Tuesday, March 16, 2010

தாக்க... தாக்க... - த சாக்ஸ் அட்டாக் : பகுதி - 1


கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - ஜிகர்தண்டா




.....அம்ரிதா கல்லூரி... கோவையிலிருந்து 20 கீ.மீ...தூரத்தில்....

[லோ...சீ....மீ...ஓஒ....வூஊ...]

டிஷும்... டிஷும்ம்..... வகுப்பறையை வாசல் வழியாக வெளியே வந்து விழுந்தான். இப்போதே தெரிந்திருக்கும் இவன்தான் நம்ம ஹீரோ அப்படினு. தொப்பென்று விழுந்தவன்... திடீரென கண்களை திறக்கிறான்...

ஹீரோ: சார்... இப்போ சாங்க்தான....
நான்: யோவ்... உன் மூஞ்சிக்கு பாட்டு வேறயா...அப்படியே படுத்த மாதிரியே... மூஞ்சிய திருப்பீட்டு பேசு...

இனிமேல் வருவதை நம்ம காக்க காக்க சூர்யா மாதிரி படிக்கவும்.

"அந்த கடலை ஒழிப்பு வேல எனக்கு ரொம்ப பிடிச்சுருந்தது, இப்போ என்னால என் சாக்ஸ் ஆபத்துல இருக்கு... எழுந்திரிக்கணும்... முடில.. என் மூக்குல நாத்தம் புடிச்ச சாக்ஸ் போட்டு போய்ட்டான்.. மூளையே கொழம்பீடுச்சு... நாத்தம்.. செம நாத்தம்... என் சாக்ஸ், அத நான் காப்பத்தணும்..எழுந்திரி... எழுந்திரி..."

[லோ...சீ....மீ...ஓஒ....வூஊ...]

'என் பேரு அன்புச்செல்வன்... அழுக்கு சாக்ஸ் அன்புச்செல்வன்..கடலை ஒழிப்பு சங்க உறுப்பினர்...பேருக்கு முன்னாடி இருக்கே அதுதான் என் தவம்... கடலை போடறவன கண்டாலே எனக்கு பிடிக்காது.. எங்க டீம்ல நாலு பேரு.. சாக்கடை ஸ்ரீகாந்த், இஞ்சி இடுப்பழகன் இளமாறன், ஆக்சிஜென் அருள். எங்கள கடலை ஒழிப்பு சங்கத்துல போட்டபோதுதான், வாஸ் பேசின் வாசுதேவன் வந்தாரு. பாம்பே ஐ. ஐ. டி ல கடலைய ஒழிச்சவர்... முப்பது பேரு மூஞ்சில சாக்ஸ் போட்டு மயக்கம் போட வெச்சவரு... ஹி இஸ் கொன்ன லீட் அஸ்'

எங்க மீட்டிங் போது நான் சொன்னேன்...
'சார்... நம்ம காலேஜ்-ல இருக்கற மிகப்பெரிய கடலை பசங்க லிஸ்ட் இது. வெறும் சட்டிலையே சும்மா கருப்பு புகை வர அளவுக்கு கடலை வறுப்பாங்க. கடலை குமார் - இவன் எப்பவுமே பொண்ணுங்க கூடதான் இருப்பான். மைதா மனோகர் - இவர் கொழு கொழுன்னு இருக்கறதால பொண்ணுங்களுக்கு பிடிக்கும். செல்போன் சிவகுமார் - இவன் செல்போன்-ல மரண கடலை போடுவான். இவங்க எல்லாம் வரப்போற அன்னுவல் டே-ல மரண கடலை போடபோறதா தகவல் வந்துருக்கு. நாலு மாசம் துவைக்கத சாக்சோட வேட்டைக்கு நாங்க தயார்'

அப்போதான் வாசுதேவன் சொன்னார். 'நான் முப்பது பேரு மூஞ்சில சாக்ஸ் போட்ருக்கேன். அதுல ஒருத்தன் மட்டும் கடலை போடல, சப்ஜெக்ட் டிஸ்கஸ் பண்ணினோம் அப்படினு என் மேல கம்ப்ளைன்ட் குடுத்தான்... எல்லாரும் அத பத்தி மட்டும்தான் பேசினாங்க... சோ நீங்க ஜாக்கிரதையா சாக்ஸ் போடணும்'

நாங்க நாலு பேரு.. எங்கள அன்டச்சபில்ல்ஸ் அப்படினு சொல்லுவாங்க... அப்படி நாறும் எங்க சாக்ஸ்...

லேப்-ல மைதா மனோகர் இருக்கறத எங்களுக்கு தகவல் வந்தது... சுத்திப் போய் எல்லாரும் அவன் மூஞ்சில சாக்ஸ் போட்டு அவன மயக்கம் போட வெச்சோம். இதுதான் எங்களுக்கு பெரிய வெற்றி...இதே மாதிரியே பிளான் பண்ணி, நாங்க கடலை குமார போட்டு தள்ளினோம், அவன சங்கத்துக்கு முன்னாடி நிறுத்தலாம்னு எல்லாரும் சொன்னாங்க, நான்தான் அதெல்லாம் வேஸ்ட் அப்படினு தூரத்துல இருந்தே சாக்ஸ் தூக்கி போட்டு மயக்கம் போட வெச்சேன். என்னதான் என்னோட ஒரு சாக்ஸ் போனாலும், நம்ம லட்சியத்த அடைஞ்சோம் இல்ல அப்படினு அவங்ககிட சொல்லி பெருமைப்பட்டேன். அவங்களுக்கும் அதுல ஒரு சந்தோஷம். இந்த டைம்-ல தான் அவள பாத்தேன், ஆயா... டாய்லெட் கழுவுற ஆயா..

ஷி இஸ் எ பேண்டசி..ல..ல லா....
ஒரு ஊரில் அழுக்கே உருவாய் ஒருத்தி இருந்தாலே...
அவள் அருகே போனால் நாத்தத்தில் துரத்தி அடிப்பாளே...

அவகிட்ட எனக்கு பிடிச்சதே அவ போட்டுட்டு வர அந்த அழுக்கு சாக்ஸ்தான், எப்போ துவைச்சாளோ தெரில... ஆனா எங்க சாக்ஸவிட கொஞ்சம் எக்ஸ்ட்ரா நாத்தம்தான்.

இந்த டைம்ல, செல்போன் சிவகுமார் வீக்-எண்டு ஊருக்கு போறபோது, கவிதா கூட போறத எங்களுக்கு தகவல் வந்தது. உடனே நாங்க நாலு பேரும், எங்ககிட்ட இருக்கற அழுக்கு சாக்ஸ் எடுத்துட்டு பஸ் ஸ்டாண்ட் போனோம். அங்க அவன் எங்கள பாத்ததும் உஷார் ஆயிட்டான். ஆனா நாங்க அவன தொரத்தி புடிச்சோம்.

ஸ்ரீகாந்த்: 'அன்பு இவன போட்றனும் அன்பு'
நான்: 'டேய் சிவகுமார், தப்பிக்கலாம்னா பாத்தா... டேய் அருள்.. ஒன்னு போடறா...'
இளமாறன்: ஐயோ... சாக்ஸ் போட சொன்னா நீ என்னத்தடா போட்ட... நாத்தம் தாங்கல.. சாக்ஸ் போடறா....
சிவகுமார்: ஹா...ஹையோ... இதுக்கு அந்த சாக்சே பரவா இல்லையே... ஹாஆஅ.... [மயக்கம் போடுகிறான்]

இப்படி சில சமயம் அருள் சாக்ஸ்க்கு வேல இல்லாம பண்ணுவான், அதுக்குதான் அவன் பேரு ஆக்சிஜன் அருள்.

இதெல்லாம் நடந்துட்டு இருக்கும் போது.... டைரக்டர் கட் சொல்லி... அடுத்த பதிவுல படிங்க அப்படினு சொன்னா எப்படி இருக்கும் அப்படினு யோசிச்சாரு....


Wednesday, March 10, 2010

ஜொள்ளாத மனமும் ஜொள்ளும் - என் டீன் கதை - 2


என்னடா கொசுவத்தி போட்டு போனவன் ஆளக் காணோம் என்று எண்ணி, சந்தோஷப் பட்ட அனைவருக்கும் இன்று கனவில் என் கொசுவத்தியே வரக்கடவது என்று தண்ணீர் தெளித்து சாபம் விடுகிறேன்......

நான்: மே ஐ கம் இன்..
டாக்டர்: நீயா....
நான்: வொய்... நீங்கதான வர சொன்னீங்க...
டாக்டர்: சாரி... சரி வா.. நாம அந்த ரூம் போகலாம்...

உள்ளே சென்ற பின்..

டாக்டர்: ஸ்டார்ட் பண்ணிதொல..

எட்டாவது மற்றும் ஒன்பதாவதில் எங்கள் பள்ளி ஆசிரியை, விசுவின் அரட்டை அரங்கம் புகழ், வத்சலா மிஸ், அன்னுவல் டே-க்கு டிராமா போடுவாங்க. எல்லா வருஷமும் நமக்கு ஒரு ரோல் இருக்கும். நானும் இந்த வருஷம் நமக்கு ஒரு டூயட் இருக்காதா அப்படின்னு ஏங்கி போவேன். அவங்க எல்லா வருஷமும் போல இந்த வருஷமும் பெண்கள் முன்னேற்ற டிராமாவ போட்டு அதுல படிக்காத முட்டாப்பயலா நான்...அறிவாளியா வீட்டு வேல செய்யற தங்கச்சி... எப்படிதான் கண்டிபிடிக்கராங்களோ....நாம வந்தாலே முட்டாப்பய வேஷம்தான்... இல்லாட்டி கோர்ட் சீன்ல தோத்து போற ஒரு லாயர்... என்ன கொடும.. இந்த டென்ஷன் தீர நான் பத்தாவது பள்ளிக்கூடம் மாறிட்டேன். எங்க அப்பா வேல பாக்கற ஸ்கூல்... பாய்ஸ் ஸ்கூல். பத்தாவதுல எந்த விஷயமும் மாட்டல... நானும் எந்த விஷயத்துலயும்மாட்டல...

பதினொன்னாவது... வந்த உடனே.. டியுஷன்..."நதிர்தனா... திரனனா..நா...." அப்படினு இப்போ பேமஸ் ஆனா மியுசிக், அப்போவே எனக்குள்ள ஓடிச்சு. முன்னாடி ரோல, பொண்ணுங்க, பின்னாடி ரோல பசங்க... எங்கத்த படிக்கறது... காலைல தலைக்கு குளிச்சுட்டு வர அவங்க தலைல இருந்து சொட்டற தண்ணில அப்படி நாம மனசு குளுந்து போய்டும். ஆனா ஒண்ணுங்க... பசங்க எல்லாம் மாங்கு மாங்குன்னு சைக்கிள்-ல வருவோம்.. அவங்க சும்மா டர்ன்னு வண்டில வந்துடு போயிட்டே இருப்பாங்க.. நாங்களும் வேகமா தொரத்துவோம், ஆனா பவுண்டரி போற பந்த தொரத்தர இந்திய கிரிக்கெட் வீரர் மாதிரி சொங்கி போய்டுவோம். இப்படியா சைக்கிள்-ல சாகசம் காட்றது... அப்படி இப்படினு போயிடு இருந்தது வாழ்க்கை... ஆனா, ஒரு இடத்துல மட்டும் நான் சண்டித்தனமே பண்ண மாட்டேன். கணக்கு டியுஷன் ல... ஏன்ன எங்க அப்பதான் எனக்கு கணக்கு டியுஷன் எடுத்தார்... பள்ளிகூடத்தில்கூட அவர்தான் எனக்கு கணக்கு. அதனால், கணக்கு டியூஷனில் யாரையும் கணக்கு பண்ண முடியவில்லை. சில பொண்ணுங்கள அவங்க அப்பா கூட்டிட்டு போக வருவாரு... அப்போ அவங்க கீழ வெயிட் பண்ணினா.. நாங்க அப்படியே சைக்கிள் பக்கதுல நின்னு பேசிட்டே இருப்போம்.. அதும் ஸ்டடீஸ் பத்திதான்... சில நேரங்கள்ல, மழை விழற ஸ்பீட் வெச்சு, க்ராவிடி கால்குலேட் பண்ற லெவெலுக்குபோவோம்.

இப்படியா பதினொன்னு, பன்னிரண்டு எல்லாம் நல்லபடியா போக. முதல் நாள் கவுன்சிலிங். எனக்கு முன்னால் நின்ற பெண், 'விச் காலேஜ் யு ஹவ் ஆப்டேட் ஃபார்' என்றாள்.. எனக்கு அவளது வேக இங்கிலீஷ் புரியவில்லை. 'மீ.. மீ... அம்ரிதா கோயம்புத்தூர்' என்று கூறி ஒரு புன்னகை பூத்தேன். அப்படியே அவள் கேட்ட கேள்வியையே நானும் திருப்பி கேட்டேன்.. நம்ம இங்கிலீஷ் சும்மாவா... 'வெங்கடேஸ்வரா' என்றாள்... 'குட் காலேஜ்' என்று சர்டிபிகேட் குடுத்தேன்.... புன்னகைத்தாள்... அந்த புன்னகை என்னும் மின்னலில் ஒடிந்த இதயம், இன்றும் விரிசல்களுடனே இருக்கிறது.

முதல் வருடம், மின்னலே பார்த்துவிட்டு கல்லூரிக்குள் சென்றேன். அங்கு பெண்களுடன் பேசுவதை தவிர்க்க வேண்டும் என்ற எண்ணத்துடனே சென்றேன். அதிகம் பெண்களுடன் பேசும் பசங்க... அப்பாஸ் போலவும்... நான் மாதவன் போலவும் எனக்கு நெனப்பு... (நெனப்பு - கவனிக்க) என்னதான் நாம அடக்கி வெச்சாலும். சுஜாதா சொல்ற மாதிரி அந்த ஹைட்ரோஜென், ஆக்சிஜென் மாதிரி இருக்கற ஹார்மோன் எக்ஸ்ட்ரா டைம் வேல பாக்க ஆரமிசிடுச்சு. வந்த முதல் நாளே நானும் என் நண்பனும், என் வகுப்பில் இருந்த பெண்களுக்கு மார்க் போட ஆரமித்தோம்.. 'மச்சி.. ஒரு நாப்பது..' என்று அவன் சொல்ல... 'மச்சி.. நீ வாத்தியார போனா எல்லாரும் பாஸ் ஆயிடுவாங்க' என்று நாங்கள் கலாய்க்க. இப்படியான வறண்டு போன பாலைவனத்தில்தான் நான் நான்கு வருடம் படித்தேன்.

லேப்பில் சில அழகான பெண்கள் அருகே இருக்கும் கணினியில் அமர்ந்தால் போதும். நாங்கள் பேசும் பாஷையே வேறு மாதிரி ஆகிவிடும். 'மச்சி.. இந்த ப்ரோக்ராம் python -ல பண்ணலாம்' என்று ஏதோ தெரிந்த மாதிரி அடித்து விடுவோம். வகுப்பில் ப்ரொபசர் எதாவது கேள்வி கேட்டல் எழுந்து நின்றுகொண்டே இருப்போம். வெளியே போக சொன்னாலும். கெத்து காமித்து வெளியே போவோம்.
ஆக எனது டீன் ஏஜ் வாழ்க்கை கெத்திலே தொடங்கி கெத்திலே முடிந்தது......

டாக்டர்: போதும்.... நிறுத்து...
நான்: சார்.. எனக்கு என்ன பண்றதுன்னு நீங்கதான் சொல்லணும்...
டாக்டர்: [இப்போ நான் பட்ட கஷ்டத்தை எல்லாரும் படணும்] தம்பி... நீ உன் மனசுக்குள்ள எல்லாத்தையும் போட்டு அழுத்தி வெச்சுருக்க.. அத நீ ஏன் புஸ்தகமா போட கூடாது...
நான்: என்ன சார் சொல்றீங்க...
டாக்டர்: இல்ல.. இத நீ ஒரு சுயசரிதம எழுதினா... வருங்கால சந்ததியினர் படிச்சு தெரிஞ்சுபாங்க இல்ல...
நான்: அப்படியா சொல்றீங்க...

இப்படியாக எனது கொசுவத்தி சுற்றியது... டீன் ஏஜ் முடிந்தது... இதன் பிறகு நடந்த விஷயங்களை... எனது சரித்தர புத்தகம் வெளிவரும்போது படித்து தெரிந்துகொள்ளுங்கள். முதல் பதிவு பார்த்தவுடனே... பெரிய பெரிய பதிப்பகத்தில் இருந்து ஏகப்பட்ட கால்கள், நீங்க உங்க சுயசரிதம் எழுதுங்க என்று. அதனால் 'சத்யாவிற்கு சோதனை' என்ற எனது சுயசரிதம் சீக்கிரம் வெளிவரும் என்பதை மிகவும் பெருமையுடன் கூறிகொள்கிறேன்.

கொஞ்சம் லேட்தான் என்றாலும், கொசிவத்தியை சுத்த, கார்கில் ஜெய் அவர்களை அழைக்கிறேன்.


Tuesday, February 16, 2010

ஜொள்ளாத மனமும் ஜொள்ளும் - என் டீன் கதை - 1

சங்கிலிப் பதிவிற்கு என்னை அழைத்த அனன்யா அக்காவிற்கு முதலில் நன்றி....



சரி மேட்டேர்க்கு வருவோம்.. ஒப்பனிங்க்ல ஒரு ஆஸ்பத்ரிய காமிக்கறோம்....
நர்ஸ்: நெக்ஸ்ட்....
நான்: யா இட்ஸ் மீ...
நர்ஸ்: யூ கேன் கோ இன்...
நான்: நோ வே!!!
நர்ஸ்: வொய்!!!
நான்: யூ ஆர் ஸ்டான்டிங் ஆன் த வே...
நர்ஸ்: ஓ.. சாரி...
நான்: சரி...

டாக்டர்: கம் இன்...
நான்: சார், நாம தமிழ்ல பேசுவோமே...
டாக்டர்: வொய் நாட், சொல்லுங்க என்ன பிரச்சனை?
நான்: நைட் தூங்கும் போது ஒரே ஃபிகரா வருது டாக்டர்
டாக்டர்: என்ன மாதிரி ஃபிகர்
நான்: சின்ன வயசுல பாத்த பிகர் மாதிரி இருக்கு
டாக்டர்: நீங்க சின்ன வயசுல மாத்ஸ்-ல ரொம்ப நல்ல மார்க் வாங்கிருபீங்க போல இருக்கே... வாங்க நாம கண்டுபிடிப்போம். ஹிப்னடைஸ் பண்ணி பாப்போம்.
நான்: சார்.. நான் சொல்றது அந்த ஃபிகர் இல்ல....
டாக்டர்: ஐ நோ எவரிதிங்... யூ கம்... திஸ் இஸ் எ சிம்பிள் ப்ரோப்ளம்...

இப்போ நாம ஹிப்னடைஸ் ரூமிற்கு போகிறோம்.
டாக்டர்: நீங்க இப்போ மெதுவா தூங்க போறீங்க. அப்புறம் கதை சொல்லுவீங்க.
நான்: சார்... நான் தூங்க... நீங்கதான் கதை சொல்லணும்.. நான் எதுக்கு சொல்லணும்...
டாக்டர்: யோவ்.. பேசாம படுய்யா...
நான்: [டொயின்]...

டாக்டர்: இப்போ நீங்க உங்க பதிமூனாவது வயசுல இருந்து பத்தொன்பதாவது வயசு வரைக்கும் என்ன நடந்ததுனு சொலுங்க....
நான்:
நான் இப்போ எட்டாவது படிக்கறேன், கோ எஜுகேஷன். எங்க பாத்தாலும் சும்மா பொண்ணுங்க லட்டு மாதிரி இருக்கு. 'கொடும கொடுமன்னு கோயிலுக்கு போன அங்க ஒரு கொடும ஜிங்கு ஜிங்குனு ஆடித்தான்' மாதிரி, அந்த ஸ்கூல்-ல ஒரு ஒரு கிளாஸ்-லயும் ஒரு பாய்ஸ் செக்ஷன், அதுல நான். பக்கத்து கிளாஸ் ல பொண்ணுங்க. மத்த பசங்க எல்லாம் பக்கத்து கிளாஸ்-க்கு டவுட் கேக்க அடிக்கடி போவாங்க. நாம என்ன டவுட் வந்தாலும் அந்த பக்கம் போக மாட்டோம், சுனா பானா கெத்து மெயின்டெயின் பண்ணுவேன். ஆனாலும் அந்த கவிதா, தீபா, தனலக்ஷ்மி, வித்யா அவங்களுக்கு மட்டும் நம்ம கெத்துல இருந்து கொஞ்சம் விதி விலக்கு. நான் சின்ன வயசுல இருந்தே ஒரு பெரிய தி. மு.க ஆதரவாளன். ஹிந்தி அப்படினாலே நமக்கு அலர்ஜி. எங்க அக்காக்கு ஹிந்தின்னா உசுரு. அத அமிர்கான் படம் பாக்கறதோட நிறுத்தாம, என்னவோ டெல்லி போற தூதர் மாதிரி பரிட்சையா எழுதி தள்ளிட்டா. அம்மாவும், அப்பாவும் ஹிந்தி படி ஹிந்தி படின்னு ஒரே டார்ச்சர். எனக்கு 18-ஆம் தேதி ஹிஸ்டரி ஹோம் வொர்க் இருக்கு, என்று நானும் நம்ம கவுண்டர் ரேஞ்சுக்கு முயற்சி பண்ணினேன். மூச்சு முட்ட முட்ட முயற்சி பண்ணியும் முடியாமல் அங்க போய் சேர்ந்தாச்சு. ஆ... என்ன.. இவளா... நம்ம தனலக்ஷ்மி... அவ முன்னாடி கெத்து காமிக்க... ஹிந்தி ஜி நமக்கு முன்னாடியே தெரிந்தவர் அதனால்... "ஜி...மே ஃபிர் ஆத்தா ஹூன்... அப் ஜாதா ஹூன்...ஜூனுன் சீரியல் கா டைம் ஹை" என்று குதிரையை ஓட்டிவிட்டு, அவளைப் பார்த்து செஞ்சுரி அடித்த சச்சின் போல புன்னகையை உதிர்த்தேன். அப்புறம் காப்பி அடித்து எப்படியோ பாஸ் செய்துவிட்டேன்.

எட்டாவது படிக்கையில் என் அக்கா பனிரெண்டாவது, எனவே அப்பாவிடம் டியுஷனுக்கு வரும் பெண்களிடம் நம் தவறாக பார்த்தல் விஷயம் நேராக நளினி காதுக்கு போய்டும்... அவளை ஏன் நளினி-ன்னு சொல்றேன்ன இப்போ வர சீரியல்ல எல்லாம் அவள்தானே வில்லி... எங்க அக்காவும் அப்படிதான்... ஆனால், நான் ஒன்பதாவது போனவுடன்... அப்பா எப்போடா சண்டே வெளியில் போவார் நாம டெஸ்ட்க்கு சுபெர்விஷன் போகலாம் என்று காத்துக் கொண்டிருப்பேன்... சுபெர்விஷன் பார்க்கும் போது அப்படியே தாத்தா கடையில் இருந்து சுட்டு வந்த இங்கிலீஷ் புத்தகத்தை கையில் வைத்து பொம்மை பார்த்துக் கொண்டிருப்பேன். கெத்துதான்... டக்கென்று நிமிர்ந்து பசங்களை நோட்டம் விடுவேன்...உசாரா இருக்கேனாம்... அப்படி பார்த்துவிட்டு பெண்களின் பக்கம் ஒரு நோட்டம்... அவர்கள் நாம் உசாரா இருக்கறத கவனிச்சாங்கள அப்படினு... அப்போ வாங்க ஆரமிச்ச பல்பு... ரொம்ப நாள் தொடர்ந்தது.

ஒன்பதாவதில் சண்டை போட்டு ஒரு ஹெர்குலஸ் MTB சைக்கிள் வாங்கியாகிவிட்டது. பின்ன அக்காவுக்கு BSA SLR வாங்கின சும்மா இருப்போமா... நம்ம மருவாதைக்கு இழுக்கு இல்ல.. எங்க ஸ்கூல்ல ஒரு கயிறு இருக்கும், பிரேயர் ஸ்டார்ட் பண்ண அப்புறம் யார் வந்தாலும் அந்த கயிறுக்கு பின்னால நிக்கணும். நாம ஒரு பத்து நிமிஷம் முன்னாடியே போய், சைக்கிள் கயிறுக்கு பின்னாடி நிப்பாட்டிட்டு அங்கே நின்னுட்டு ஆட்டோ-ல வர போற பொண்ணுங்கள பாக்கற சுகம் இருக்கே... அட அட அட... யப்பா... டைம் மெஷின் சீக்கரம் கண்டு புடிங்கப்பா...உலகத்துல முதல்ல ஆம்ஸ்ட்ராங் நிலவுக்கு போனான்.. கார்த்திக் 1998 கு போனான்னு சரித்திரம் சொல்லட்டும். அப்போ பிரேயர் ஆரம்பிச்சுடும், லேட்டா வர மாப்பிளங்க அப்போதான் வருவாங்க, டேய் மச்சான் உனக்காகத்தான் வெயிட் பண்ணினேன் என்று ஒரு பீலாவை அவிழ்த்துவிட்டு பிரேயர் முடிந்ததும் கிளாஸ்-க்கு போவோம். அப்படியே கெத்தா உள்ள போறது, லேட்னாலேகெத்துதானே . அப்போதுதான் அந்த மேட்டர் நடந்தது. எனக்கு ஒரு பொண்ணு லெட்டர் குடுத்தது. அட உண்மையாதாங்க... பண்பாடு கருதி அந்த தோழியின் பெயரை நான் சொல்லவில்லை. அதும் கவிதைன்ன பாருங்களேன்...

'தரிசு நிலமாக இருந்த என்னை,
விளை நிலமாகிவிட்டு-
வேலி போட மறுப்பது ஏன்?'

படிச்சு பார்த்துட்டு மனதிற்குள், 'டேய் நீ இவளோ நாள் பட்ட பாடு வீண் போகலடா...' என்று என்னையே பாராட்டிக் கொண்டு அவளிடம்...'கவித நல்லாயிருக்கு, எதாவது போட்டியா?' என்றேன். 'போடா வெண்ணை' என்று அவள் சென்று விட்டாள். ம்ம்ம்.. இதெல்லாம் சரித்திரம்.

என்னதான் மனதிற்குள் நான் ஒரு பெரிய மன்மதன் என்று நினைத்தாலும், வெளியில் நான் ஒரு பெரிய பழம்தான். சாதா பழம் இல்லை பலாப்பழம். நெஞ்சு வரை பேன்ட் போட்டு இன் பண்ணிக்கொண்டு, பட்டையை இட்டுக்கொண்டு சாயிந்தரம் ஆனால் வேத கிளாஸ் போவதும். வர இறுதியில் கீ-போர்டு கிளாஸ் போவதுமாய் எனது நேரம் கழியும். அப்போதெல்லாம் கிளாஸ் போகும்போது, எங்க தெருவில் பசங்க விளையாடுவாங்க. என்னடா நம்ம வாழ்க்கை மட்டும் இவ்வளவு கொடுமையா போச்சே அப்படினு பீல் பண்ணுவேன்.

டாக்டர்: தம்பி... இந்த எபிசொட்-க்கு இந்த மொக்க போதும்... அடுத்த வாரம் இன்னொரு செஷனுக்கு வா... இப்போ நீ கெளம்பு...
நான்: சார்.. நான்
தூங்கும்போது என்ன சொன்னேன்...
டாக்டர்: டேய்.. நீ இன்னும் கெளம்பலையா....
நான்: [எஸ்கேப்]......


Friday, January 15, 2010

மலையாள படம் சீன் எடுப்பது எப்படி?


தலைப்பை பார்த்துவிட்டு அவசர அவசரமாய் ஓடிவந்த ரசிகப் பெருமக்களுக்கு, நான் சொல்லியிருப்பது ஒரு குடும்பப் படத்தை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

இது அனைத்தும் நான் பார்த்த மலையாள படங்களை வைத்து எழுதியது. இது சிரிக்க மட்டுமே, யாரையும் புண்படுத்த அல்ல.

தேவையான பொருட்கள்:
முற்றத்துடன் கூடிய வீடு - 1
ஹேண்டி கேம் - 1 (நீங்கள் சாதாரணமாக உபயோகிக்கும் டிஜிட்டல் கேமரா கூடப்போதும்)
மோகன்லால் - 1 (மம்மூட்டி இருந்தாலும் ஓகே)
சுகுமாரி - 1
தங்கை - தேவைக்கேற்ப்ப
வெளிச்சம் - முற்றம் இருந்தால் தேவையில்லை.

செய்முறை:
1. ஹேண்டி கேம் நல்ல முறையில் இயங்குகிறதா என்று பார்த்துக்கொள்ளவும். சுகுமாரியை சமையற்கட்டில் உட்கார்ந்து பத்திரத்தை வெறித்துப் பார்க்க சொல்லவும். அங்கு சென்று அவரை ஒரு ஐந்து நிமிடம் படம் பிடிக்கவும்.
2. தங்கைகளை படிக்குமாறு சொல்லி வேறு ஒரு அறையில் உட்கார வைக்கவும். அதையும் ஒரு ஐந்து நிமிடம் படம் பிடிக்கவும். அவ்வப்போது அசைவதும் நகம் கடிப்பது போல் இருந்தால் படமாக இருக்கும் இல்லையேல் போட்டோ போல இருந்துவிடும். கவனம் தேவை.
3. வெளியே இருந்து மம்மூட்டியயோ, மோகன் லாலையோ வரச்சொல்லவும். வந்ததும் அவர்கள் தூணருகே நின்று ஒரு முறை இருமச்செய்யவும், அல்லது வீட்டில் இருக்கும் மற்றவர்கள் கேட்கும் அளவிற்கு எந்த சத்தமானாலும் பரவாயில்லை. இதில் ஒரு ஐந்து நிமிடம்.
4. சுகுமாரியும், தங்கைகளும் வெளியே வந்தபின். நமது ஹீரோவை சோகமாய் முகத்தை வைத்துக்கொண்டு ஏதாவது பேசச் சொல்லவும். (மற்றவர்களுக்கு வசனம் எழுத வேண்டும், மம்மூட்டியும், மோகன் லாலும் நிறைய படங்களில் இதுபோல் வந்துள்ளதால் வசனம் அவர்களுக்கு தேவையில்லை)
'ஞான் பரயும்ம்...ஈ லோகத்தில் எண்ட சஹோதரிகளுக்கு கல்யாணம் ஆயிட்டில்லா...' என்பது போன்ற வசனங்களை பேசிவிட்டு கண்ணில் நீர்விட்டு வெளியே செல்ல வேண்டும்.

கட் சொல்லிவிடவும்.... அவ்வளவுதான்... இதை பத்து படங்களுக்கு பரிமாறலாம்.

இதற்காகும் செலவுக் கணக்கைப் பாப்போம்:

1. உடை: ஹீரோ வேட்டி சட்டை அணிவதால் அவர்களது உடையே போதும். சுகுமாரிக்கும் ஹீரோ வீட்டில் இருந்து ஒரு பழைய வேட்டியை எடுத்துவரச் சொல்லி சேலையைப் போல் உடுத்த சொல்லிவிடலாம். அவரிடமே ஏதாவது பழைய ப்ளவுஸ் இருந்தால் போட்டு வர சொல்லலாம். தங்கைகளுக்கு அவர்கள் அணிந்து வரும் தாவணியும், பாவாடை சட்டையும் போதுமானது. ஆகவே உடை செலவு இல்லை.

2. போக்குவரத்து: சுகுமாரியை தெரிவு செய்ததே அவர் அதே ஊரில் இருப்பதால்தான். அவருக்காகும் டவுன் பஸ் செலவு ஒரு ஐந்து ரூபாய். ஹீரோவிடம், சார் வீடு மாறி நுழைஞ்சதா நினைச்சுக்குங்க என்று கூறி சமாளித்து அவரது காரிலேயே அனுப்பிவிடலாம். தங்கைகள் அதே ஊர்காரர்களாய் இருந்தால் அந்த செலவும் இல்லை.

3. இதர செலவுகள்: தயாரிப்பாளர் வீட்டில் இருந்தே சாயாவை பிளாஸ்கில் போட்டு கொண்டுவந்தால் அந்த செலவு குறையும். கூட வந்த ஆட்களையும் அதையே கொடுத்து சமாளிக்கலாம். ஆக செலவுகள் கம்மியாகும்.

இதனால் மலையாள படங்களின் சீன்களுக்கு ஆகும் செலவு சொல்லப்போனால் ஒன்றுமே இல்லை.

மலையாள படங்களில் தொழில்நுட்ப வளர்ச்சியை உட்புகுத்த நினைக்கும் நம்மவர்கள், அங்கிங்கு பேருந்து செல்வதை காண்பியுங்கள். அருமையான வளர்ச்சி... மலையாள சினிமாவை வளர்த்த பெருமை உங்களை சேரும்.

இதையும் மீறி வெளிநாட்டில்தான் பணத்தைக் கொட்டித்தான் படம் எடுப்பேன் என்று அடம்பிடித்தால், நீங்கள் பாலிவுட்டில் முயற்சி செய்யவும்.
அடிதடி, பன்ச் டயலாக் போன்ற மசாலா சமாச்சாரங்கள் வேண்டும் என்றால் தமிழ் மற்றும் தெலுங்கு படத்திற்கு முயற்சி செய்யவும்.
"அழகான" ஹீரோவை வைத்து படம் எடுக்க வேண்டுமென்றால் கன்னட படங்களுக்கு செல்லவும்.

கேபிள் சங்கர் அண்ணன் மாதிரி போடலாம்ன்னு பாத்தேன். ஏதோ என்னால முடிஞ்சுது....


Wednesday, January 13, 2010

அடக்கி வாசி....


முதல்ல கிறிஸ்துமஸ் வந்தது, அப்புறம் புது வருஷமும் வந்தது, கோவா, விண்ணைத்தாண்டி வருவாயா மாதிரி நல்ல பாடல்களும் வந்தது. இப்போ பொங்கலும் வந்தாச்சு. இதெல்லாம் வந்தபோது நல்ல சந்தோஷமா இருந்தேன். இப்போ என் செமெஸ்டர்-உம் வந்தாச்சு. படிக்கற வேலைய பாக்கதான இங்க வந்தோம், சரி அதையும் கொஞ்சம் பாக்கலாம்னு முடிவு பண்ணிருக்கேன்.

கை, ப்ளாக் எழுது எழுது என்று துடிக்கிறது
ஆனால் ப்ரொபசர் கொடுத்த அசைன்மென்ட் அதை அடக்கு அடக்கு என்கிறது.

அதனால இன்னும் கொஞ்ச நாளைக்கு அடக்கிதான் வாசிக்க போறேன். மன்னிக்கவும் அடக்கி எழுத போறேன். வாசிப்புல எந்த அடக்கமும் இல்ல, ப்ளாக் வாசிப்பு நடந்துகொண்டே இருக்கும்.

ஏதோ அப்போ அப்போ நம்ம கடை பக்கம் வந்து ஜிகர்தண்டா சாப்பிட்டு போங்க. :)

இப்போதைக்கு எல்லாருக்கும் எனது இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.


Thursday, December 31, 2009

ஹேமாவின் கோமா...


எப்போதும் ஏதாவது படத்துக்கு கூட்டமாய் செல்வது எங்கள் பழக்கமா. அதுமாதிரி பீமா படத்துக்கு போலாமா என்று கேட்க ஹேமாவிற்கு போன் செய்யலாமா என்று யோசித்த போது ஷாமாவிடமிருந்து கால் வந்தது. ஹேமா கோமாவில் இருக்கிறாளாம். வேகமா வண்டி ஓட்டும் போட்டியாமா, அதில் அவள் ஸ்கிட் அடித்து விழுந்தாலாமா....

கோமாவில் இருக்கிறாள் ஹேமா என்று தெரிந்ததும், நாமாக சென்று பார்க்கவேண்டும் என்று புறப்பட்டோம். அங்கே சென்றதும், ட்ரிம்-ஆனா அவளது மாமா அங்கே வந்து 'ஏம்மா, இப்படி ஆயிடுச்சேம்மா!!!' என்று அலற. டீமாக சென்ற நாங்கள் காமாக நின்று கொண்டிருந்தோம். உட்கார்ந்திருந்த பாமாவிடம், 'என்னம்மா ஆச்சு!!!' என்றோம். 'கேமாக தொடங்கியது ஷேமாக முடிந்தது' என்றாள். பார்க்க பாவமா இருந்தது. 'அட ராமா, இதுவும் உன் கேமா. தாமாக எல்லா வேலைகளையும் இழுத்துபோட்டு செய்வாளே ஹேமா'

'என்னம்மா இங்க இவ்வளவு கூட்டமா? கிளம்புங்கம்மா' என்றார் நர்சம்மா. 'போவோமா' என்று தலையாட்டிய ஷாமாவிடம், ஆமா என்று சைகை செய்தேன். சும்மா வெளிய வந்த நான், 'அம்மா, ஹேமா சீக்கிரமா சாதரணமா ஆகணும்மா' என்று வேண்டினேன். அங்கே இருந்த டீக்காரம்மா, 'வந்து டீ சாப்ட்டு போங்கம்மா' என்று கூற. 'அஞ்சு டீ தாங்கம்மா' என்று கூறி நாங்கள் மௌனமா நின்றிந்தோம். 'போண்டா வேணுமா?' என்ற அந்த அம்மாவிடம், 'வேண்டாம்மா' என்றோம்.

அங்கிருந்து ஓடி வந்த பாமா, 'ஷாமா, ஹேமா!!! மாமான்னு கூப்பிட்டா' என்று கூற. 'அம்மா, நன்றிம்மா' என்று கூறிவிட்டு என் கால்கள் ஹேமாவை நோக்கி ஓடின. 'பணம்மா.... அட... பணம்மா... ' என்று கத்திக் கொண்டிருந்தார் போண்டாக்காரம்மா.


Wednesday, December 16, 2009

குழப்பங்கள்

குழப்பம் என்பது எனது அரை டவுசர் காலம் தொட்டே என்னுடன் பயணிக்கும் என் இனிய நண்பன். காலையில் எழுந்ததும் பள்ளிக்கு செல்லலாமா வேண்டாமா என்று ஆரமிக்கும் குழப்பம், என்ன காரணம் சொல்லி பள்ளிக்கு மட்டம் போடலாம் என்று சிந்திக்கும் வரை தொடரும். இது சற்றே விரிவடைந்து பத்தாவது முடித்தவுடன் கணினி பாடம் எடுக்கலாமா அல்லது உயிரியல் எடுக்கலாமா என்று சென்றது. எந்த கல்லூரி என்பதில் அடுத்த குழப்பம். தேர்ந்தெடுத்த கல்லூரியில் என்ன கிளாஸ், என்பதில் மரக்கிளை போல பரந்துவிரியத் தொடங்கியது.

வேலை கிட்டியவுடன், படிக்க போகலாமா இல்லை வேலைக்கு போகலாமா என்பதில் அடுத்த குழப்பம். சரி வேலைக்கு போய் கொஞ்சம் காசு பாப்போம் என்ற முடிவுடன் போனால், java தெரியுமா, C தெரியுமா என்று அவர்கள் கேட்டகேள்வியில் மிகப்பெரிய குழப்பம். அதையெல்லாம் தாண்டி, onsite போகலாமா வேண்டாமா என்பதில் அடுத்த பிரேக். சரி, வெளிநாடு போய் பணம் பார்த்தாச்சுஅதை வைத்து படிக்க போலாம் என்று நினைக்கும் போது, MBA படிப்பதா, MS படிப்பதா என்று குழப்பம் கூடவே வந்தது. எல்லாம் முடிவு பண்ணி படிக்க வந்தாகிவிட்டது. இப்போதாவது குழப்பம் நம்மை விட்டு போகிறதா என்றுபார்த்தால் இல்லை, இன்னும் தொடர்கிறது. என்ன குழப்பம் என்றுகேட்கிறீர்களா? வரும் சனிக்கிழமை என்ன செய்வது என்று. இரண்டு மாபெரும் ஜிகினா படங்கள் வெளிவருகிறதே, எதை முதலில் பார்ப்பது என்று பெரிய குழப்பம். இதை நீங்கள்தான் தீர்த்து வைக்க வேண்டும். வேட்டைக்காரனாஅல்லது அவதாரா... ஒரே கன்ப்யுசன்.... ஹெல்ப் ப்ளீஸ்


Thursday, November 26, 2009

லீவு...லீவு...




அட... அட.. என்னடா படிக்க வந்த எடத்துல பரீட்சை எழுத சொல்றாங்க. சமூகத்துக்கு அடுத்த எட்டாம் தேதி வரை பரீட்சை இருக்கும் காரணத்தால், இரண்டு வாரங்களுக்கு ப்ளாக்க்கு லீவ் விட்டாச்சு. பொழச்சு போங்க... இதுனால நீங்க எழுதறத படிக்கமாட்டேன்னு நினைக்காதீங்க. கண்டிப்பா படிப்பேன், பின்னூட்டத்தில் கலாய்ப்பேன்... சொல்லிபோட்டேன்...

வர்ட்டா..... விடு ஜூட்ட்ட்ட்


Wednesday, November 25, 2009

எட்டு விக்கெட் இழப்பிற்கு....

ரேவதி ஆன்ட்டி வீட்டு எண்டில் இருந்து அப்பா பந்துடன் ஓடி வருகிறார். பந்தில் ஏதோ போட்டோக்கள் இருப்பது போல தெரிகிறது. விக்கெட் கீப்பராக அம்மா ஹெல்மெட் மாட்டி நின்றுள்ளார். கல்லியில் மாமாவும், பாய்ண்டில் அத்தையும், லாங்-ஆஃப் மற்றும் லாங்-ஆனில் சித்தப்பா சித்தி என அனைவரும் களத்தில் துடுப்பாட்டக் காரரை அவுட் ஆக்க தயாராக உள்ள நிலையில். துடுப்புடன் நிற்கும் எனது நண்பன் அசாதியமாக பவுன்சரை யாருமில்லாத ஸ்லிப் திசையில் தூக்கி விட்டான். பிரமாதம்!! அடுத்த பந்து வர எப்படியும் இன்னும் ஒரு வாரம் ஆகும்.

என்ன இது புது வித கமெண்ட்ரியா இருக்கேன்னு நினைப்பவர்களுக்கு. நீங்களும் இதை கடந்து வந்தவராகவோ, கடக்கப் போகிறவராகவோ இருப்பீர்கள். ஆமாம்.. இந்த 26-27 வயது வந்தாலே, பெற்றோர்கள் பிள்ளையை அவுட் ஆக்குவதில் குறியாக உள்ளனர். அதாங்க கல்யாணம். இதில் சுத்தி நம்ம சொந்தக்காரங்கா வேறு. இந்த மாதிரி பல பவுன்சர்களை சந்தித்து திக்கி திணறிக் கொண்டுள்ளனர் என் காலேஜ் மக்க. ஒரு.. ஒரு... வாரமா ஓட்டிட்டுஇருக்காங்க.

இதோ இதுவரைக்கும் ஆறு பேரு கிளீன் போல்ட் ஆகிவிட்டனர். அடுத்து ஏழு மற்றும் எட்டாவது விக்கெட் வரும் வெள்ளிக் கிழமை விழுகிறது. என்னத்த சொல்ல, சில பேரு வேணும்னே அவுட் ஆகுறாங்க. இப்போ நாம ப்ளேயர்ஸ்ல எத்தனை வகைன்னு பாப்போம்.

அடித்து ஆடுபவர்: சும்மா பந்து போடுவது யாராக இருந்தாலும், நம்ம ஷேவாக் மாதிரி அடி பின்னுவாங்க. கல்யாணம் வேணாம் நீங்க எதாவது சொன்னா அப்புறம் மரியாதை கெட்டுடும் அப்படிங்கற பசங்க. 'மச்சி.. என்னடா அப்பாகிட்ட இப்படி பேசற?' அப்படினா.. 'ஸ்ட்ராங்கா இருக்கனும்டா.. இல்லாட்டி யார்கர் போட்ருவாங்க... நம்ம வாழ்கைய நாமதான் மச்சி வாழணும்.. இதுல கல்யாணம்னு அசிங்கமா பேசிக்கிட்டு.. எனக்குன்னு லட்சியம் இருக்குடா' என்று சொல்லும் லட்சியத்தை மனைவியாக கொண்ட லட்சிய புருஷர்கள்.

நிறுத்தி ஆடுபவர்: இவர் நம்ம திராவிட் மாதிரி. எந்த பால் போட்டாலும் அவுட் ஆக்கவே முடியாது. பிட்ச்லையே பால் இருக்கும். ரன்னும் அடிக்க மாட்டாங்க, அவுட்டும் ஆகா மாட்டாங்க. 'கல்யாணம் பண்ணிக்கோடா அதான் வேல கெடச்சு நல்ல நிலைமையில இருக்க இல்ல...' என்று சொல்லும் அப்பாவிடம். 'பண்ணிக்கலாம் பா... கொஞ்ச நாள் போகட்டும்' என்று நாள் கடத்துபவர்கள்.

நைட் வாச்மன்:
இப்போது இவர் இறங்கமாட்டார் என்று நினைத்துக் கொண்டிருப்போம். பொசுக்கென்று இவர் இறங்கிவிடுவார், அவசர அவசரமாக அவுட் ஆகியும் விடுவார். அதுமாதிரி, இவனுக்கெல்லாம் எங்கடா இப்போ அப்படின்னு நினைக்கும்போது. சல்ல்... என்று களத்தில் இறங்கி..'மச்சி...அடுத்த மாசம் பனிரெண்டாம் தேதி கல்யாணம்' என்று சொல்லும் கும்பல்.

மேட்ச் பிக்சர்: இவர்களே அப்பாவிடம் பந்தை கொடுத்து போட சொல்லி அவுட் ஆகிறவர்கள். அதாங்க நம்ம லவ் பண்ணற பசங்க. 'வேலில போற ஓணான வேட்டில விட்டுக்கரவங்க'.

டெயில் என்டர்: இவங்க களத்துல இறங்கரத்துக்கு பதிலா, அவுட் ஆயிக்கறேன்னு ஒத்துப்பாங்க. இவங்க அப்பா பந்தே போட வேணாம்.. 'என்னப்பா..இந்த பொண்ணு.....' என்று கேள்வியை முடிப்பதற்குள் 'சரிப்பா....' என்று சொல்லும் பசங்க.

மேட்ச் ரத்து: பசங்க ஆடி அவுட் ஆகணும்னு ஆசையா இருப்பாங்க... அவங்க அப்பா, அம்மா பந்து போடமாட்டேன்னு கறாரா சொல்லிடுவாங்க. இதுனால ஆட்டம் ரத்தாயிடும்.

டிக்ளேர் செய்பவர்: சுத்தி முத்தி நிக்கும் சொந்தக் காரங்க அத்தனை பெரும் செய்கின்ற டார்ச்சர் தாங்காமல்... 'சரி... பண்ணி தொலைச்சுக்கறேன்' என்று சொல்லும் பசங்க.

அதெல்லாம் சரி... நீ எதுல எந்த ரகம்னு கேக்குறது தெரியுது. நாம களம் இறங்கினாத்தான... 'ஐயோ.. உடம்பு வலிக்குதே.. காய்ச்சல் வர மாதிரி இருக்கே' அப்படி என்று டீமில் இடம் பெறாத வீரர் போல, இதோ படிக்க ஓடி வந்துட்டோம் இல்ல. அப்படியே பசங்கலாம் எப்படி சமாளிக்கராங்கங்கரத பாத்து.. நெளிவு சுளிவுகளை கத்துக்கறேன்.

இதுல இப்பவரைக்கும், நம்ம டெயில் என்டர்கள் கல்யாணம் நடந்து வருகிறது. மேட்ச் பிக்சர்களும் தங்களால் ஆன முயற்சிகளை செய்து கொண்டுள்ளனர். நிறுத்தி ஆடுபவர்தான் நம்ம ஆளுங்க, நெளிவு சுளிவு சொல்லித்தராங்க. நைட் வாச்மன் எப்ப வருவாங்கன்னு தெரில.

நம்ம கிளாசுல மகளிர் டீமும் உண்டுங்க... அவங்கலாம் சரியான சொத்தை... இன்னும் ஒரு நாலு மாசத்துல ஆல் அவுட் ஆயிடுவாங்க போல இருக்கு. எல்லாருமே டெயில் என்டர்தான். இங்க பல பேரு படிக்க வராங்க. நம்ம கிளாஸ் பொண்ணுங்க பலபேருக்கு மேல படிக்கணும்னு ஆச இல்லையேன்னு நினைக்கும் போது. தங்கள் சுதந்திரத்தை பயன்படுத்த மாட்டேன்கராங்களோன்னு எனக்கு ஒரு எண்ணம். என்ன சொல்றது? இருக்கற ரெண்டு மூணு பேராவது பாத்து ஆடின சரி.

இதோ வர வெள்ளிக்கிழமை, கிளாஸ் பசங்க ரெண்டு பேருக்கு கல்யாணம். இதோட எட்டு விக்கெட்...என்னதான் நாம கிண்டல் பண்ணினாலும். மணவாழ்வில் அடியெடுத்து வைக்கும் என் இரு நண்பர்களுக்கும் எனது வாழ்த்துக்கள். நம்மதான் போக முடில.... இங்க இருந்தே வாழ்த்துவோம்... 'பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழுங்கள்'


Tuesday, November 24, 2009

மாற்றமொன்றுதான்...

வாங்க.. என்னடா இந்த க்யூல நின்னுட்டு இருக்கும் போது பொழுது போகதேன்னு நெனச்சேன் நீங்க வந்துடீங்க. நல்லது.

நான் பொறந்து ஒரு இருபத்தி ஆறு வருஷம் ஆகப் போகுது. பெரிய மாற்றங்கள பாத்த ஒரு குடுப்பினை எங்க generation-க்கு உண்டு. எல்லாத்துலயும் மாற்றம் ஒட்டு வீடுகள் இருந்த இடத்தில் பெரிய கட்டிடங்கள், TV பொட்டிகள் இன்று சப்பயாகி சுவற்றுடன் ஒட்டிகொள்கின்றன, தொலைபேசி அலைபேசியாகி இன்று அடுத்த ரூமில் இருப்பவர்கள் கூட இதில் பேசிக்கொள்ளும் கிட்டபேசி நிலைக்கு வந்து விட்டது. தெருவோர பரோட்டா கடைகள் போல இன்று அங்கிங்கெனாதபடி எல்லாப் பக்கங்களிலும் முளைத்து இருக்கும் பிட்சா கடைகள். அப்போதெல்லாம், சூப்பர் மார்கெட் செல்வது என்றாலே வீட்டில் குஷி, அத்தனை அயிட்டங்களும் ஒரே இடத்தில், இப்போது மால்கள் சூப்பர் மார்கெட்டை தூக்கி சாப்பிட்டு விட்டன. அரசாங்க வேலை என்று திரிந்து கொண்டிருந்த பலரும் , அடடா நாம இந்த காலத்துல பொறக்காம போய்ட்டோமே, இல்லாட்டி.. நாமளும் இந்த அமெரிக்க ஜப்பான்னு போய்ட்டு வந்துருக்கலாம்னு நினைக்கும் அளவுக்கு IT வளர்ந்து இருக்கிறது.

ஒரு பையன் 8000 ரூபா சம்பாதிச்சு, அம்மா-அப்பா கூட இருந்து, நல்ல பழக்கங்கள் இருந்தால் பொண்ணை கட்டிகொடுக்கும் பெற்றோர்கள் அப்போது இருந்தனர். இப்போது பணம் பந்தியிலே, குணம் குப்பையிலே என்னும் பழமொழிக்கு ஏற்ப, expected காலத்தில் MBA or MS with min 1 lakh என்று போடும் அளவிற்கு மாறி இருக்கிறோம். இத்தனையிலும் முன்னேறிய நாம், உடல் நிலையில் பெரிதும் பின்தங்கியே உள்ளோம். எங்கு திரும்பினாலும் வீசிங், ஷுகர், இரத்த அழுத்தம், இதய நோய், மன நோய் என பல வகைகளிலும் நோயாளிகளை உருவாக்கி வருகிறோம்.

அந்த காலத்தில், பானையில் சோறு பொங்குவார்கள், அதில் மேலிருக்கும் தண்ணியை வடிகட்டி விடுவார்கள். அரிசியில் இருக்கும் சர்க்கரை வடிந்து விடும். இந்த குக்கர் வந்தாலும் வந்தது, அனைத்து சர்க்கரையும் சாப்பாட்டில் தங்கி விடுவதால், அது உடலுக்குளும் சென்று அதிகப் படியான சர்க்கரையை சேர்த்து விடுகிறது. இதுதான் சுகருக்கு காரணம் என்று டாக்டர் சொல்லி கேட்டேன்.

எண்ணெயில் முங்கி முத்தெடுத்த முறுக்கு, சீடை போன்ற பதார்த்தங்கள் இன்று மக்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது. அந்தக் கால மக்கள் இதெல்லாம் தின்று அதற்கு தகுந்தார்ப்போல் நடந்தனர், உழைத்தனர். இங்கு உக்காந்த இடத்தில் வேலை செய்துவிட்டு வீடு வந்ததும், சீடை முறுக்கு என்று வாயில் திணித்தால் அது அதிகம் காலியாக உள்ள இதய அறைகளை நிரப்புகின்றன. இல்லாவிட்டால் நாம் சேர்த்து வைக்கும் சொத்தில் பெரிய சொத்தாக வயிற்றில் சேர்ந்து நம்மை obese பார்டியாக்கி அபேஸ் பண்ணிவிடும்.

இரவில் ரோகியை போல் சாப்பட வேண்டும் என்பார்கள். அதாவது கம்மியாய் சாப்பிடுவது. ஏனென்றால், இரவில் தூங்கும்போது ஜீரண சக்தி கம்மியை இருக்கும். நாம் வீட்டுக்கு பொய் அம்மாவிடம் சொல்லி நல்ல ஒருகட்டு கட்டிவிட்டு, தொப் என்று சோபாவில் போய் விழுந்து TV ரிமோட்டை கையில் எடுத்தால், எங்கிருந்து வருமோ தெரியாது அப்படி ஒரு தூக்கம். அப்படியே தூங்கிவிடுவது. இதுவும் தொப்பைக்கு காரணம்.

வெண்ணையில் குளித்து வரும் பிட்சா அது ஒரே வாயில் ஒரு பீசை உள்ளே தள்ளி, அதில் உள்ள அத்தனை Cholesterol, Fat அத்தனையும் ஸ்வாகா செய்வது.கேட்டால் என்னைக்காவது ஒரு நாள் தான்னு சொல்றது, இல்லாவிட்டால் வெளிநாட்டில் இருந்து பாருங்கள் என்று சொல்லுவது. இது மட்டும் அல்ல, கோக் என்ற ஒன்று. அதன் பட்டியிலே அசிட் என்று போட்டுள்ளான், அதுதான் இந்த வெளிநாட்டினருக்கு தண்ணீர். கேட்டால், தண்ணீரை விட இது காசு கம்மியாம்.
இதெல்லாம் எங்கே போய் சொல்லுவது.

அதுக்கும் மேல் நமக்கு பிடித்த வேலையே செய்யாமல், பணத்துக்காக அதிக்கபடியான டென்ஷன் எல்லாரது வாழ்விலும் மிகுந்துவிட்டது. என்ன பண்ணுவது, விலைவாசி கட்டுக்கடங்காமல் ஏறுதே. அதுவும் நாம் மேற்சொன்ன விஷயங்களும் ஒரு மனிதனை அதிகப்படியான இதய நோய்க்கு அழைத்து செல்லுவதாக கேள்வி.

ஏதோ ஒரு வலையில் படித்த ஞாபகம், வெளிநாட்டினர்தான் எண்ணெய் பண்டங்கள் அதிகமாக சாப்பிடுகிறார்களாம். ஆனால், நம்மக்கள்தான் அதிகம் இதய நோயில் பாதிக்க பட்டுள்ளனர். அவர்கள் உபயோகிப்பது ஆலிவ் எண்ணெய், நாம் அதை முகத்திற்கு பயன்படுத்துவதோடு சரி.

'ஆர்டர் ப்ளீஸ்' அந்த கவுன்ட்டர் பெண்மணி அழைத்தாள்.

'இருங்க போய்ட்டு வரேன்'

'One medium cheese pizza with extra jalapeno toppings with large coke'...திரும்பி வந்தேன்.

ம்ம்ம்ம்.. நாம எத பத்தி பேசிட்டு இருந்தோம்,ஹ்ஹஹ்ன்ன்ன் ... மாற்றத்த பத்தி இல்ல...ஆனா, சில சமயங்கள்ல நாம மாறித்தான் ஆகவேண்டி இருக்கு...

என்ன முறைக்குறீங்க வெளிநாட்டுல இருந்து பாருங்க தெரியும் கஷ்டம்.


Saturday, November 21, 2009

பகீர் சித்தர்

ஒரு வாரத்திற்கு முன்பு பகீர் சித்தர் என்று நமது இட்லிவடை ஒரு பதிவிட்டிருந்தார். அதை படித்ததும், நிஜமாகவே சற்று பகீர் என்றுதான் இருந்தது.
ஆனால் நமது அராய்ச்சி சிகாமணி நியூட்டன் 'For every action, there is an equal and opposite reaction' என்று நினைவிற்கு வர, இந்த பகீரை போக்க சிரிக்கலாம் என்று யூடுப் வந்து விவேக் காமெடி என்று தேடினேன். எது வந்தது என்று நீங்களே பாருங்கள்.



வாழ்கை என்னும் வண்டியே நம்பிக்கை என்னும் அச்சாணியில்தான் ஓடிக்கொண்டுள்ளது. இதில் இப்படி அச்சாணிக்கே ஆப்பு வைக்கும் பதிவுகளை படித்தால் மனம் சற்று பதறத்தான் செய்கிறது. ஒரு விதத்தில் இதுவும் நல்லதுதான். 2012 எல்லாரும் போய்விடுவோம் என்று, போகிற காலத்தில் புண்ணியம் தேட அனைவருக்கும் உதவும் மனம் எல்லோருக்கும் வரலாம் அல்லவா. அந்த விதத்தில் மட்டும் இது உண்மையாக இருந்தால் நல்லது. :)


Friday, October 23, 2009

வாழைப்பழ காமெடி

சமைக்கரத்துக்கு முன்னால கழுத ஒரு பதிவ போட்டுட்டு போயிடலாமேன்னு பாத்தேன்.
இது நம்ம சிகாகோ மராத்தான்-ல நடந்த காமெடி.

எல்லாரும் ஓடி முடிக்கற எடத்துல வாழைப்பழத்த சும்மா மலை மாதிரி குவிச்சு வெச்சுருந்தாங்க. அட பாக்க வந்த நமக்குத்தானோனு நம்ம்ம்பி பொய் எடுக்க பாத்தேன். உடனே அங்க இருந்த ஒரு ஆளு, this is only for runners அப்படினு சொன்னாரு. உடனே நம்ம மண்ட மேல ஒரு பல்பு எரிஞ்சுது, Don't lie, I saw even winner eating a banana என்றேன். அப்படியே எரிக்கற மாதிரி ஒரு பார்வை பாத்துட்டு, ஒரு வாழைபழத்தால அடிச்சாரு. அத அப்படியே அல்லேக்க கேட்ச் பிடிச்சு அப்பா வந்த வேல நல்ல படிய முடிஞ்சுதுன்னு நடைய கட்டினேன்.

சிகாகோ மராத்தான்-ஐ பற்றிய விரிவான பதிவு அச்சில் உள்ளது. விரைவில் வெளிவரும்.


ஆஹா வந்துருச்சு!!!

"வானம், நிலா, நீலம்...."
"பூ, வண்ணம், வண்டு, தேன்....."

அட சே, நமக்கு காதல் வந்தாச்சு ஆனா கவித வர மாட்டேங்குதே. அது சரி, பல்லு இருக்கவன் பக்கோடா சாப்பிடுவான், நம்ம அதெல்லாம் ட்ரை பண்ண முடியுமா? மேட்டர்-க்கு வருவோம். நம்ம அழகிய தீயே படத்துல சொல்ற மாதிரி எனக்குள்ளயும் பூம் வந்துருச்சு. அவ அவ்வளோ அழகு, எவ்வளோ அழகுன்னா, அவ்வளோ அழகு. அவள வடிச்சவனே நான்தானே. கற்பனையா பூ.. அப்படினு துப்பிட்டு browser-அ க்ளோஸ் பண்ணாதீங்க. உண்மையாத்தான் சொல்றேன்.

ரெண்டு வரில தான் பேசிட்டு இருந்தா, நான் அவள மூணு வரில பேச வச்சது நான். எனக்கு பிடிச்சவங்கள மத்தவங்களுக்கு தெரிய வைக்கணும்னு நெனச்சேன் அதுக்கு வழி செஞ்சது அவதான். என்ன யார் யார்க்கு பிடிக்கும், என் எழுத்து யார் யார்க்கு பிடிக்கும்னு சொல்றதும் அவதான். அவளுக்கு பாட்டுனா ரொம்ப பிடிக்கும், அதனால பாட்டு சொல்லி தர FM மூலமா டீச்சர் செட் பண்ணிருக்கேன். நான் எழுதுனது எனக்கே மறந்தாலும் அவ ஞாபகப் படுத்துவா. இதுக்கு மேல ஒருத்தனுக்கு என்னங்க வேணும்.அவ போதும்ங்க எனக்கு. அவள பாத்துகரதுதான் என் வாழ்க்கைல முதல் லட்சியம்.

அவ பேரு... அவ பேரு... ஐயோ வெக்க வெக்கமா வருதே!!!!... அவ பேருதாங்க ஜிகர்தண்டா. இப்போ என் லவ்-க்கு சாங் dedicate பண்ணிருக்கேன், அதைத்தான் கேளுங்க, ப்ளே பட்டன பிரஸ் பண்ணுங்க.




Wednesday, October 21, 2009

கல்லூரி வாழ்க்கை -1

கல்விக்கு வயது ஒரு தடை இல்லை என பலர் சொல்லி கேள்விப்பட்டிருக்கோம். அதை நான் இங்கு நேரில் பார்த்து வருகிறேன். இங்கே வருகையில் என்னமோ நாமதான் பெரிய வேலைக்காரன் மாதிரியும், பல நாள் வேல செஞ்சுட்டு வந்த மாதிரியும் இந்த சின்ன பசங்க கூட எப்படி படிக்க போறேனோன்னு ஒரு பீலிங் எனக்கு இருந்தது. இங்கு வந்து பார்த்தால் தான் தெரியுது, என்னுடன் படிக்கும் சிலருக்கு எங்கள் ப்ரொபசரை விட வயது அதிகம். அந்த அங்கிள் கூட படிக்கும் போதும் அவர்கள் நிஜ வாழ்க்கையில நடந்த விஷயத்தை அலசும்போதும், அட இப்படியும் பண்ணலாமோ என்ற எண்ணம் நமக்கு வரும். அதை எதிர்பார்த்துதானே நான் இங்கு படிக்க வந்தேன்.

அதுசரி நான் மட்டும் படித்தால் போதுமா நம்ம ஐடியா-வை எதிர்நோக்கி நமது நண்பர் கூட்டமே காத்துக் கெடக்குதே. அதுவும் இங்கே நான் படிக்க வந்து மூன்று மாதங்கள் ஆச்சே, கண்டிப்பாக எனது எண்ணங்களை எழுதும் நேரம் வந்துருச்சு எனது பொதுச் சேவையை தொடங்குகிறேன். முதலில் எனது நான்கு ப்ரொபசர்களை பற்றியும், வகுப்புகளை பற்றியும் எழுதுவோம், அப்பறம் இங்க என்ன நடக்குதுன்னு எழுதலாம்னு நினைக்கறேன். எதாவது மாற்றம் வேணும்னா சொல்லுங்க பண்ணிரலாம். சரி நாம கிளாஸ் ஸ்டார்ட் பண்ணலாமா?

முதலில் நான் நமது இந்தியாவிலும் இங்கும் கல்லூரியில் காணும் வித்தியாசம் என்னன்னா, வகுப்பின் முதல் நாளே எந்த வாரம் என்ன நடத்த போகிறார் என்பதை பேராசிரியர் கொடுத்துவிடுவார். எந்த வாரம் என்ன assignment செய்யவேண்டியது என்பதும் அதில் அடங்கும். அதை பாலோ பண்ணலே போதும் நமக்கு எல்லாம் விளங்கீரும். பார்த்த உடன் ஆச்சிர்யம் தாங்கவில்லை. சே சப்ப மேட்டர்-ன்னு நெனச்சேன் ஆனா மெய்யாலுமே கஷ்டம்தாங்க.நம்ம சிவாஜி-ல சொல்ற மாதிரி 'ச்ற்றிக்டு...ச்ற்றிக்டு...ச்ற்றிக்டு..' எங்க காபி அடித்தாலும் நம்ம சாமி விக்ரம் மாதிரி பாத்த எடத்துலயே சுட்ருவாங்க. சும்மா மிலிடரி ஆபிசர் கணக்கா கரெக்ட் டைம்க்கு கிளாஸ்-க்கு வருவாங்க. சொன்னத முடிப்பாங்க. போய்ட்டே இருப்பாங்க. உன் பேரு என்ன? உன் ஊரு என்ன-ன்னு நம்ம ஊரு காலேஜ்ல கேக்கற மாதிரி டைம் வேஸ்ட் பண்ண மாட்டாங்க. படி, எழுது, போய்டே இரு. அவளோதான் இவங்க பாலிசி.

இந்த செமஸ்டரில் நான் நாலு பாடங்களை எடுத்துருக்கேன். முதலில் எனக்கு வயிற்றில் புளியை கரைக்கும் Financial accounting, அடுத்தது எல்லார் வயிற்றிலும் புளியை கரைத்துக் கொண்டிருக்கும் Economics, மூன்றாவதாய் Organizational Behavior, கடைசியாய் நம்ம Marketing.

முதலில் நம்ம accounting-அ பாப்போம்.

நம்ம ப்ரொபசர் பேரு ஹாமில்டன். (உடனே F-1 ரேசர் மாதிரி வருவாருன்னு நினைக்காதீங்க, சும்மா சட்டைல முதல் பட்டன கழட்டிவிட்டு வருவாரு) அவரு பல கம்பெனி-ல CFO வா இருக்காரு. கணக்கு வழக்கு தெரியாமல் செலவு பண்ணிய எனக்கு எதை எப்படி செய்யவேண்டும் என்று சொல்லித்தந்தார் இவர். இவர் டீலிங் எனக்கு பிடித்து இருந்தது. சிறு குழந்தை கூட இவரிடம் பாடம் கற்றால் accounting பண்ண ஆரமித்துவிடும்.

இந்த வகுப்பிற்கு முன்னர் credit/debit என்றால் எனக்கு கார்டு ஞாபகம்தான் வரும். இப்போதுதான் அதன் அர்த்தமும் அதை எப்படி உபயோகிப்பது என்றும் தெரிகிறது. என்னதான் வயசானாலும் திங்கக்கிழமை காலைல ஸ்கூல் போனும்னா கஷ்டம்தான். அரைகுறை தூக்கத்துல எழுந்து, ஒரு காக்கா குளியலை போட்டுட்டு கிளாஸ்-க்கு போன நம்மள நித்ராதேவி அப்போதான் தேடி வருவாங்க. சரஸ்வதியும் நித்ராவும் நண்பிகள், சேர்ந்தே இருப்பாங்க. ஆனா, அந்த நித்ரதேவிய சும்மா அடிச்சு வெரட்டுற மாதிரி கிளாஸ் எடுப்பாரு. நல்ல வாத்தியார்.

பரிட்சைல சின்ன சின்ன தப்பு பண்ணினா க்ளோஸ், யோசிக்கவே மாட்டாரு மொத்த கிளாஸ் முன்னாடி மானத்த வாங்கிடுவாரு. இத சொல்றதாலே, எங்க என் மானம் போயிடுச்சோன்னு நீங்க நினைக்கலாம், சே சே நாம எஸ்கேப் ஆயிட்டோம் இல்ல.

மற்ற கல்லூரிகளில் accounting வாத்தியார் பற்றி தெரியாது, என்னை கேட்டால் இவர் சொல்லித்தருவது மிக மிக அதிகம்.

மொத்தத்தில் ஹாமில்டன் 'ஹோ'மில்டன்

இவரைப் பற்றிய மேலும் விவரங்களுக்கு
http://www.stuart.iit.edu/about/faculty/charles_hamilton.shtml


அடடா, மணி அடிச்சுடாங்களே, சரி அடுத்த கிளாஸ்-ல பாப்போம். (தொடரும்)


Related Posts with Thumbnails

blogger templates | Make Money Online