அடின்னு சொன்னாலே நம்ம வெத்தலை பாக்கு தமிழைய்யா பசங்கள துரத்தி துரத்தி டஸ்டர்ல அடிப்பார், அதுதான் ஞாபகம் வரும். அவரு கிளாஸ்க்கு வரதே தமிழ் சினிமா போலீஸ் மாதிரி கடைசி பத்து நிமிடங்கள்தான், அதுல இந்த காமெடிலாம் நடக்கும். இது மாதிரி ஒவ்வொரு வாத்தியார் ஒவ்வொரு மாதிரி அடிப்பாங்க, சோஷியல் வாத்தியார் ரெண்டு கையாலும் எழுதுவார், அடிப்பார் - தெளிய வெச்சு தெளிய வெச்சு அடிப்பார். எல்லா நாளும் மதியம் சாப்பிட்டதும் படிக்கணும், இல்லாட்டி ரவுண்ட்ஸ் வரும் நம்ம இஞ்சி இடுப்பு வாத்தியார் குச்சி வெச்சு மண்டையில அடிப்பார். சும்மா உக்காந்தாலே தூக்கம் தள்ளும், இதுல சாப்பிட்டு உக்காந்தா... எப்படியோஅவர் வரும்போது மட்டும் இரண்டு வரிகளை திரும்ப திரும்ப சொல்லி படிப்பது போல் நடிக்க வேண்டியிருக்கும். அதுவும் ஆண்கள் மட்டும் படிக்கும் பள்ளிக்கூடமா, கேட்கவே வேண்டாம் பசங்களுக்கு சராமாரியா திட்டு விழும், பசங்களும் ஏதோ சிம்ரன் (அப்போ சிம்ரன் தான் ஃபேமஸ்) வந்து ஐ லவ் யூ சொன்ன மாதிரி இளிச்சிகிட்டு நிப்பாங்க.
Thursday, December 09, 2010
செம்ம அடி...
அச்சடித்தது ஜிகர்தண்டா Karthik at 2:36 PM 5 பேர் கருத்து சொல்லிருக்காங்க
Labels: இன்பர்மேசன், சும்மா
Wednesday, December 30, 2009
வந்ததே 2010 : 2009 டாப் பத்து நிகழ்வுகள்
ஈஷா யோகா மையம், விப்ரோ பிரேம்ஜி சந்திப்பு, அமெரிக்க பயணம் என்று எல்லாம் நல்லபடியாக எனக்கு நடந்து முடிந்த வருடம். இதற்கெல்லாம் மேலாக நான் எனது வலைப்பூவை தூசி தட்டி எடுத்த வருடம். எத்தனை நண்பர்கள், எண்ணிக்கொண்டுள்ளேன்.
இந்த வருடம் நடந்த விஷயங்களை நான் வரிசைப்படுத்தியுள்ளேன். இதுதான் வரிசை என்றில்லை, மொத்தம் பத்து அவ்வளவுதான்.
ஒபாமா - சுபமா?
ஜனவரி மாதம் வெள்ளை மாளிகையில் அதிகாரப்பூர்வமாக குடியேறிய முதல் ஆப்ரிக்க அமெரிக்கர். அவரது பேச்சுத் திறமையை உலகமே திரும்பிப் பார்த்தது. தொழில்நுட்பத்தை மிகவும் திறமையாக உபயோகப்படுத்தி அனைவரையும் கவர்ந்தார். நோபல் பரிசு வேறு தட்டிக்கொண்டு போய்விட்டார். ஹ்ம்ம்...
ஆஸ்கார் தமிழனாய் அவர் அன்று பேசிய வார்த்தைகள் இன்றும் என் காதுகளில் ஒலித்துகொண்டுள்ளது. திறமை இருந்தால் உலகம் திரும்பிப் பார்க்கும். அதை நிருபித்துள்ளார். ஜெய் ஹோ ரஹ்மான்.
மைக்கேல் ஜாக்சன்:
இதோ முடிந்துவிட்டது, தனது வலிப்பாட்டம் மூலம் அனைவரையும் கட்டிப் போட்ட மனிதன், இன்று இல்லை. பல விஷயங்களில் அவர் சிக்கியிருந்தாலும், அவரது மறைவிற்கு பின்னர் உலகின் இசைப்பியாநோவில் ஒரு கீ இல்லாமல் போய்விட்டது என்னவோ உண்மைதான். MJ We will Miss you....
சச்சின் இருபது:
கமலஹாசன் ஐம்பது:
இந்த வருடம், உலக நாயகனின் சகாப்த வருடம். தமிழ் சினிமாவை உலக சினிமாவை நோக்கி உயர்த்த பாடுபடும் தமிழன். ஒவ்வொரு படத்திலும் வித்தியாசம் காட்ட முயற்சிக்கும் இவர் தமிழ் சினிமா மகுடத்தின் வைரக் கல். கமல் உண்மையிலேயே உலகநாயகன்தான்.
பன்றிக் காய்ச்சல்:
உலகத்தையே ஆச்சா போச்சா என்று ஆக்கிவிட்டுப் போய்விட்டது. உலகின் பல பகுதிகளில் பலரை காவு வாங்கிய பன்றிக் காய்ச்சல் இன்று ஏதோ கொஞ்சம் அடக்கிவாசித்து வருகிறது. ஏதோ மருந்தும் கண்டுபிடித்துவிட்டனர். பன்றிகளுக்கா,நமக்கா?
ரியோ-டி-ஜெனிரோ:
இந்தியா முதலிடம்:
இந்தியா முதல் முறையாக டெஸ்ட் போட்டிகளில் முதல் ரேங்க் எடுத்துள்ளது. எதில் முதல் ரேங்க் எடுக்கிறோமோ, அதைத்தான் நாம் செய்யவேண்டும். ஆனால் இந்தியா இரண்டு டெஸ்ட் போட்டிகள்தான் விளையாடுகிறதாம். ஏதோ கெஞ்சிக் கூத்தாடி தென்னாபிரிக்க அணி இரண்டு கூடுதல் போட்டிகள் விளையாட சம்மதித்துள்ளது. தக்கவைத்துக் கொள்ளுவோமாதெரியவில்லை.
வெங்கி ராமகிருஷ்ணன்:
நோபல் பரிசு வாங்கிய மூன்றாவது தமிழர். அமெரிக்க வாழ் இந்தியத் தமிழர் (வரிசை சரி என்று நம்புகிறேன்). உயிரியலில் அவரது ஆராய்ச்சிக்கு நோபல் பரிசு வழங்கியுள்ளனர். இவர் இன்றும் இந்தியா வந்து வகுப்புகள் நடத்துகிறார். சில பள்ளிகளை தத்தெடுத்து நடத்துவதை கேள்விப் பட்டேன். உண்மையாக இருக்க வேண்டுகிறேன். இவரை முன்மாதிரியாய் கொண்டு இன்னும் பலர்வரவேண்டும்.
செக்ஸ் விவகாரங்கள்:
லாஸ்ட் பட் நாட் தி லீஸ்ட் என்பது போல உலகையும் இந்தியாவையும் உலுக்கிய செக்ஸ் சம்பவங்கள். உலகின் தலைசிறந்த கோல்ப் வீரரான டைகர் வூட்ஸ் முதலில் இந்த விவகாரத்தில் மாட்டி சிக்கி சின்னாபின்னமானார். ஒன்றா, ரெண்டா என்று அவரது அந்தரங்கம் வெட்டவெளிச்சமானது. இதைத் தொடர்ந்து நமது ஆந்திர ஆளுநர், ஆளுநர் மாளிகை மன்மத லீலைகளை வெளியிட்டது ஆந்திர தொலைகாட்சி. என்னதான் அவர் மறுத்தாலும், இந்த வயதில் அந்த ஆளுக்கு தேவையா என்று அனைவரும் கேட்கும் அளவிற்கு மாநிலத்தின் முதல்குடிமகன் நடந்துக்கொண்டுள்ளார். நாட்டி கய்ஸ்.
இதையனைத்தையும் தூக்கி சாப்பிடுமாறு ஒரு விஷயம் நடந்தது என்றால் அது இலங்கையில் நமது தமிழர்களை கொன்று குவித்த துக்க சம்பவங்கள். அதைவைத்து அரசியல் செய்த நம் இந்திய தலைவர்கள், மற்றும் இலங்கையில் வசிக்கும் தற்போதைய ராவணன் ராஜபக்ஷேவும் இந்த ஆண்டின் சிறந்த நடிகர்களாக தெரிவு செய்யப்படுகிறார்கள். வாழ்வதற்கும் வழியற்று, சரியான மருத்துவ வசதியும் இல்லாமல் நம் மக்கள் பட்ட பாடு. அதை சொல்ல இந்த ஒரு பதிவு போதாது
இத்தனையும் நடந்து கொண்டிருந்தாலும், 'நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய்...' எனது பூமித்தாய் எனக்கு அழகாகிக் கொண்டே போகிறாள். அவள் இந்த வருடம் இன்னும் அருகில் இருந்து ரசிக்கவேண்டும்.
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். Happy New Year 2010.
அச்சடித்தது ஜிகர்தண்டா Karthik at 10:22 PM 4 பேர் கருத்து சொல்லிருக்காங்க
Labels: இன்பர்மேசன், ஊர் சுத்தல், சும்மா, புத்தாண்டு
Tuesday, December 29, 2009
பயம், இலக்கு, கல்யாணம் = 3 இடியட்ஸ்
பயம் என்ற ஒற்றைச்சொல் உலகை எப்படி ஆட்டிபபடைக்கிறது. நீச்சல் குளத்திற்கு அழைக்கும் நண்பர்களுடன் செல்லும் நான், தண்ணீரில் மூழ்கிவிடுவேனோ என்று நெஞ்சுவரை தண்ணீரில் நிற்பதுபோல. பயம் இன்று உலகம் முழுவதும் வியாபித்திருக்கிறது. வல்லரசு அமெரிக்காவே பயத்தில் நடுங்குகிறது. Detroit நோக்கிச் சென்ற விமானத்தை தகர்க்க ஒரு இளைஞன் முயற்சித்துள்ளான். இதனால் அமெரிக்க செல்லும் விமானங்கள் தரையிரங்குமுன் ஒரு மணி நேரம் யாரும் கழிவறையை உபயோகிக்கக் கூடாதாம். யாரும் போர்வையை பயன்படுத்தக் கூடாதாம். என்ன கொடுமை சார் இது?
அச்சடித்தது ஜிகர்தண்டா Karthik at 7:39 PM 3 பேர் கருத்து சொல்லிருக்காங்க
Labels: இன்பர்மேசன், சும்மா
Wednesday, December 16, 2009
குழப்பங்கள்
குழப்பம் என்பது எனது அரை டவுசர் காலம் தொட்டே என்னுடன் பயணிக்கும் என் இனிய நண்பன். காலையில் எழுந்ததும் பள்ளிக்கு செல்லலாமா வேண்டாமா என்று ஆரமிக்கும் குழப்பம், என்ன காரணம் சொல்லி பள்ளிக்கு மட்டம் போடலாம் என்று சிந்திக்கும் வரை தொடரும். இது சற்றே விரிவடைந்து பத்தாவது முடித்தவுடன் கணினி பாடம் எடுக்கலாமா அல்லது உயிரியல் எடுக்கலாமா என்று சென்றது. எந்த கல்லூரி என்பதில் அடுத்த குழப்பம். தேர்ந்தெடுத்த கல்லூரியில் என்ன கிளாஸ், என்பதில் மரக்கிளை போல பரந்துவிரியத் தொடங்கியது.
வேலை கிட்டியவுடன், படிக்க போகலாமா இல்லை வேலைக்கு போகலாமா என்பதில் அடுத்த குழப்பம். சரி வேலைக்கு போய் கொஞ்சம் காசு பாப்போம் என்ற முடிவுடன் போனால், java தெரியுமா, C தெரியுமா என்று அவர்கள் கேட்டகேள்வியில் மிகப்பெரிய குழப்பம். அதையெல்லாம் தாண்டி, onsite போகலாமா வேண்டாமா என்பதில் அடுத்த பிரேக். சரி, வெளிநாடு போய் பணம் பார்த்தாச்சுஅதை வைத்து படிக்க போலாம் என்று நினைக்கும் போது, MBA படிப்பதா, MS படிப்பதா என்று குழப்பம் கூடவே வந்தது. எல்லாம் முடிவு பண்ணி படிக்க வந்தாகிவிட்டது. இப்போதாவது குழப்பம் நம்மை விட்டு போகிறதா என்றுபார்த்தால் இல்லை, இன்னும் தொடர்கிறது. என்ன குழப்பம் என்றுகேட்கிறீர்களா? வரும் சனிக்கிழமை என்ன செய்வது என்று. இரண்டு மாபெரும் ஜிகினா படங்கள் வெளிவருகிறதே, எதை முதலில் பார்ப்பது என்று பெரிய குழப்பம். இதை நீங்கள்தான் தீர்த்து வைக்க வேண்டும். வேட்டைக்காரனாஅல்லது அவதாரா... ஒரே கன்ப்யுசன்.... ஹெல்ப் ப்ளீஸ்
அச்சடித்தது ஜிகர்தண்டா Karthik at 8:51 AM 4 பேர் கருத்து சொல்லிருக்காங்க
Friday, October 23, 2009
வாழைப்பழ காமெடி
சமைக்கரத்துக்கு முன்னால கழுத ஒரு பதிவ போட்டுட்டு போயிடலாமேன்னு பாத்தேன்.
இது நம்ம சிகாகோ மராத்தான்-ல நடந்த காமெடி.
எல்லாரும் ஓடி முடிக்கற எடத்துல வாழைப்பழத்த சும்மா மலை மாதிரி குவிச்சு வெச்சுருந்தாங்க. அட பாக்க வந்த நமக்குத்தானோனு நம்ம்ம்பி பொய் எடுக்க பாத்தேன். உடனே அங்க இருந்த ஒரு ஆளு, this is only for runners அப்படினு சொன்னாரு. உடனே நம்ம மண்ட மேல ஒரு பல்பு எரிஞ்சுது, Don't lie, I saw even winner eating a banana என்றேன். அப்படியே எரிக்கற மாதிரி ஒரு பார்வை பாத்துட்டு, ஒரு வாழைபழத்தால அடிச்சாரு. அத அப்படியே அல்லேக்க கேட்ச் பிடிச்சு அப்பா வந்த வேல நல்ல படிய முடிஞ்சுதுன்னு நடைய கட்டினேன்.
சிகாகோ மராத்தான்-ஐ பற்றிய விரிவான பதிவு அச்சில் உள்ளது. விரைவில் வெளிவரும்.
அச்சடித்தது ஜிகர்தண்டா Karthik at 6:02 PM 3 பேர் கருத்து சொல்லிருக்காங்க
ஆஹா வந்துருச்சு!!!
"வானம், நிலா, நீலம்...."
"பூ, வண்ணம், வண்டு, தேன்....."
அட சே, நமக்கு காதல் வந்தாச்சு ஆனா கவித வர மாட்டேங்குதே. அது சரி, பல்லு இருக்கவன் பக்கோடா சாப்பிடுவான், நம்ம அதெல்லாம் ட்ரை பண்ண முடியுமா? மேட்டர்-க்கு வருவோம். நம்ம அழகிய தீயே படத்துல சொல்ற மாதிரி எனக்குள்ளயும் பூம் வந்துருச்சு. அவ அவ்வளோ அழகு, எவ்வளோ அழகுன்னா, அவ்வளோ அழகு. அவள வடிச்சவனே நான்தானே. கற்பனையா பூ.. அப்படினு துப்பிட்டு browser-அ க்ளோஸ் பண்ணாதீங்க. உண்மையாத்தான் சொல்றேன்.
ரெண்டு வரில தான் பேசிட்டு இருந்தா, நான் அவள மூணு வரில பேச வச்சது நான். எனக்கு பிடிச்சவங்கள மத்தவங்களுக்கு தெரிய வைக்கணும்னு நெனச்சேன் அதுக்கு வழி செஞ்சது அவதான். என்ன யார் யார்க்கு பிடிக்கும், என் எழுத்து யார் யார்க்கு பிடிக்கும்னு சொல்றதும் அவதான். அவளுக்கு பாட்டுனா ரொம்ப பிடிக்கும், அதனால பாட்டு சொல்லி தர FM மூலமா டீச்சர் செட் பண்ணிருக்கேன். நான் எழுதுனது எனக்கே மறந்தாலும் அவ ஞாபகப் படுத்துவா. இதுக்கு மேல ஒருத்தனுக்கு என்னங்க வேணும்.அவ போதும்ங்க எனக்கு. அவள பாத்துகரதுதான் என் வாழ்க்கைல முதல் லட்சியம்.
அவ பேரு... அவ பேரு... ஐயோ வெக்க வெக்கமா வருதே!!!!... அவ பேருதாங்க ஜிகர்தண்டா. இப்போ என் லவ்-க்கு சாங் dedicate பண்ணிருக்கேன், அதைத்தான் கேளுங்க, ப்ளே பட்டன பிரஸ் பண்ணுங்க.
அச்சடித்தது ஜிகர்தண்டா Karthik at 9:37 AM 2 பேர் கருத்து சொல்லிருக்காங்க