காந்தியை பற்றி பேசினாலே நோபல் பரிசு தராங்களாம். அப்படி பாத்தா நம்ம சஞ்சய் தத்க்குதான் நோபல் பரிசு தரணும். நெல்சன் மண்டேலா, தலாய் லாமா இப்போ நாம ஒபாமா. எல்லாரும் காந்திய பாலோ பண்றவங்க.
அது சரி காந்திக்கு நோபல் பரிசு. அவருக்கு ஏற்கனவே 'நோ பல்', அதனால விட்டுட்டாங்களோ. கடவுளுக்குதான் வெளிச்சம்.
Friday, October 09, 2009
காந்திக்கு நோ பல்
அச்சடித்தது ஜிகர்தண்டா Karthik at 5:54 PM 0 பேர் கருத்து சொல்லிருக்காங்க
Wednesday, October 07, 2009
நம்ம ஊர்க்காரர் ஒருத்தர் நோபல் பரிசு வாங்கிட்டார்
நோபல் பரிசு வாங்கும் மூன்றாவது தமிழர்,
சந்திரசேகர வெங்கடராமன் - 1930
சுப்ரமணியன் சந்திரசேகர் - 1983
வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் - 2009
ஆனால், அவர் அமெரிக்க குடிமகன். எங்க இருந்தா என்ன தமிழர் அவளோதான்.
இதில் வெங்கட்ராமன் சந்திரசேகர் என்ற பெயர் சுற்றி சுற்றி வந்துள்ளது. அடுத்து யாருக்கு மகன் பிறந்தாலும் இந்த பெயரை வைக்குமாறு கேட்டுகொள்கிறேன். மொத்தம் வாங்கிய ஏழில் மூன்று தமிழர்களுக்கு என்று கூறும்போது, ஒரு தமிழனாக எனக்கு பெருமையாகதான் உள்ளது. உங்களுக்கும் இருக்கும் என நம்புகிறேன்.
பதிவு போட்டால் மட்டும் போதுமா அவர் எதுக்கு நோபல் பரிசு வாங்கினாருன்னு தெரிய வேணாமா. மேம்போக்கா சொல்லனும்னா, நமது உடலில் இருக்கும் ribosome-களின் அமைப்பை கண்டுபிடிப்பதுதான் அவரது ஆராய்ச்சி. அதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் உடலை பற்றிய இன்ன பிற விவரங்களை அறியலாம்.
அச்சடித்தது ஜிகர்தண்டா Karthik at 1:16 PM 2 பேர் கருத்து சொல்லிருக்காங்க
Tuesday, October 06, 2009
தமிழ் படமெல்லாம் ரீமேக்
இதை படித்த உங்களுக்கே இவ்வளவு அதிர்ச்சியா இருக்குன்னா, இதை கேட்ட எனக்கு எவ்வளவு அதிர்ச்சியா இருக்கும். மேலே படியுங்கள் கதையை.
நானும் என் நண்பரும் இன்று மாலை University of Chicago Booth School of Business -இல் நடந்த ஒரு Innovation பற்றிய கருத்தரங்கிற்கு சென்றுவிட்டு வந்து கொண்டிருந்தோம். என் நண்பர் பெங்களூர்க்காரர், தமிழ் நன்றாகவே பேசுவார், நம் பீட்டர் மணி போல் இல்லை. Innovation பற்றி பேசிக்கொண்டு வந்த போது, பேச்சு திசை மாறி மீடியா சினிமா என்று போனது. அவர் பொசுக்கென்று 'தென்னாட்டில் எல்லா படங்களும் ரீமேக்தான்' என்றார்.
அதற்கு பின் நடந்த உரையாடல் இதோ.
' என்ன கன்னட படங்களை பற்றி சொல்லுறீங்களா' - நான்.
' இல்ல தமிழ், தெலுங்கு, கன்னடம் எல்லாமே' என்றார்.
'Excuse me, எத வெச்சு அப்படி சொல்லறீங்க' என்றேன்.
'நான் பார்த்த படம் எல்லாமே அப்படிதான்'
'என்ன படம் பாத்தீங்க?'
'சந்தோஷ் சுப்ரமணியம், சம்திங் சம்திங், கில்லி' என்று என்னால் மறுக்க
முடியாத சில படங்களை சொல்லிக்கொண்டே போனார்.
'நீங்க தப்பான லிஸ்ட் படங்களை பாத்துருகீங்க. அன்பே சிவம், விருமாண்டி, பருத்தி வீரன், சுப்ரமணியுரம்' என்று நான் என் தரப்பு படங்களை சொன்னேன்.
'தெரில அதெல்லாம் பாத்தது இல்ல நான் பார்த்த வரைக்கும் this is my opinion' என்றார்.
'அப்போ நீங்க தமிழ் படமே பார்க்கல' என்று கூறிக்கொண்டிருக்கும் வேளையில் எங்கள் ஸ்டாப் வந்துவிட்டது.
ஒரு ரீமேக் குடும்பத்தால தமிழ் படங்களின் பார்வையே சில இடங்களில் வேறு மாதிரி உள்ளது. ஆனால் மகிழ்ச்சி அடைய வேண்டிய விஷயம் என்னவென்றால் பலர் தமிழ் படங்களின் மீது நல்ல அபிப்பிராயமும் கொண்டுள்ளனர். இதுக்கு நாம என்ன செய்ய முடியும். ஏதாவது நல்ல படம் வந்த டவுன்லோட் பண்ண லிங்க் அனுப்பலாம் அவ்வளவுதான்.:)
அச்சடித்தது ஜிகர்தண்டா Karthik at 11:46 AM 1 பேர் கருத்து சொல்லிருக்காங்க
Labels: சினிமா
Sunday, October 04, 2009
தமிழன் அடி வாங்குறான்
இதுவரையில் காலேஜ்-இலும் சரி, வேலை பார்க்கும் போதும் சரி. நமக்கு தெரிஞ்ச தமிழ் பேசும் பசங்களோட இருந்துட்டு. இப்போ சுத்தி பாக்கற பக்கமெல்லாம் வா ஹை போ ஹை தான். தமிழ் நாட்டுல இருந்து நாம வரதுக்கு முன்னாடியே, வட நாடுலிருந்து நானூறு பேரு வந்துட்டாங்க. 'க்யா கொடுமை ஹை சரவணன் ஜி'
நம்ம ரூம்-ல ரெண்டு பேரு, பீட்டர் மணியும், அல்போன்ஸ் ராஜும். பீட்டர் மணி பெங்களூர், சென்னைல கொஞ்ச நாள் வேல பாத்தானாம். தமிழ் பேசறேன்னு சொல்லுவான், பேசினா லக்கி மேன் கௌண்ட மணி பாம் மென்னு துப்பர மாதிரி பேசுவான். ஆனா பய புள்ள தப்பாதான் பேசறேன்னு ஒத்துப்பான்.
அல்போன்ஸ் ராஜ், மும்பைல இருந்து வந்தவன். தமிழ் பேசணும்னு அவனுக்கு ஆசைன்னு சொன்னான். 'டேய், கார்த்தி பின்னிட்ட ஒருத்தன் நீ பேசறத பாத்துட்டு தமிழ் கத்துக்கணும்னு ஆச படறான்' என்று நான் எனக்கே தோள் தட்டிக்கொள்ளும் போதே, 'Teach me few bad words man' என்றான். தட்டிய கைகள் அப்படியே நின்றன. அது என மாயமோ எனவோ தெரில, வட நாட்டு பசங்க தமிழ் கத்துக்கணும்னா, முதல்ல கெட்ட வார்த்தைதான் கேக்கரனுங்க. சொல்லி தந்தா முதல நம்மலதான் திட்டுவானுங்க. எத்தனையோ முறை வாங்கிய திட்டுக்கள், மாணவ பருவத்துல இதெல்லாம் சகஜமப்பா.
நம்ம ரூம்லதான் தமிழ் பேச முடியறதில்ல, நாம நட்பின் சிகரங்களுக்கவது போன் பண்ணலாம்னா. பெரிய அறிஞர் அண்ணா ரேஞ்சுக்கு கடமை கண்ணியம் கட்டுப்பாடுன்னு இருப்பாங்க. 'டேய் மீடிங்க்ல இருக்கேன் அப்பறம் கூப்பட்றேன்னு' வாய்குள்ள போன விட்டு பேசுவாங்க, இல்லாட்டி அவன் வாய்ஸ் மெசேஜ் கூட பேச வேண்டியதா இருக்கும்.
இதுல வீட்டுக்கு கூப்படலாம்னு என் போன்-ல இருந்து try பண்ணேன். வெள்ளைகாரி ஒருத்தி 'this facility is not available' அப்படினு சொல்றா. ஏதோ english தெரிஞ்சதால, (என்ன சிரிக்கற மாதிரி தெரியுது?) பொழச்சிட்டு இருக்கேன்.
இயக்குனர் சீமான், நீங்க சொன்னதுல தப்பே இல்ல, தமிழன் எங்க போனாலும் அடி வாங்குறான்.
PS: நாளைக்கு பரீட்சை இனிக்கு ப்ளாக் எழுதறேன்னா, எவளோ அடி பட்டிருபெனு நெனச்சு பாருங்க.
அச்சடித்தது ஜிகர்தண்டா Karthik at 5:16 PM 0 பேர் கருத்து சொல்லிருக்காங்க
