Wednesday, November 24, 2010

என் இனிய தமிழ் மக்களே....

உங்கள் பாசத்திற்க்குறிய ஜிகர்தண்டா பேசுவது... என்னடா வலையுலக சிட்டுக்குருவி காணாமப்போச்சே என்று வருத்தப்பட்டவர்களையும், சீறிவந்த சிங்கம் செத்துப்போச்சே என்று சந்தோஷப் பட்டவர்களுக்கும் ஒரு விஷயம்... ஜில் ஜில் ஜிகர்தண்டா இங்க குளிர் தாங்க முடியாமல், தமிழக மக்களை மகிழ்விக்க இந்தியா வருகிறார்...


மன்மதன் அம்பு மற்றும் இன்ன பிற படங்கள் அண்ணனின் வருகையையொட்டி வெளிவருவதால் பயங்கர பிஸி.... பூ மிதிப்பது, திருமணத்தில் தாலி எடுத்துக் கொடுப்பது, பிள்ளைங்களுக்கு பெயர் வைப்பது போன்ற நிகழ்ச்சிகளுக்கு முன்பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்...

சிங்கார சேலத்தில் இருப்பதால், சென்னையில் வலைப்பதிவர் சந்திப்பு ஏதாவது நடந்தால் தெரிவிக்கவும்... அடிக்கடி எழுததான் முடில (இனிமேல் அப்படி இல்ல) ... எழுதறவங்கள பார்ப்போம்...

தேதி : டிசம்பர் 14 - ஜனவரி 19

இனிமேல் மஜாதான்....


Wednesday, December 30, 2009

வந்ததே 2010 : 2009 டாப் பத்து நிகழ்வுகள்

இப்போதுதான் டிசம்பர் 31 2008 பெங்களூரில் எங்களது அறையில் நண்பர்கள் மதுவருந்த அவர்களது சைடு டிஷ் முழுவதும் சாப்பிட்ட பாவத்திற்கு திட்டு மற்றும் குட்டு வாங்கி கண்ணயர்ந்தேன், அதற்குள் வந்துவிட்டது 2010. இந்த வருடத்தில் என்ன ஆணி புடிங்கினோம் என்று தெரியவில்லை. வயது ஒன்று கூடிப் போயுள்ளது, பெரிய சாதனைதான்.

ஈஷா யோகா மையம், விப்ரோ பிரேம்ஜி சந்திப்பு, அமெரிக்க பயணம் என்று எல்லாம் நல்லபடியாக எனக்கு நடந்து முடிந்த வருடம். இதற்கெல்லாம் மேலாக நான் எனது வலைப்பூவை தூசி தட்டி எடுத்த வருடம். எத்தனை நண்பர்கள், எண்ணிக்கொண்டுள்ளேன்.

இந்த வருடம் நடந்த விஷயங்களை நான் வரிசைப்படுத்தியுள்ளேன். இதுதான் வரிசை என்றில்லை, மொத்தம் பத்து அவ்வளவுதான்.

ஒபாமா - சுபமா?
ஜனவரி மாதம் வெள்ளை மாளிகையில் அதிகாரப்பூர்வமாக குடியேறிய முதல் ஆப்ரிக்க அமெரிக்கர். அவரது பேச்சுத் திறமையை உலகமே திரும்பிப் பார்த்தது. தொழில்நுட்பத்தை மிகவும் திறமையாக உபயோகப்படுத்தி அனைவரையும் கவர்ந்தார். நோபல் பரிசு வேறு தட்டிக்கொண்டு போய்விட்டார். ஹ்ம்ம்...

ஆஸ்கார் ரஹ்மான்:
ஆஸ்கார் தமிழனாய் அவர் அன்று பேசிய வார்த்தைகள் இன்றும் என் காதுகளில் ஒலித்துகொண்டுள்ளது. திறமை இருந்தால் உலகம் திரும்பிப் பார்க்கும். அதை நிருபித்துள்ளார். ஜெய் ஹோ ரஹ்மான்.

மைக்கேல் ஜாக்சன்:
இதோ முடிந்துவிட்டது, தனது வலிப்பாட்டம் மூலம் அனைவரையும் கட்டிப் போட்ட மனிதன், இன்று இல்லை. பல விஷயங்களில் அவர் சிக்கியிருந்தாலும், அவரது மறைவிற்கு பின்னர் உலகின் இசைப்பியாநோவில் ஒரு கீ இல்லாமல் போய்விட்டது என்னவோ உண்மைதான். MJ We will Miss you....

சச்சின் இருபது:
ஒரு நாள் பந்து போட்டு கிரிக்கெட் விளையாடினாலே, கை காலெல்லாம் வலித்து போய்விடும் எனக்கு. ஒரு மனிதன் இருபது ஆண்டுகள் தொடர்ந்து கிரிக்கெட் விளையாடுகிறார் என்றால், அவருக்கு கிரிக்கெட் எவ்வளவு இஷ்டமானதாய் இருக்க வேண்டும். அதிலும் இன்றும் அதே இளமை துள்ளலுடன் விளையாடுகிறார். உலகே அவரைப் பார்த்து வாய் பிளந்துள்ளது. சச்சின் ஒரு சகாப்தம்.

கமலஹாசன் ஐம்பது:
இந்த வருடம், உலக நாயகனின் சகாப்த வருடம். தமிழ் சினிமாவை உலக சினிமாவை நோக்கி உயர்த்த பாடுபடும் தமிழன். ஒவ்வொரு படத்திலும் வித்தியாசம் காட்ட முயற்சிக்கும் இவர் தமிழ் சினிமா மகுடத்தின் வைரக் கல். கமல் உண்மையிலேயே உலகநாயகன்தான்.

பன்றிக் காய்ச்சல்:
உலகத்தையே ஆச்சா போச்சா என்று ஆக்கிவிட்டுப் போய்விட்டது. உலகின் பல பகுதிகளில் பலரை காவு வாங்கிய பன்றிக் காய்ச்சல் இன்று ஏதோ கொஞ்சம் அடக்கிவாசித்து வருகிறது. ஏதோ மருந்தும் கண்டுபிடித்துவிட்டனர். பன்றிகளுக்கா,நமக்கா?

ரியோ-டி-ஜெனிரோ:
2016 ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை அசால்டாக தட்டிக் கொண்டுப் போய்விட்டது. முதல் முறையாக ஒலிம்பிக் போட்டிகள் தென்னமெரிக்க கண்டத்திற்கு சென்றுள்ளது. BRIC நாடுகளில், இந்தியாவை தவிர அனைத்து நாடுகளும் ஒலிம்பிக் போட்டியை நடத்திவிட்டன அல்லது நடத்த போகின்றன. இந்தியாவிற்கு எப்போ விடிவுகாலமோ. விழித்துக் கொண்டு காத்திருப்போம். முதலில் காமன் வெல்த் போட்டிகளை ஒழுங்காய் நடத்துங்கள் என்று சொல்லுவது காதில் விழுகிறது.

இந்தியா முதலிடம்:
இந்தியா முதல் முறையாக டெஸ்ட் போட்டிகளில் முதல் ரேங்க் எடுத்துள்ளது. எதில் முதல் ரேங்க் எடுக்கிறோமோ, அதைத்தான் நாம் செய்யவேண்டும். ஆனால் இந்தியா இரண்டு டெஸ்ட் போட்டிகள்தான் விளையாடுகிறதாம். ஏதோ கெஞ்சிக் கூத்தாடி தென்னாபிரிக்க அணி இரண்டு கூடுதல் போட்டிகள் விளையாட சம்மதித்துள்ளது. தக்கவைத்துக் கொள்ளுவோமாதெரியவில்லை.

வெங்கி ராமகிருஷ்ணன்:
நோபல் பரிசு வாங்கிய மூன்றாவது தமிழர். அமெரிக்க வாழ் இந்தியத் தமிழர் (வரிசை சரி என்று நம்புகிறேன்). உயிரியலில் அவரது ஆராய்ச்சிக்கு நோபல் பரிசு வழங்கியுள்ளனர். இவர் இன்றும் இந்தியா வந்து வகுப்புகள் நடத்துகிறார். சில பள்ளிகளை தத்தெடுத்து நடத்துவதை கேள்விப் பட்டேன். உண்மையாக இருக்க வேண்டுகிறேன். இவரை முன்மாதிரியாய் கொண்டு இன்னும் பலர்வரவேண்டும்.

செக்ஸ் விவகாரங்கள்:
லாஸ்ட் பட் நாட் தி லீஸ்ட் என்பது போல உலகையும் இந்தியாவையும் உலுக்கிய செக்ஸ் சம்பவங்கள். உலகின் தலைசிறந்த கோல்ப் வீரரான டைகர் வூட்ஸ் முதலில் இந்த விவகாரத்தில் மாட்டி சிக்கி சின்னாபின்னமானார். ஒன்றா, ரெண்டா என்று அவரது அந்தரங்கம் வெட்டவெளிச்சமானது. இதைத் தொடர்ந்து நமது ஆந்திர ஆளுநர், ஆளுநர் மாளிகை மன்மத லீலைகளை வெளியிட்டது ஆந்திர தொலைகாட்சி. என்னதான் அவர் மறுத்தாலும், இந்த வயதில் அந்த ஆளுக்கு தேவையா என்று அனைவரும் கேட்கும் அளவிற்கு மாநிலத்தின் முதல்குடிமகன் நடந்துக்கொண்டுள்ளார். நாட்டி கய்ஸ்.


இதையனைத்தையும் தூக்கி சாப்பிடுமாறு ஒரு விஷயம் நடந்தது என்றால் அது இலங்கையில் நமது தமிழர்களை கொன்று குவித்த துக்க சம்பவங்கள். அதைவைத்து அரசியல் செய்த நம் இந்திய தலைவர்கள், மற்றும் இலங்கையில் வசிக்கும் தற்போதைய ராவணன் ராஜபக்ஷேவும் இந்த ஆண்டின் சிறந்த நடிகர்களாக தெரிவு செய்யப்படுகிறார்கள். வாழ்வதற்கும் வழியற்று, சரியான மருத்துவ வசதியும் இல்லாமல் நம் மக்கள் பட்ட பாடு. அதை சொல்ல இந்த ஒரு பதிவு போதாது

இத்தனையும் நடந்து கொண்டிருந்தாலும், 'நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய்...' எனது பூமித்தாய் எனக்கு அழகாகிக் கொண்டே போகிறாள். அவள் இந்த வருடம் இன்னும் அருகில் இருந்து ரசிக்கவேண்டும்.

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். Happy New Year 2010.




Tuesday, December 22, 2009

எதனை விடுத்து எதனை எடுக்க...

கடந்த இரண்டு நாட்களாய், ஒரு வித Hypothetical World போன்ற ஒரு உலகில் மிதந்து கொண்டிருந்தேன். இதை எழுதுவதா, அல்லது அதை எழுதுவதா என்ற ஒரு குழப்பத்தில் ஒரு 48 மணி நேரம் ஓடிவிட்டது. இப்போது எதனை விடுத்து மற்றொன்றை பிறகு எழுதலாம் என்று நினைத்தால் அதன் சுவாரசியம் குறைந்து விடும், எனக்கு. அதனால் மூன்றையும் பிணைந்து ஒரு கூட்டுக் கலவையாய் தரலாம் என்று முடிவெடுத்து திரும்புகிறேன், நாட்காட்டியில் இரண்டு தினங்கள் ஓடிவிட்டிருந்தது. Better Late than Never என்று சொல்லுவது போல் இன்று கலக்கி விடுவோம் அந்த கலவையை.

கற்பனை:

இரண்டு தினங்களுக்கு முன்பு நண்பன் உடுமலை மூலம் ஆர்டர் செய்து பெற்ற புத்தகங்களை மேய்ந்து கொண்டிருந்த எனக்கு கி. ராஜநாராயணன் எழுதிய பிஞ்சுகள் என்ற புத்தகம் கையில் சிக்கியது. அன்றைய தினத்தில் மிச்சமிருந்த நாலு மணி நேரத்தில் படிக்ககூடிய புத்தகமாக இருந்தது அது மட்டும்தான். எடுத்து புரட்ட ஆரம்பித்தேன், முடித்துதான் கீழே வைத்தேன். சொல்ல வந்த விஷயம் பெரியது இல்லை என்றாலும், அவர் சொன்ன விதம் என்னை கவர்ந்தது.

ஒரு சிறுவன், அவனது கிராமம் மற்றும் அவனது ரசனை ஆகியவற்றி வைத்து ஒரு நூற்றி இருபது பக்க கதை, அதுவும் சுவாரசியமாக. அருமை. Facts are stubborn things என்று யாரோ கூறியது போல, பறக்கும் பறவையில் இருந்து, அது போடும் முட்டைகள் வரைக்கும் அனைத்தும் ஒருவித சாட்சியங்களுடன் அவர் கூறியிருந்தது எனக்கு பிடித்திருந்தது. சில இடங்களில் அளவிற்கு அதிகமான விளக்கங்களோ என்று தோன்றினாலும் ரசிக்க முடிந்தது. பறவைகளை ஒரு சிறுவன் எப்படி ரசிக்கிறான் அல்லது ரசிக்க முடியும் என்பது எனக்கு முன்னே காட்சிகளாய் ஓடியது. எங்கள் ஊரில் காகங்களை மட்டும் பார்த்த எனக்கு வல்லயத்தான், தேன் கொத்தி, பலவகை சிட்டுக்கள் என பிறவகை பறவைகளையும் அறிமுகப்படுத்தியது வெங்கடேஷ்-தான். அவனுக்கு நன்றி கூறியாக வேண்டுமே....

காக்காய் பிடிப்பது என்பது ஏதோ அரசியல் சம்மந்தப்பட்டது என்று எண்ணிய எனக்கு, அது உண்மையில் ஒரு கலை என்பது இந்த புத்தகம் படித்த பின்பே புலனாகியது. இந்த விஷயங்களை அழகாய் பூமாலை போல கி.ரா கோர்த்த விதம் அருமை. இவர் ஒரு வாட்ச் பண்ண வேண்டிய வால் கிளாக்.

பொறுமை:

அந்த புத்தகத்தை படித்து மூடி வைத்த மறுகணம், இன்னொரு நண்பன் techsatish.net-இல் நீயா? நானா? பார்க்க தொடங்கினான். நானும் முதலில் காது கொடுத்தேன், பின்பு எனது கவனம் முழுவதும் அதன் பக்கம் திருப்பினேன். 'வாழ்வில் தேவை சோம்பேறித்தனமா? சுறுசுறுப்பா?'. ஏதோ என்னைப் பற்றிய விவாதம் போல இருந்தது. நம்ம முதல் கூட்டம். பலர் பலவிதமாக பேசினாலும், இறுதியில் ஒரு நிறுவனத்தில் பெரிய முடிவுகள் எடுப்பவர்கள் நிதானமாக இருக்க வேண்டும் என்று சொன்னார், சோம. வள்ளியப்பன். நம்ம சோம்பேறித்தனத்தை அவர் நிதானம் என்று கூறுவதை நானே என்னை தேற்றிக் கொண்டேன்.

அதற்கும் மேல், கொஞ்சம் சோம்பேறித்தனம் உள்ளவர்களால் வாழ்வில் நடைபெறும் எல்லாவற்றையும் ரசிக்க முடியுமாம். சுறுசுறுப்பாய் இருப்பவர்களால் ரசிக்க முடியாதாம். அதனால்தான் நமக்குள் இருக்கும் கவிஞன் அப்பப்போ வெளியே வரான் போல இருக்கு. வென்றுட்டன்!!! பொறுமைதான் வெற்றியின் ரகசியம்.

கற்பனை+பொறுமை:

இது இரண்டும் சேர்ந்தால் என்ன ஆகும், சேர்க்க முடியுமா என்று தமிழ் அறிஞர்கள் சொன்னால் நன்றாக இருக்கும். இதுதான் நான் இரண்டு நாள் முன்னர் பார்த்த அவதாரின் ரகசியம். நண்பர்கள் கூட்டத்துடன் ஒரு இரண்டு மணிநேரம் காரில் பயணித்து, கொலம்பஸ்-இல் இருக்கும் 3D- IMAX தியேட்டர் சென்று பார்த்தோம். பிரம்மாண்டம், இப்படி ஒரே வார்த்தையில் சொல்வது சரியா என்று கூட தெரியவில்லை. அதீத கற்பனை, பனிரெண்டு வருடங்கள் காத்திருக்க பொறுமை, இதுதான் இதன் வெற்றியின் ரகசியமா? அதுவும் தெரியவில்லை. ஒரு நாலு வார்த்தையை யோசித்துவிட்டு அதை எழுத்தில் கொண்டுவரவே நான் வில்லன் படத்தில் வரும் கிரண் போல கமுந்து படுத்து காலை ஆட்டி யோசிப்பேன். இந்த அளவு கற்பனையை அந்த வெள்ளித்திரையில் கொண்டு வர மிகவும் துணிச்சலும், பொறுமையும், தன்னம்பிக்கையும் வேண்டும். அது நமது கேமரூனிடம் உள்ளது. ஆஸ்கார் இந்த முறையும் அள்ளுவார் என எதிர்பார்கிறேன்.

வேட்டைக்காரனில் முடிவு மட்டும் பார்த்தேன். நான் ஏற்கனவே சொன்னது போல, அவதாரின் முடிவும் அது போலத்தான். கண்டிப்பாக போய் பாருங்கள், அவதாரை.

அப்பா... எப்படியோ... எழுத நினைத்த மூன்றையும் சுருக்கி, குறுக்கி, முறுக்கி எழுதியாகிவிட்டது. பிடித்தால் ஒரு பின்னூட்டம் போட்டு செல்லுங்கள்.


Monday, October 26, 2009

சிகாகோ... get.. set.. go..



தேதி: அக்டோபர் 10
நேரம்: மாலை 6:30

திரு கார்கில் ஜெய் அலைபேசியில் அழைத்து, "என்னப்பா நாளைக்கு காலைல மாரத்தான் போலாமா?" என்றார்.
"போலாமே ஆனா என்கிட்ட சாதாரண ஷூ தான் இருக்கு" என்றேன்.
"டேய், ஓடரத்துக்கு இல்லடா பாக்கறத்துக்கு" என்றார்.
"என்ன என்னால ஓட முடியாதுன்னு நெனச்சீங்களா? நான் 30 கீ.மீ தூரத்த, 11 மணி நேரத்துல நடந்துருக்கேன்" என்றேன்.
"டேய் இவங்கலாம் 2 மணி நேரத்துல ஓடி ரெகார்ட் பண்ணுவாங்கடா! வரயா வரலையா? " என்று கூறிய கோப சூட்டில் என் காதுகள் பழுத்துவிட்டது. நேரில் இருந்திருந்தால் நெற்றிக் கண்ணை திறந்திருப்பார்.
"எத்தன மணிக்கு?" - நான்.
"மார்னிங் 6:30"
"சிகாகோ குளிருல அந்த டைம்-ல அனிமல்ஸ் கூட எந்திரிக்காது, வர ட்ரை பண்றேன்" - என்று நான் போனை வைத்தேன்.

என்னதான் நான் சலித்துக்கொண்டாலும், சிகாகோ என்றாலே நிதி நிறுவனங்கள் மற்றும் பலமாடி கட்டிடங்கள் மட்டுமே இருக்கும் என்று நினைத்த எனக்கு, இது ஒரு புது அனுபவமாக இருக்கும் என்று நம்பினேன். அந்த எண்ணம் வீண் போகவில்லை.

டைம்-அ எப்படி போக்கலாம்னு யோசிக்கும்போது, ஒரே மேகமூட்டம், சாம்பராணி வாசம் எங்க தாத்தா என் முன்னாடி வந்து 'எப்போதும் போல எது செய்வதற்கு முன்னாடியும் அதை தெரிஞ்சு செய்யனும்'னு சொன்னாரு. சட்டுன்னு மேகம் கலஞ்சுது. சரி நாம மாரத்தான் பத்தி தெரிஞ்சுபோம்னு நம்ம தலிவர் கூகுளை கூப்பிட்டேன். இப்போ கேள்வி பதிலை பார்ப்போம்.

காவி: மாரத்தான்-னா என்ன?அதுக்கு பேர் எப்படி வந்தது?
தலிவர்: சுமார் 42.195 கீ.மீ அல்லது 26.385 மைல் ஓட வேண்டும், இதில் யார் ஓட வேண்டுமென்பது முக்கியம் இல்லை. வெற்றி பெற வேண்டும் என்ற வெறியுடன் இருப்பவர் தொடங்கி, தொடக்கத்தில் எடுக்கும் புகைபடத்தில் முகம் வர வேண்டுமென்று நினைப்பவர் வரை எவரும் ஓடலாம், ஆனால் கூட்டத்தில் அவர் முகம் வரும் என்பதற்கு கியாரண்டி கிடையாது.
அதுக்கு ஏன் இந்த பேரு வந்துச்சுன்னா, முன்னொரு காலத்தில் கிரேக்க படை பெர்சியா படையை வென்றது, இதை அறிவிக்க ஒரு தூதுவன் மாரத்தான் என்னும் ஊரிலிருந்து பெர்சியா வரை நிற்காமல் ஓடிச்சென்று அங்கு மக்களவையில் தங்களது வெற்றியை அறிவித்து மயங்கி விழுந்து உயிரை விட்டான். அதிலிருந்து இந்த தலை தெறிக்க ஓடும் போட்டிக்கு மாரத்தான் என்ற பெயர் வந்தது. (பாவம் உயிர் விட்ட அந்த தூதுவனின் பெயரை வைத்து இருக்கலாம்). அவர் எவள்ளவு தூரம் ஓடினார் என்று எவருக்கும் தெரியவில்லை, ஆனால் மாரத்தான்-இன் தூரம் 1921-இல் தான் முடிவு செய்யப்பட்டது, அதற்கு முன்பு வரை தனக்கு தோன்றிய தூரமென போட்டி அமைப்பாளர் முடிவு செய்யலாம்.

காவி: சிகாகோ மராத்தானை பற்றி கொஞ்சம் சொல்லு தலிவா
தலிவர்: சிகாகோ மராத்தான் 1905-ல ஆரமிச்சாங்க. சிகாகோ downtown-ல தெருத்தெருவா ஓடுவாங்க. லேக் மிச்சிகன்-ல ஆரமிச்சு அப்படி, இப்படி போய் மறுபடியும் அங்கேயே வந்து முடிப்பாங்க. இந்த தடவ எங்க சுத்துராங்கனு நீயே மேப்ப பார்த்து தெரிஞ்சுகோ. இந்த தடவ இத பேங்க் ஆப் அமெரிக்க நடத்தறாங்க. முதல் ஆளு ரெகார்ட் முறியடிச்சா $100,000 தரதா சொல்லிருகாங்க. இதுக்கு மேல நேர்ல பாத்துக்கோ.

நன்றி தலிவா!!!

நாளைக்கு காலைல கிளம்பனும். அலாரம் வைப்போம், சரி ஒரு 5:30-க்கு அலாரம் வைப்போம்.

தேதி: அக்டோபர் 11
நேரம்: காலை 6:15

என்னதான் அலாரம் வெச்சாலும் நான் இந்த டைம்-க்கு தான் எந்திரிச்சேன். நம்ம தலைவருக்கு போன் பண்ணினால், அவர் அங்கு நின்று போட்டோ எடுத்துக் கொண்டிருந்தார். சீக்கரம் கெளம்பி வா என்ற அவரது ஆணைக்கு இணங்கி சடாரென கெளம்பினேன். அங்கு போய் அந்த கூடத்தில் அவரை தேடி கண்டுபிடிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.

அவர் எனக்கு எல்லாரும் ஓட ஆரமித்ததை சொல்ல ஆரமித்தார்.
'சும்மா பெரிய கூட்டம், நான் கூட ஓடலாம்னு நெனச்சேன்னு' சைக்கிள் கேப்புல, சரி பையன் என்ன சொன்னாலும் நம்புவான்னு அவருக்கு நெனப்பு. நானும் நம்பிட்டேன்.
'அதுவரைக்கும் நான் அவ்வளவு கூட்டத்த பாத்தது இல்ல, நாம அந்த பக்கமா போய் நின்னு அந்த ரோடு-ல வரும்போது போட்டோ எடுப்போம்'னு சொன்னாரு. நானும் போனேன். அதோட அவுட்புட்டை நீங்கள் இந்த போட்டோக்களில் பார்க்கலாம்.





'எவ்வளோ கஷ்டம் தெரியுமா, என்ன ஸ்டாமினா வேணும் தெரியுமா?' என்று அளந்து கொண்டிருந்தார்.
'இதெல்லாம் என்ன சித்தப்பு, நான் கூடதான் $2000 ஷூ, அங்க அங்க gatorade, இத்தன பேரு கைத்தட்டுனா ஓடுவேன். this is not that big, you know' என்றேன்.
நீங்களே சொல்லுங்க இத்தன வசதி இருந்த ஏன் ஓட மாட்டாங்க. நம்ம ஊருல வசதி கம்மி, நம்ம ஊருல உட்ட நாம கிராமத்து பசங்கலாம் சாதரணமா ஓடுவாங்க. infrastructure, facility நம்ம ஊருல இல்ல, அதுதான் மேட்டர்.
சிலபல போட்டோகளை எடுத்துவிட்டு, நாங்கள் முடிவடையும் இடத்திருக்கு வந்தோம். அங்க ரெண்டு பேரு பேசிட்டு இருந்தாங்க. நம்ம ஒலிம்பிக்ஸ் சாம்பியன் சாமி வாஞ்சிறு வந்துருக்கார், அவருதான் அந்த $100,000 வாங்க போறாருன்னு. நமக்கா, என்னடா பேரு சாமி வாஞ்சிறு-ன்னு... சாமியவே திட்ட சொல்லி பேரு வச்சுருக்காங்க அப்படினு போட்ட மொக்கைக்கு சிரிக்கும் முன்னரே.
'வராங்க.. வராங்க..' கார்கில் எழுப்பினார்.
'எங்க..எங்க..' என்று நான் வினவ. அங்கு நம்மாளு சும்மா கூலா கைய ஆடிட்டு வந்துட்டு இருந்தாரு.
'யோவ், சீக்கரம் வாயா, அவனவன் நீ $100,000 வாங்கரயானு பாக்க வந்துருக்கான். நீ என்னடான மெதுவா ஆடி அசஞ்சு வர.' என்று சத்தமாக திட்டினேன்.
04......
03.....
02....
நம்ம ஆளு சட்டுன்னு உள்ள பூந்து ஒரு செகண்ட்-ல $100,000 -அ தட்டிட்டு போய்ட்டான், குடுத்துவச்சவன் மாதிரி.
இன்னும் நான் சொல்லிட்டு இருந்தேன். என்ன இருந்தாலும் இவளோ facilities இருந்த யார் வேணாலும் ஓடலாம். அப்படி சொல்லிட்டு திரும்பி வரும்போதுதான் நம்ம வாழைப்பழ காமெடி நடந்தது.

இதுல இன்னொரு சிறப்பு என்னன்னா, பெண்களுக்கு தனி தூரம். பள்ளிகூட மாணவர்கள் கூட ஓடினார்கள். இங்க வந்தபோதுதான், மராத்தான்-ல ஓடி பல பேரு செத்துபோயிருக்காங்க-ன்னு கேள்விப்பட்டேன். எனக்கு உடனே நாம மராத்தான் தூதுவன் ஞாபகம் வந்தது. ஒருவேளை எல்லா போட்டியிலும் அவன் ஆவியா வந்து ஒரு உயிரை கொண்டுபோரானோ-ன்னு எனக்கு சந்தேகம். இந்த ஈரம் படம் பாத்ததுல இருந்தே இப்படித்தான்.

இப்படி சும்மா சும்மா நான் இது இல்ல அது இல்லன்னு பேசிட்டு வந்துட்டு இருக்கும்போது, எதுவும் தேவை இல்ல, மனசு இருந்த போதும். அத்தோட உழைப்பும் சேர்ந்தால் எதிலும் வெற்றி பெறலாம் என்று நிரூபித்தார் ஒருவர். அவர் போட்டோ கீழே.


பி.கு: நான் செய்த இத்தனை torture-களுக்கு நடுவிலும் இவ்வளவு போட்டோக்களை அங்கும் இங்கும் தொங்கி தொங்கி எடுத்த நம்ம கார்கில் ஜெய்... ரெம்பா நல்லவர்ர்னு உங்களுக்கு சொல்லிக்கறேன்


Related Posts with Thumbnails

blogger templates | Make Money Online