எனது கம்ப்யூட்டரில் இது வரையில் rss owl மூலம் பல ப்ளாக்களை தொடர்ந்து வந்தேன். முன்னெல்லாம், கூகிள் ரீடர் உபயோகித்தேன், அது சரிப்படவில்லை. rss owl அது அப்டேட் செய்துகொண்டே இருக்கும், உடனுக்குடன் பார்க்கலாம். நல்ல விஷயங்களுக்கு அது சரி, மற்றதற்கு.
விஷயம் என்றதும் என் நினைவிற்கு வருகிறது, விஷயத்திற்கு வருவோம். ப்ளாக்களை நான் தொடர்வதால் எப்போதும் ஏதாவது ஒரு ப்ளாக் அப்டேட் ஆகும்.
பல சமயங்களில் எனது படிப்பை அது கெடுத்துள்ளது. ஏதாவது அப்டேட் வந்தால் முதலில் அதைத்தான் படிப்பேன். அது எனக்கு சரியாகப்படவில்லை. ஒரு நாள் முழுவதும் அடுத்தவர் எழுதுவதை படிக்கிறோமே, எது தேவை என்று அறிந்து படிக்கிறோமா? என்று எனக்குள்ளே ஒரு கேள்வி கேட்டேன், பதில் தெரியவில்லை, ஏனென்றால் நான் அப்படி பாகுபடுத்தி பார்ப்பது இல்லை. எல்லாவற்றையும் படிப்பேன்.
இந்த வாரம் ஒரு முடிவு எடுத்து பல ப்ளாக்களை எனது கம்ப்யூட்டரில் இருந்து தூக்கி எறிந்துவிட்டேன். அதற்கு நான் சில காரணங்கள் வைத்து தூக்கி எறிந்தேன்.
முதலில், கெட்டவார்த்தைகள் அதிகம் பயன்படுத்தியவை. மனதில் நல்லவையே நினைக்கவேண்டும் என்று சொல்லிவிட்டு, படிப்பது கெட்டவயாக இருக்கக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில். கெட்ட வார்த்தை பயன்படுத்துபவர், கண்டிப்பாக கோபத்தில் ப்ளாக் எழுதியிருப்பார். கோபத்தில் பேசுவதை கேட்கவும் கூடாது. கோபத்தில் எழுதுவதை படிக்கவும் கூடாது.
இரண்டாவது, காமம் தலை தூக்கிய பதிவுகள் கொண்ட வலைப்பூ. காமம் என்பது விளையாட்டு பொருள் அல்ல, அதை அனைவருடனும் பங்கிட்டுக்கொள்ள. இவர்கள் காமத்தை வெறும் உடல் இச்சை என்று பார்பவர்கள். எனவே, அதற்கு அடுத்த கெட் அவுட்.
மூன்றாவது, தான் பெரிய எழுத்தாளன் என்று ஒன்றிரண்டு வலைபதிவாளர் சொன்னவுடன், தன் கதையை அனைவரும் படிக்கவேண்டுமென்ற ஆர்வத்தில் எழுதுபவர்கள். ஒரு சில கதைகள் நன்றாக இருந்தாலும், பல கதைகள் சரியாக இருக்காது. அதனால் மூன்றாவது கெட் அவுட்.
மேற்சொன்ன காரணத்தால்தான் நான் என் வலை பூவை மிக சிலருக்கு மட்டும் சொல்லுகிறேன். பலருக்கு இது பிடிக்காமல் போகலாம், மற்றவர் நேரத்தை வீணடிக்க நமக்கு அனுமதி இல்லை.
இதனால் உங்களுக்கு சொல்லுவது என்னவென்றால், எது நல்ல ப்ளாக் என்று நினைகிறீர்களோ அதை மட்டும் தொடருங்கள். மற்றதை இன்றே தூக்கி எறியுங்கள்.
அடடா பாத்தீங்கள என் மடியிலே கை வைக்கறீங்க, என்னோடது நல்ல ப்ளாக் பா.
Wednesday, October 14, 2009
படிப்பதெல்லாம் நல்ல ப்ளாக் அல்ல
அச்சடித்தது ஜிகர்தண்டா Karthik at 8:43 PM
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment