தச்சு, இன்னையோட பரிட்சை முடிஞ்சது வாத்தியார் செம்ம அடி கொடுக்கக் கூடாது... பார்ப்போம்...


Monday, December 06, 2010

சுடச்சுட பாடல்

இந்த காலத்துல நம்பி நல்ல பாட்டுன்னு ஒரு பாட்டு கேட்க முடியரதில்ல. நேற்று ‘வ குவாட்டர் கட்டிங்’ படத்தின் பாடல்களை கேட்டுக் கொண்டிருந்தேன். ’தேடியே..’ பாடல் நல்ல இருக்கேன்னு யூட்யூபில் தேடினேன். அப்போதான் தெரிஞ்சது அது சுட்ட பாடலென்று... அப்புறம்தான் இசையமைப்பாளர் யாருன்னு பார்த்தா நம்ம GV... அதாங்க தேவா இல்லாத குறைய தீத்து வைக்க வந்திருக்கும் வரப்பிரசாதம். சும்மா மரண காப்பி... இங்க கேளுங்க...


யூட்யூப் அது இதுன்னு இன்னிக்கு எப்படியோ மக்கள் கண்டுபுடிக்கறது தெரிஞ்சும் நம்ம GV சுட்றார்ன்னா.. அவர் தன்னம்பிக்கையை பாராட்டியேயாக வேண்டும். எதோ அந்த காலத்தில் தேவா மைக்கல் ஜாக்சனிடமிருந்து கொஞ்சம் ஆறிப்போன டீ, ஊசிப்போன வடை அந்த மாதிரி சுடுவார் மக்களுக்கும் தெரியாது, ஆனா நம்ம புள்ள சுடச்சுட போட்ற பணியாரத்த ஆட்டைய போட்றார்.

ஆயிரத்தில் ஒருவன் படத்துல ’உன் மேல ஆசதான்...’ பாட்டு சர்வம் படத்தின் ‘அடடாவா அடிக்கலாம்..’ மாதிரி இருந்தது. இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் படத்திலும் சரி ஆயிரத்தில் ஒருவனிலும் சரி ’பைரேட்ஸ் ஆஃப் கரீபியன்’ பின்னணி சரமாரியாக தெரிந்தது. இது எல்லாம் தெரிந்தும் அவருக்கு எதுக்கு சான்ஸ். சினி ஃபீல்டில் இருக்கும் கேபிள் சார் மாதிரி ஆட்கள் பதில் சொன்னால் நன்றாக இருக்கும்.
இதே போல யுவனும் வாமனன் படத்தில் ‘ஒரு தேவதை..’ பாடலை ஆஜா நச்லே படத்தில் வரும் ‘ஒரே பியா..’ என்னும் பாடலை தழுவி இசையமைத்திருப்பார். அதுவும் ஒரு சுடல்தான்.இதை இங்கே கேளுங்கள்.

எனக்கு தெரிஞ்சு நியாயமான இரண்டு இசையமைப்பாளர்கள், ஹாரிஸ் ஜெயராஜ் மற்றும் DSP - அவர்களது இசையை மட்டுமே காப்பியடிப்பார்கள். எப்போதும் ஹாரிஸ் ஜெயராஜின் பாடல்கள் ஒரே மாதிரிதான் இருக்கும்.

இப்படி ஆளளுக்கு சுட்டு சுட்டு பாட்டு போட்டா ஒரு மனுஷன் நம்பிக்கையோட ஒரு பாட்டு கேட்க முடியரதில்ல... இதுக்கு என்ன பண்ணலாம்.

டிஸ்கி: ’ஓரே பியா..’ பாடிய ராஹத் ஃபதே அலி கான், நுஸ்ரத் ஃபதே அலி கானின் சகோதரரின் மகன். முடிந்தால் அவரது அனைத்து படப்பாடல்கள் மற்றும் கவாலி பாடல்களை கேட்டுப் பாருங்கள்.


Related Posts with Thumbnails

blogger templates | Make Money Online