Thursday, December 09, 2010

செம்ம அடி...

அடின்னு சொன்னாலே நம்ம வெத்தலை பாக்கு தமிழைய்யா பசங்கள துரத்தி துரத்தி டஸ்டர்ல அடிப்பார், அதுதான் ஞாபகம் வரும். அவரு கிளாஸ்க்கு வரதே தமிழ் சினிமா போலீஸ் மாதிரி கடைசி பத்து நிமிடங்கள்தான், அதுல இந்த காமெடிலாம் நடக்கும். இது மாதிரி ஒவ்வொரு வாத்தியார் ஒவ்வொரு மாதிரி அடிப்பாங்க, சோஷியல் வாத்தியார் ரெண்டு கையாலும் எழுதுவார், அடிப்பார் - தெளிய வெச்சு தெளிய வெச்சு அடிப்பார். எல்லா நாளும் மதியம் சாப்பிட்டதும் படிக்கணும், இல்லாட்டி ரவுண்ட்ஸ் வரும் நம்ம இஞ்சி இடுப்பு வாத்தியார் குச்சி வெச்சு மண்டையில அடிப்பார். சும்மா உக்காந்தாலே தூக்கம் தள்ளும், இதுல சாப்பிட்டு உக்காந்தா... எப்படியோஅவர் வரும்போது மட்டும் இரண்டு வரிகளை திரும்ப திரும்ப சொல்லி படிப்பது போல் நடிக்க வேண்டியிருக்கும். அதுவும் ஆண்கள் மட்டும் படிக்கும் பள்ளிக்கூடமா, கேட்கவே வேண்டாம் பசங்களுக்கு சராமாரியா திட்டு விழும், பசங்களும் ஏதோ சிம்ரன் (அப்போ சிம்ரன் தான் ஃபேமஸ்) வந்து ஐ லவ் யூ சொன்ன மாதிரி இளிச்சிகிட்டு நிப்பாங்க.


அடிகள் ரெண்டு வகைப்படும், ஒன்னு முதலில் சொன்ன துடைச்சுவிட்டு போகும் சும்மா அடி, இன்னொன்னு, நான் சொல்லப் போகும் செம்ம அடி. செம்ம அடிங்கறது, மெண்ட்டலி பாதிக்கக் கூடிய அடி. இது வாங்கினால் சுலபத்தில் அழியாது. கடந்த வாரத்தில் இது போல இரண்டு விஷயங்கள் நடந்தது.

கிரிக்கெட் என்றாலே தாங்கள்தான் என்று மார்த்தட்டிக் கொண்டிருந்த ஆஸ்திரேலிய அணியை தற்போது முழு வேகத்தில் இயங்கும் இங்கிலாந்து அணி துவம்சம் செய்தது. ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சில் எங்கள் தெருவில் இருக்கும் வெங்கிட்டு தாத்தா வாக்கிங் ஸ்டிக்கால் சிக்ஸர் அடிப்பார். அவ்வளவு மோசம், கடந்த இரண்டு இன்னிங்ஸில் ஆறு விக்கெட் மட்டுமே எடுத்து கிட்டத்தட்ட 1150 ரன்கள் கொடுத்துள்ளனர். நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் ஓய்வு பெற்ற வார்னே மீண்டும் வரலாம் என்று பேச்சு எழுந்த்துள்ளது. இந்த நிலைமை நீடித்தால் டான் பிராட்மேன் கல்லறையிலிருந்து எழும் நாள் வெகு தூரத்தில் இல்லை. இதன் மூலம் என்ன தெரிகிறதென்றால், ரிக்கி பாண்டிங் ஒரு மொக்க கேப்டன், அவர் டீமில் இருந்த ஆட்கள் அவரை இவ்வளவு நாள் காப்பற்றி வந்துள்ளனர் என்பது உறுதியாகிறது. என்னதான் இன்னும் மூணு மேட்ச் இருக்குன்னாலும், ஆஸ்திரேலியா இதிலிருந்து வெளியே வருவது கஷ்டம்தான். தங்களுக்கு சாதகமாக பிட்ச் தயார் பண்ண சொல்லி அதில் செம்ம அடி வாங்கும் ஆஸ்திரேலிய அணியைப் பார்த்தா ஒரு வரி சொல்ல வேண்டும்... ‘வாட் அ பிட்டி...’

இன்னொரு மிக முக்கியமான சம்பவம். அமைதிக்கான நோபல் பரிசை இந்த முறை சீனாவைச் சேர்ந்த லியூ ஃசியாவ்போ என்பவர் பெற்றுள்ளார். அவர் ஜனநாயகத்திற்கு சாதகமாக எழுதிய கவிதையால் அவரை சிறை வைத்தது கம்யூனிச சீனா. அவருக்கு பரிசளித்ததையும் கண்டித்தது. அத்தோடு நில்லாமல், ஏதோ எனக்கு உடம்பு சரியில்ல அதனால பள்ளிக்கு லீவ் விடுங்க என்பது மாதிரி. யாரும் அந்த பரிசளிப்பு விழாவிற்க்கு செல்லக்கூடாது என்று சத்தம் போட்டு கத்தியது. இதனால் பாகிஸ்தான், வியட்னாம் போன்ற நாடுகள் செல்வதில்லையென முடிவெடுத்தது. இந்தியா என்ன செய்யும் என்று பலர் எதிர்பார்த்து காத்திருந்தனர். இதுவரையில் முதுகெலும்பு இல்லாமல் இருந்த இந்தியா முதல்முறையாக நிமிர்ந்து நின்று கண்டிப்பாக செல்வோம் என்று சொல்லியுள்ளது. குட்ட குட்ட குனிவார்கள் என்று எதிர்பார்த்த சீனாவிற்கு இது செம்ம அடி. அடுத்து என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். எங்கயாவது சீனா நமக்கு செம்ம அடி கொடுக்க போகுது... :)

நம்ம ரெண்டு அடியையும் பார்த்தச்சு, இன்னையோட பரிட்சை முடிஞ்சது வாத்தியார் செம்ம அடி கொடுக்கக் கூடாது... பார்ப்போம்...


Monday, December 06, 2010

சுடச்சுட பாடல்

இந்த காலத்துல நம்பி நல்ல பாட்டுன்னு ஒரு பாட்டு கேட்க முடியரதில்ல. நேற்று ‘வ குவாட்டர் கட்டிங்’ படத்தின் பாடல்களை கேட்டுக் கொண்டிருந்தேன். ’தேடியே..’ பாடல் நல்ல இருக்கேன்னு யூட்யூபில் தேடினேன். அப்போதான் தெரிஞ்சது அது சுட்ட பாடலென்று... அப்புறம்தான் இசையமைப்பாளர் யாருன்னு பார்த்தா நம்ம GV... அதாங்க தேவா இல்லாத குறைய தீத்து வைக்க வந்திருக்கும் வரப்பிரசாதம். சும்மா மரண காப்பி... இங்க கேளுங்க...


யூட்யூப் அது இதுன்னு இன்னிக்கு எப்படியோ மக்கள் கண்டுபுடிக்கறது தெரிஞ்சும் நம்ம GV சுட்றார்ன்னா.. அவர் தன்னம்பிக்கையை பாராட்டியேயாக வேண்டும். எதோ அந்த காலத்தில் தேவா மைக்கல் ஜாக்சனிடமிருந்து கொஞ்சம் ஆறிப்போன டீ, ஊசிப்போன வடை அந்த மாதிரி சுடுவார் மக்களுக்கும் தெரியாது, ஆனா நம்ம புள்ள சுடச்சுட போட்ற பணியாரத்த ஆட்டைய போட்றார்.

ஆயிரத்தில் ஒருவன் படத்துல ’உன் மேல ஆசதான்...’ பாட்டு சர்வம் படத்தின் ‘அடடாவா அடிக்கலாம்..’ மாதிரி இருந்தது. இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் படத்திலும் சரி ஆயிரத்தில் ஒருவனிலும் சரி ’பைரேட்ஸ் ஆஃப் கரீபியன்’ பின்னணி சரமாரியாக தெரிந்தது. இது எல்லாம் தெரிந்தும் அவருக்கு எதுக்கு சான்ஸ். சினி ஃபீல்டில் இருக்கும் கேபிள் சார் மாதிரி ஆட்கள் பதில் சொன்னால் நன்றாக இருக்கும்.
இதே போல யுவனும் வாமனன் படத்தில் ‘ஒரு தேவதை..’ பாடலை ஆஜா நச்லே படத்தில் வரும் ‘ஒரே பியா..’ என்னும் பாடலை தழுவி இசையமைத்திருப்பார். அதுவும் ஒரு சுடல்தான்.இதை இங்கே கேளுங்கள்.

எனக்கு தெரிஞ்சு நியாயமான இரண்டு இசையமைப்பாளர்கள், ஹாரிஸ் ஜெயராஜ் மற்றும் DSP - அவர்களது இசையை மட்டுமே காப்பியடிப்பார்கள். எப்போதும் ஹாரிஸ் ஜெயராஜின் பாடல்கள் ஒரே மாதிரிதான் இருக்கும்.

இப்படி ஆளளுக்கு சுட்டு சுட்டு பாட்டு போட்டா ஒரு மனுஷன் நம்பிக்கையோட ஒரு பாட்டு கேட்க முடியரதில்ல... இதுக்கு என்ன பண்ணலாம்.

டிஸ்கி: ’ஓரே பியா..’ பாடிய ராஹத் ஃபதே அலி கான், நுஸ்ரத் ஃபதே அலி கானின் சகோதரரின் மகன். முடிந்தால் அவரது அனைத்து படப்பாடல்கள் மற்றும் கவாலி பாடல்களை கேட்டுப் பாருங்கள்.


Thursday, November 25, 2010

கலாச்சாரம் எங்கே இருக்கிறது?

சுற்றிலும் இரைந்து கிடந்த துணிகளும், சுருட்டி வைக்காத படுக்கையும், காப்பிக் கரை படிந்த கார்பெட்டும், டேபிளின் மேலிருந்த சிப்ஸ் பாக்கெட்டும் கீழே சிந்தியிருக்கும் இரண்டு சிப்ஸும் அமெரிக்க வாழ் இந்திய பேசிலர்ஸ் அறை என்பதை தெளிவாக காட்டிக்கொண்டிருந்தது.


சனிக்கிழமை காலை - 11:00

வெள்ளி மாலை முழுவதும் அந்த வார அலுப்பு தீர ஆட்டம் போட்டு விட்டு வந்து படுத்ததால் பனிரெண்டு மணிக்கு குறைந்து எழுந்தால் தெய்வ குத்தம் ஆகிவிடும் என்பது போல மெய் மறந்து தூங்கும் கூட்டம் இவர்கள். சந்தோஷ் எப்போதும் இல்லாமல் இன்று சற்று முன்னமே எழந்து, குளித்து ஃபேஸ்புக்கில் மூழ்கியிருந்தான். முகுந்த் தூக்கம் கலைந்தும் படுக்கையை விட்டு எழ மனமில்லாமல், புரண்டு படுத்தான்.

‘என்னடா சீக்கரமா எழுந்துட்ட?’ சந்தோஷிடம் முகுந்த்.
‘மித்ராவ மீட் பண்ண போறேன்’ - மித்ரா அவனுடய கேர்ள் ஃபிரெண்ட்.
‘டேய், மதியானதுக்கு மட்டர் பனீர் பண்றேன்னு சொன்ன?’ - அவனவன் விஷயம் அவனுக்கு.
‘இல்ல நாளைக்கு பார்க்கலாம்’
’அப்போ இன்னிக்கும் டகோ பெல் சோறா...ரைட்டு....என்னடா டெபுல டக் அவுட்டான பேட்ஸ்மன் மாதிரி இருக்க, ஏதாவது பிரச்சனையா? எனி டிஸ்பூட்?’ - காலையில் எழுந்தவுடன் மொக்கை போட ஆரமித்தான் முகுந்த்.
‘...’
‘சரி காஃபி ரெடி பண்றா நான் போய் பல்லு வெலக்கிட்டு வரேன்’
‘டேய் நான் உன்கூட பேசணும்’ - சந்தோஷ் வாய் திறந்தான்.
‘என்ன காதல் பிரச்சனையா... பேசிலர்ஸ் வாழ்க்கைல இதெல்லாம் சாதாரணமப்பா... சரி இரு வரேன்..’ என்று பாத்ரூமினுள் சென்று கதவை தாளிட்டான்.

மன்மத லீலையில் ஆரமித்து கிளிமஞ்சாரோ வரை அவன் பாடி வெளியே வர பத்து நிமிடங்கள் பிடித்தது.

‘டேய்.. நீ இன்னும் காப்பி ரெடி பண்ணலயா... லவ் பண்ணுங்கடா நண்பனுக்கு காப்பி போட்டுட்டே லவ் பண்ணுங்க... ’
‘என்ன பிரச்சனை?’ சந்தோஷிடம் அமர்ந்தான்
’நீ நேத்து குணாகிட்ட அப்படி பேசிருக்க கூடாது....’ சந்தோஷ் அவன் கண்களைப் பார்த்து சொன்னான்

வெள்ளிக்கிழமை- இரவு 9:30
இடம் : எமினெம் பப்

சந்தோஷும், முகுந்தும் வேலை முடிந்து வெள்ளைக்காரிகளை சைட் அடிக்க தெரிவு செய்திருந்த்த தோதான இடம். சந்தோஷ் அவ்வப்போது பீர் மற்றும் சில பல விஸ்கி கலந்து அடிப்பவன். முகுந்த் பப் சென்று பச்சைத் தண்ணீர் சாப்பிடும் ஜாதி. இவர்களது நண்பன் குணா அங்கு ஒரு பெண்ணுடன் வர....

‘டேய் மச்சான்... எப்படிடா இருக்க..’ சந்தோஷ் விசாரிக்க..
‘சூப்பர் டா... ஒரு நிமிஷம் டா வந்துறேன்’ என்று கூறி குணா கவுண்டர் நோக்கி சென்று.. தனக்கு ஒரு பீரும், தன்னுடன் வந்த பெண்ணிற்க்கு ஒரு பீரும் வாங்கி வந்தான்.
‘என்னடா சரக்கு வாங்கி ஃபிகர் கரெக்ட் பண்றயா... மச்சம் டா’ முகுந்த் கள்ள சிரிப்புடன் கேட்க
‘டேய்.. இது என் சிஸ்டர் டா... இங்க படிக்க வந்துருக்கா’ என்று குணா கூற. முகுந்த் அவளை மேலும் கீழும் பார்த்துவிட்டு
‘என்னடா தங்கச்சிக்கு பீர் வாங்கித்தர... பூ வாங்கித்தர அண்ணன் பார்த்துருக்கேன், பீர் வாங்கித்தர அண்ணன் நீதாண்டா... கலாச்சாரம் வளருது....’
‘டேய்.. அவ இந்த காலத்து பொண்ணுடா... அதுவும் அமெரிக்கால படிக்கறா... இதெல்லாம் இருக்கறதுதான் மச்சி...’ சந்தோஷ் குணாவிற்க்கு சப்போர்ட் செய்தான். குணா அந்த பக்கம் திரும்பி இருந்ததால் முகுந்த் சந்தோஷிடம் ரகசியமாக சொல்கிறேன் என்று நினைத்து கொஞ்சம் சத்தம் போட்டே ‘என்னடா நீயும் இப்படி பேசர...இன்னிக்கு பீர் வாங்கித்தருவான்... நாளைக்கு வேற எங்கயாவது அனுப்புவான்...’ இதை காதில் வாங்கிய குணா...
‘டேய்.. நீ ஓவரா பேசர.. திஸ் இஸ் த லிமிட்.. ‘ என்று கூறி தனது தங்கையை கூட்டிக்கொண்டு வேறு பக்கம் சென்றான். சந்தோஷ் முகுந்தை முறைத்தான், முகுந்த் தான் கேட்டதில் தப்பேதும் இல்லை என்பது போல் கையசைத்தான்.
முகுந்தும் சந்தோஷும் அதன் பிறகு பேசிக்கொள்ளவே இல்லை. முகுந்தும் காலையில் எல்லாம் சரியாயிடும் என்று விட்டுவிட்டான். வீட்டிற்க்கு வந்து படுத்தவர்கள் விரைவில் தூங்கினர்.

இன்று.....

‘ஓ.. அதுதான் உன் பிரச்சனையா?... நான் கேட்டதுல என்ன தப்பு, உனக்கும் ஒரு தங்கை இருக்கா அவளுக்கு நீ பீர் வாங்கி குடுப்பயா?’ - முகுந்த் தன் கேள்வியை வைத்தான்.
‘டேய் இது அவங்க அவங்க பெர்ஸனல் விஷயம் டா. நான் பண்ணமாட்டேங்கறதுக்காக யாருமே பண்ணக்கூடாதுன்னு நெனைக்கறது தப்பு..’ - சந்தோஷ்.
’என் ப்ரெண்ட் தங்கை எனக்கும் தங்கை... நான் உரிமை எடுத்துக்கறது தப்பா? அதுவுமில்லாம நம்ம கலாச்சாரம், பண்பாடுன்னு இருக்கில்ல, இவனுங்களுக்குதான் அதெல்லாம் இல்ல’
‘அப்படி நீ நெனச்சுருந்த்தா தன்மையா சொல்லிருக்கலாம், நீ சொன்ன விதம் தப்பு. வென் யூ ஆர் இன் ரோம் பீ ய ரோமன் அப்படின்னு சொல்லிருக்காங்க அதுப்படி அவ நடத்துருக்கலாம் இல்ல’ -சந்தோஷ்
‘உடனே இத சொல்லிருங்க... இத நல்ல விஷயத்துக்கு யூஸ் பண்ணாதீங்க. வெள்ளக்காரன் காலைல்ல 7 மணிக்கு வேல செய்ய ஆரமிச்சா 4 மணி வரைக்கும் வேல மட்டும்தான் செய்வான். நம்ம ஆளுங்க வேல ஆரமிக்கரதே 11 மணிக்கு அதுக்குள்ள காப்பி, சாப்பாடு எல்லாம். அவன் வேல முடிக்கும் போதுதான் நம்ம வேல ஆரமிக்கரதே. இதுக்கெல்லாம் ரோமனா மாறாதீங்க..’
’சரி..ஒத்துக்கறேன்..பட் கலாச்சாரம்ன்ன என்ன?’
‘மாரல் அண்ட் எதிகல் வேல்யூஸ் ஆஃப் த சொஸைட்டி...’
‘வேல்யூஸ் எங்க இருக்கு, நீ கமல் வீடியோ பார்த்த இல்ல. அவர் என்ன சொன்னார் கலாச்சாரம்ங்கற்து காலத்துக்கு தகுந்த மாதிரி மாறிட்டு வருதுன்னு சொல்லல’
‘பொதுவா சொன்னத இதோட முடிச்சு போடாத.. பெண்களை நம்பி நாடே இருக்குடா, வருங்கால இந்தியாவே அவங்கள நம்பிதான் இருக்கு. வீட்ல குழந்தைங்க முன்னாடி தண்ணி அடிச்சா என்ன ஆகும்’ - முகுந்த் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினான்.
’அவங்கள பாத்துக்க அவங்களுக்கு தெரியும்டா...’
‘இதுதாண்டா நாம பண்ற தப்பு, ஆம்பளைங்க தண்ணி அடிக்க ஆரமிக்கும்போது இப்படிதான் விட்டாங்க, இப்போ அது டாஸ்மாக் விருட்சமா வளர்ந்த்துருக்கு. எத்தனை குடும்பங்களோட ஒரு நாள் சோறுக்கு தேவையான காசு டாஸ்மாக்க்கு போகுதுன்னு தெரியுமா? இத இப்படியே விடக் கூடாதுடா, முளையிலே கிள்ளி எறியணும், இருக்கற கலாசாரமாவது மிஞ்சும்’
‘கலாசாரம்.. கலாசாரம்ன்னு நீ சொல்றது சிரிப்புதாண்டா வருது. எங்கடா இருக்கு கலாசாரம். அம்மா, அப்பாவ கவனிச்சுக்கறது நம்ம கலாசாரம், அப்போ ஏன் இத்தனை முதியோர் இல்லம். தமிழ் கத்துகறது நம்ம கலாசாரம், ஆனா இன்னிக்கு தமிழ் தெரிலைன்ன பெருமைப் பட்டுக்கறோம். ஒருத்தனுக்கு ஒருத்திங்கறது நம்ம கலாசாரம், அப்புறம் ஏன் நாம எய்ட்ஸ்ல முன்னாடி நிக்கறோம். ஏதாவது ஒரு கலை கத்துக்கறது நம்ம கலாசாரம், நமக்கு சினிமா பாட்ட விட்ட எதும் தெரியாது. நீகூடதான் அந்த பொண்ண பாத்த உடனே ஃபிகர் அப்படி இப்படின்னு பேசின அது கூடதான் கலாச்சாரம் இல்ல... இப்படி அடுக்கிட்டே போகலாம். இப்போ சொல்லு எங்க இருக்கு நம்ம கலாசாரம்.’ - சந்தோஷ் தெளிவாக பேசினான்.
‘அதெல்லாம், நாமதான் மாத்தணும்.’ - முகுந்த்
‘அப்போ இங்க உக்காந்து என்ன பண்ற... இந்திய கலாசாரம்ன்னு ஒன்னு இருந்தது, அத யாரும் இப்போ ஃபாலோ பண்றதில்லங்கறதுதான் உண்மை.... சரி நான் கிளம்பறேன்... நல்லா யோசிச்சுப் பாரு...’ என்று கூறி சந்தோஷ் வெளியே சென்று கதவை சாத்தினான்.
முகுந்த் சிறிது நேரம் வெறித்து விட்டு இந்திய கலாசரத்தை தெரிந்து கொள்ள இணையதளத்தை தட்டினான். இந்திய கலாசாரம் ஃபேஸ்புக்கில் இருந்தது, அதை 2560 மக்கள் ஃபாலோ செய்துகொண்டிருந்தனர்....


Wednesday, November 24, 2010

என் இனிய தமிழ் மக்களே....

உங்கள் பாசத்திற்க்குறிய ஜிகர்தண்டா பேசுவது... என்னடா வலையுலக சிட்டுக்குருவி காணாமப்போச்சே என்று வருத்தப்பட்டவர்களையும், சீறிவந்த சிங்கம் செத்துப்போச்சே என்று சந்தோஷப் பட்டவர்களுக்கும் ஒரு விஷயம்... ஜில் ஜில் ஜிகர்தண்டா இங்க குளிர் தாங்க முடியாமல், தமிழக மக்களை மகிழ்விக்க இந்தியா வருகிறார்...


மன்மதன் அம்பு மற்றும் இன்ன பிற படங்கள் அண்ணனின் வருகையையொட்டி வெளிவருவதால் பயங்கர பிஸி.... பூ மிதிப்பது, திருமணத்தில் தாலி எடுத்துக் கொடுப்பது, பிள்ளைங்களுக்கு பெயர் வைப்பது போன்ற நிகழ்ச்சிகளுக்கு முன்பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்...

சிங்கார சேலத்தில் இருப்பதால், சென்னையில் வலைப்பதிவர் சந்திப்பு ஏதாவது நடந்தால் தெரிவிக்கவும்... அடிக்கடி எழுததான் முடில (இனிமேல் அப்படி இல்ல) ... எழுதறவங்கள பார்ப்போம்...

தேதி : டிசம்பர் 14 - ஜனவரி 19

இனிமேல் மஜாதான்....


Saturday, August 07, 2010

ரெட் பேனாவும் சமுதாய மாறுதலும்

’..நாம சந்தோஷமா இருக்கணும்ன்னு செய்யற விஷயம் சமுதாயத்த மாத்தினாலும் அது சுயலம்தான்...’ வேகமாக விஜி போனை வைத்தாள்.

-----------------------------------------------------------------------------
என் பேர் கோபால். எல்லாரப் போலவும் படிச்சிட்டு, வேலை வாங்கி சென்னைல கொஞ்ச நாள் குப்பை கொட்டிட்டு இப்போ அமெரிக்கால வந்து ட்ராஷ் கொட்டிட்டு இருக்கேன். விஜி, என் அக்கா, பொறுமைசாலி எதையும் நிறுத்தி நிதானமாய் செய்பவள். கல்யாணமாகி இரண்டு குழந்தைகள். அது என்னமோ தெரில எனக்கு விவரம் தெரிஞ்சு பொறந்தால பசங்க மேல எனக்கு அவ்வளவு பிரியம்.
ஒரு மாமா என்ன பண்ணனும்ன்னு என் நண்பர்கள் என்ன பாத்துதான் கத்துகிட்டங்க.

எனக்கு பாசத்த பேச்சுல காட்றது பிடிக்காது. எதுன்னாலும் செயல்ல இருக்கணும். இந்தியாவில இருக்கும் போதே அவங்களுக்கு பிடிச்ச விஷயத்த செய்யாம இருக்க மாட்டேன். இங்க வந்து சொல்லணுமா?

போன தடவ ஊருக்கு போறத்துக்கு முன்னாடி போன் பண்ணினேன்.

‘ஏய் பசங்களா, என்ன வேணும் உங்களுக்கு?’
‘கலர் பென்சில், கலர் பேனா, வீடியோ கேம், .......’ என்று அவர்களது பட்டியல் நீண்டுகொண்டே போனது....
விஜி அவர்களிடம்... ‘ஹேய்.. போதும்டா எவ்வள்வுடா வாங்கிட்டு வருவான் அவன்...’ என்று அதட்டினாள். நான் அவளை அதட்டினேன்.

இந்தியா சென்றபோது அவர்கள் எதிர் பார்த்ததை விட நிறைய பொருட்கள் வாங்கிச் சென்றேன். பசங்களை ஏமாற்றுவது என்றும் எனக்கு பிடிக்காது. என் அக்காவோ, சின்ன ஏமாற்றங்கள் இருக்கணும்ன்னு சொல்லுவாள். அப்போதான் பிள்ளைங்க பிற்காலத்துல ஏமாற்றங்களை தாங்குவாங்களாம். சுத்தப் பேத்தல்.

அன்று அவர்கள் அந்த பேனாவில் எழுதி மகிழ்ந்தது, யப்பா என்ன சந்தோஷம். ‘டேய் கோபால் சாதிச்சுட்ட’ அப்படின்னு எனக்கு நானே தோள் தட்டிக்கொண்டேன். இந்தியப் பயணம் நல்ல படியாக முடிந்து திரும்பி வந்துவிட்டேன். ஒரு வாரம் கழித்து அவர்களுக்கு தொலைபேசினேன், அப்போதுதான் கல்யாணி (அக்கா மகள்) சொன்னாள்

‘மாமா... நீ வாங்கிட்டு வந்ததுல எனக்கு ரெட் கலர் பேனாதான் பிடிச்சது.... ஆனா அது தொலஞ்சுபோச்சு’
‘சரி... நான் வாங்கி அனுப்பறேன்..’ என்று கூறினேன்.
‘சூப்பர் மாமா’ என்று குதுகலித்தாள்.

அடுத்த நாள் கல்யாணி எனக்கு போன் செய்தாள்.
‘என்னடா கல்லுக் குட்டி...’
’மாமா... அந்த ரெட் பேனாவ திருட்டு ராதிகாதான் எடுத்திருக்கா, மல்லிக்கா மிஸ் குடுத்தாங்க’ என்றாள்.
’ஏய்... அப்படி சொல்லதன்னு சொல்லிருக்கேன் இல்ல...’ சட்டென விஜி போனை வாங்கினாள்.

‘டேய்... அந்த ராதிகா, மல்லிக்கா மிஸ் பொண்ணு. அவங்களுக்கு இருக்கற வருமானமே தையல் மிஷனும், டியூஷனும்தான். சரி நாமளும் உதவி பண்ணின மாதிரி இருக்கும், பசங்களும் படிச்ச மாதிரி இருக்கும்ன்னு டியூஷன் அனுப்பினேன்’

‘ஹ்ம்ம்..’

‘அந்த பொண்ணுக்கு இந்த மாதிரி பேனாவெல்லாம் வாங்கற வசதி இல்ல. சின்ன பொண்ணு பார்த்ததும் ஆசப் பட்டு எடுத்துட்டா. இது அந்த பொண்ணு தப்பும் இல்ல அறியாப் பொண்ணு. இப்போ இதுனால அந்த பொண்ண எல்லாரும் திருட்டு ராதிகான்னு கூப்பிடறாங்க. இவக்கிட்ட சொல்லிருக்கேன், இன்னொரு தடவ அப்படி சொன்ன சூடு போடுவேன் அப்படின்னு ’

‘சரி அதான் பேனா வந்துருசில்ல’

‘பேனா வந்துருச்சு. ஆனா அந்த பொண்ணு மனசுல இந்த தப்பான எண்ணம் வர நாம காரணம் இல்லயா? இது மாதிரி நாம செய்யற சின்ன விஷயம் பெரிய மாறுதல்கள சமுதாயத்துல ஏற்படுத்துது. இதுல ஒன்னு மட்டும் தெரிஞ்சுக்கோ..நாம சந்தோஷமா இருக்கணும்ன்னு செய்யற விஷயம் சமுதாயத்த மாத்தினாலும் அது சுயலம்தான்...’ வேகமாக விஜி போனை வைத்தாள்.

அவள் கடைசியில் சொன்ன வார்த்தைகள் எனது எண்ணங்களை புரட்டிப் போட்டது. இதுக்கு நான் என்ன செய்ய முடியும். ஆனா ஏதாவது செஞ்சுதான் ஆகணும். பசங்களும் சந்தோஷமா இருக்கணும், சமுதாயமும் இதுனால கெடக் கூடாது. எதாவது வழி இருந்த்தா சொல்லுங்களேன் ப்ளீஸ்......






Wednesday, May 19, 2010

நேற்று பெய்த மழையில்...


இந்த கதையை சென்னையை ஆட்டுவிக்கும் லைலா புயலுக்கு சமர்பிக்கிறேன்.

புகைப்படம்: நன்றி அவ்யுக்தா கீர்த்தி

நேற்று இரவு கொட்டித்தீர்த்த மழையில், இன்று ஈரச்சேலை அணிந்திருந்தாள் சாலைப்பெண். மழை நீரை குடித்து பள்ளங்கள் தங்களது வயிற்றை நிரப்பி காட்சியளித்தன.

"யூஸ்லெஸ் ஃபெல்லோ" என்று சத்தமாக கத்திக்கொண்டு அங்கேயும் இங்கேயுமாக நடந்துகொண்டிருந்தார் திருவாளர் காளிதாஸ். தாஸ் அண்ட் கோ முதலாளி. சாதாரணமாக இருந்த தொழிலை இன்று பல நாடுகளுக்கு கொண்டு சென்றவர். வேலை விஷயத்தில் பயங்கர கறார் பேர்வழி.சொன்ன நேரத்தில் சொன்ன வேலை முடியவில்லை என்றால் மனிதன் ஆகாசத்திற்கும் பூமிக்கும் குதிக்க ஆரம்பித்துவிடுவார். சில நேரங்களில் இவர் மனிதாபிமானமற்றவர் என்று மற்றவர் சொல்லும் அளவிற்கு நடப்பார். இவ்வளவு கோவக்காரறாய் இருந்தாலும், தனக்கு பிள்ளை இல்லாத காரணத்தால், அனைவரையும் தனது பிள்ளையை போல பார்த்துக்கொள்வார்.
'எல்லாருக்கும் பொறுப்பு இருக்கணும்ன்னு நெனைக்கறது தப்பா?' என்று கேட்பார்.
'அதுக்குன்னு அவங்களுக்கு வேற முக்கியமான வேல இருக்கலாம் இல்லீங்களா?' என்றால்.
'அவனுக்கு என்ன குடி முழுகி போற வேல, இங்க வராம?' என்று அனைவரின் வாயையும் அடைத்துவிடுவார்.

'சரோஜா, இந்தா ஐயாவுக்கு காப்பி கொண்டு போ... ஆறிட போகுது' காளிதாஸ் மனைவி செண்பகம் வேலைக்காரியிடம் காபியை நீட்டினாள்.
'அம்மா, ஆறினாலும் ஐயா சூடா இருகாரு... ' என்று சரோஜா காமெடி பண்ண... செண்பகம் முறைத்தாள், மனதிற்குள் சிரித்தபடி.

காபியை சரோஜா நீட்ட, 'இது ஒண்ணுதான் கொறச்சல், கொண்டு போய் கீழ கொட்டு' என்று எரிந்து விழுந்தார்.

'அம்மா, மூஞ்சி செவந்துருக்கான்னு பாருங்க... '
'ஏண்டி...'
'ஐயா நெருப்ப மூஞ்சில துப்பிடாறு, என்னத்துக்கு ஐயா இம்புட்டு சூடா இருக்காரு'
'கணேசன் இன்னும் வரல இல்ல அதான்'

கணேசன், அவரது டிரைவர். காலை எட்டு மணிக்கு வரச்சொல்லியிருந்தார். இன்னும் ஆளக்காணோம். மணி ஒன்பது.

'நேத்து பேய் மழை பெஞ்சதுல, எதுனாச்சும் பிரச்சனையா இருக்கும்'
'உனக்கு அவர பத்தி தெரியாதா, அதெல்லாம் அவரு பொருட்டே பண்ண மாட்டாரு. நேத்துக்கூட அவர் பியோன் உடம்பு சரியில்லன்னு லடே-ஆ வந்தானாம், அவன பத்துநாள் சஸ்பென்ட் பண்ணிட்டார்'
'அம்மா என்னதான் இருந்தாலும்......' சரோஜா இழுக்க
'என்னடி...' செண்பகம் அதட்டினாள்
'ஒண்ணுமில்லைம்மா...' என்று சொல்ல வந்ததை மென்று முழுங்கிவிட்டாள்.

'என்னங்க, அவனுக்கு போன் பண்ணி பார்க்க வேண்டியதுதான?' என்று அம்மா கேட்க
'போன் பண்ணி பாத்தாச்சு, கன்ட்ரி ஃப்ருட், என்ன பண்றானோ, இன்னிக்கு அவன் சீட்ட கிழிக்கணும்'

'அம்மா, ஐயா இப்போதான காபி குடிச்சாறு, இப்போ ஏதோ ஃப்ருட் ஜூஸ் கேக்கறாரா?'
'நீ உன் வேலைய பாரேன், யாரு என்ன பேசறாங்கன்னு கேகரதுல நேரத்த செலவழி'

அங்கும் இங்கும் நடந்த தாஸ், சோபாவில் அமர்ந்து டிவி-யை தட்டினார். சன் நியூஸ் செய்திகள் ஓடிக்கொண்டிருந்தது.

'நேற்று பெய்த அடைமழையால், சென்னை வேளச்சேரி பகுதியில் அனைத்து வீட்டிற்குள்ளும் தண்ணீர் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.' இங்கு இருக்கும் மக்கள் இதைப் பற்றி என்ன சொல்கிறார் என்று பாப்போம். கேமேராவை திருப்பினால், கணேசன் வெள்ளை சட்டை மாட்டிக்கொண்டு நடந்து வந்துகொண்டிருந்தார்.

'சார், நகருங்க சார். வேலைக்கு ஏற்கனவே நேரம் ஆச்சு. முதலாளி காத்துட்டு இருப்பார்'
'என்ன சார், உங்க வீடு தண்ணீல இருக்கு. வேலைக்கு போறேன்னு கெளம்புறீங்க'
'சார், நான் இருந்தாலும் தண்ணி லெவல் கொறஞ்சதும்தான் ஏதும் பண்ண முடியும். என் பொண்டாட்டி தண்ணி அள்ளி வெளிய ஊத்தினப்புறம் வந்து பாத்துக்கலாம்'
'இதோ இந்த தொழிலாளி, குடியே முழுகினாலும் வேலைக்கு செல்வேன் என்று ஒற்றைக்காலில் நிற்கிறார். அவரது முதலாளி கொடுத்துவைத்தவர்'

இதை கேட்ட காளிதாஸ் அவரின் கண்ணில் நீர் வந்தது. நேற்று பெய்த மழையில், இன்று இவர் மனதில் ஈரம்.


Thursday, May 13, 2010

எனக்கு பிடித்த படங்கள் - தொடர் பதிவு

என்னை இந்த தொடர் பதிவிற்கு அழைத்த அனன்யா அக்காவிற்கு எனது முதல் சலாம். பரிட்சை முடிந்து பலவிஷயங்களை பற்றி எழுதலாம் என்றால், எல்லா எண்ணங்களும் தலைக்கு மேலே போக, பவுன்சர் பார்த்த இந்திய அணி போல குதித்துக் கொண்டிருந்த எனக்கு லட்டு மாதிரி பந்து போட்டதால் அவருக்கு நன்றி. சிக்சர் அடிக்கிறேனா இல்லையா என்பதை நீங்கள்தான் சொல்ல வேண்டும். அம்பயர் ரெடி???

அனன்யா அக்கா என்னிடம் சொன்னார்கள், மொத்தம் பத்து படம். நாம ஒவ்வொரு genre க்கும் பத்து படம் எழுத சொன்ன எழுதலாம். மொத்தம் பத்து படம்ன்னா, கஷ்டம்தான். முயற்சி பண்ணுவோம்ன்னு களத்துல குதிச்சாச்சு. இருங்க கால் மேல கால் போட்டுக்கறேன்.. டாப் டென் மூவீஸ்-ன்ன சும்மாவா...

வணக்கம் நேயர்களே, ஜிகர்தண்டா டாப் டென் மூவீஸ்-ல எந்த எந்த படங்கள் எந்த எந்த இடத்த பிடிச்சுருக்குன்னு பாக்கறதுல ஆவலா இருப்பீங்க, நாம நிகழ்ச்சிக்கு போவோம். இதுதான் வரிசைன்னு இல்ல. இந்த பத்து படங்கள் எனக்கு பிடிச்சது, எந்த வரிசைல பாத்தாலும் எனக்கு பிடிக்கும். என்னடா எல்லாமே சீரியஸ் படமா இருக்கே இவன் சீரியஸ் ஆலோ நெனைக்காதீங்க, சினிமால எனக்குன்னு ஒரு சின்ன எதிர்பார்ப்புகளை தீர்த்து வைத்த படங்கள் இவைன்னு சொல்லலாம்.

திருவிளையாடல் (1965)
அருமையான படம், சிவாஜி கணேசன் நடிப்பும் இந்த படத்தில் வரும் இசையும் நம்மை வேறு உலகிற்கு அழைத்து செல்லும். இந்த படத்தில் வரும் ஒவ்வொரு திருவிளையாடலும் மிகவும் சுவாரசியமாகவும், இனிமையாகவும் இருக்கும். நான் சிறு வயதில் ஒரு முறையும், சிலநாட்களுக்கு முன்னாலும் ரசித்த படம். எவர் கிரீன் வரிசையில் அனைவரின் மனத்திலும் இருக்கும் படம். திருவாளர் நாகேஷின் நடிப்பு, படத்தின்சிறப்பாம்சம். படங்களின் வரிசையில் திருவிளையாடல் இன்னும் விளையாடுகிறது.



சதிலீலாவதி (1995)
கமலஹாசன் காமெடி இரண்டையும் தனியே ரசித்தால் கூட ஆனந்தமாய் இருக்கும், இரண்டும் ஒன்று சேர்ந்து கூத்தடித்தால். அந்த வரிசையில் இந்த படம் ஒரு தனி முத்திரை பதித்த படம். குடும்பத்தில் சபலத்தால் ஏற்படும் பிரச்சனைகளை, காமெடியாய் சொல்லும் படம். சிரிக்க ஒரு வாய்ப்பு. சதிலீலாவதி சிரிலீலவதி.



முள்ளும் மலரும் (1978)
தலைவரின் நடிப்பு திறனை அற்புதமாக வெளிக்கொண்டுவருமாறு படங்கள் எடுப்பதில் மகேந்திரன் ஒரு முக்கிய இடம் வகிப்பவர். முள்ளும் மலரும், ஜானி போன்ற படங்களில் தலைவர் வாழ்ந்திருப்பார். அண்ணன் தங்கை பாசத்தை மையமாக வைத்து, மெதுவாக நகரும் படம். மனதை கனக்க வைக்கும் காட்சிகள். முள்ளும் மலரும், வாசம்.



பிதாமகன் (2003)
நட்பு என்பது வாழ்வில் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்தும் படம். உலகமறியாமல் இடுகாட்டில் காலம் கழித்த முரட்டு விக்ரம், உலகை ஏமாற்றி திரியும் சாமர்த்திய சூர்யாவிடம் நட்புடன் இருப்பதும். அவர்கள் வாழ்வில் நடக்கும் சுவையான விஷயங்கள். சூர்யாவின்மரணத்திற்கு பிறகு, வில்லனை பழிவாங்குவதும் மனதை நெகிழவைக்கும். பிதாமகன், தலைமகன்.



அன்பே சிவம் (2003)
உலகின் பெரிய இரண்டு விஷயங்கள், நாடுகளுக்குள் போரை மூட்டிய கருத்துகளை கமலஹாசன் மற்றும் மாதவன் பரிமாறிக்கொள்வதும். சுயநல மாதவன் இறுதியில் பல விஷயங்களை அந்த பயணத்தின்போது அறிந்து கொள்வதும், நாமும் அவர்களுடன் பயணிப்பதைப் போன்றதொரு எண்ணத்தை தரும். அங்கங்கே வந்து செல்லும் சிறு வேடங்களும் சரி, தங்களது பணியை உணர்ந்து நடித்திருப்பர். அன்பே சிவம், என்றும் முதன்மை...



வீரபாண்டிய கட்டபொம்மன் (1959)
வீரபாண்டிய கட்டபொம்மன் என்று சொன்னாலே நமக்கு சிவாஜி கணேசனின் முகம்தான் ஞாபகத்திற்கு வரும், அந்த அளவிற்கு இந்த படத்தில் வாழ்ந்திருப்பார். சுதந்திர போரட்டத்தை இப்படித்தான் பண்ணியிருப்பார்கள் என்று நமக்கு அறிவித்த படங்களுள் தலயாய படம். சாம்பார் இல்லாமல் விருந்தா, அதுபோல இந்த படம் இல்லாமல் சிறந்த பத்தா?




நாயகன் (1988)
மணிரத்னம், கமலஹாசன் இணைந்து பணியாற்றிய படம். டைம் பத்திரிகையில் "All time best" படங்களின் வரிசையில் இன்னும் இருக்கிறது. என் வரிசையில் இல்லாமல் போகுமா?



வேதம் புதிது (1987)
சாதிகள் இல்லையடி பாப்பா... என்று பாரதி அன்று சொல்லிவிட்டு சென்றாலும், இன்றும் அது எல்லா இடத்திலும் உள்ளது. இதை மையமாக வைத்து பாரதிராஜா அவர்கள் இயக்கிய படம். சத்யராஜ் நடித்த படங்களுள் எனக்கு மிகவும் பிடித்த படம்.




தளபதி (1991)
கர்ணன், துரியோதனன் கதையா அடிப்படையாய் கொண்டு மணிரத்னம் இயக்கிய படம். நட்பு... நட்பிற்கு ஒரு மனிதன் கொடுக்கும் முக்கியத்துவம் அனைத்தும் அருமையாக விளக்கப்பட்ட படம். ரஜினி, மம்மூட்டி அவர்களின் நடிப்பு நவீன கால கர்ணன் துரியோதனனை கண் முன்னே கொண்டுவந்து நிறுத்தியது.




மூன்றாம் பிறை (1982)
ஸ்ரீதேவி மனநோயாளியாக நடித்த படம். கடைசி காட்சி மூலம் தேசிய விருதை தட்டிச்சென்றார் கமல். ஸ்ரீதேவியை வடநாட்டிற்கு தியாகம் செய்ய உதவிய படம். இருவரும் நடிப்பில் பட்டையை கிளப்பியிருப்பார்கள். அனைவரது மனதையும் நெகிழ வைத்தபடம்.





இதில் இன்னொரு விஷயம், இந்த பத்து படங்களில் இசை ஒரு முக்கிய இடத்தைபிடித்துள்ளது. அதில் இசைஞானி ஏழு படங்களுக்கு இசை அமைத்துள்ளார்.

இதைப்பற்றி உங்களது கருத்துகளை எழுதுங்கள். அடுத்து இதை நான் தொடரஅழைப்பது
கார்கில் ஜெய்


Tuesday, March 16, 2010

தாக்க... தாக்க... - த சாக்ஸ் அட்டாக் : பகுதி - 1


கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - ஜிகர்தண்டா




.....அம்ரிதா கல்லூரி... கோவையிலிருந்து 20 கீ.மீ...தூரத்தில்....

[லோ...சீ....மீ...ஓஒ....வூஊ...]

டிஷும்... டிஷும்ம்..... வகுப்பறையை வாசல் வழியாக வெளியே வந்து விழுந்தான். இப்போதே தெரிந்திருக்கும் இவன்தான் நம்ம ஹீரோ அப்படினு. தொப்பென்று விழுந்தவன்... திடீரென கண்களை திறக்கிறான்...

ஹீரோ: சார்... இப்போ சாங்க்தான....
நான்: யோவ்... உன் மூஞ்சிக்கு பாட்டு வேறயா...அப்படியே படுத்த மாதிரியே... மூஞ்சிய திருப்பீட்டு பேசு...

இனிமேல் வருவதை நம்ம காக்க காக்க சூர்யா மாதிரி படிக்கவும்.

"அந்த கடலை ஒழிப்பு வேல எனக்கு ரொம்ப பிடிச்சுருந்தது, இப்போ என்னால என் சாக்ஸ் ஆபத்துல இருக்கு... எழுந்திரிக்கணும்... முடில.. என் மூக்குல நாத்தம் புடிச்ச சாக்ஸ் போட்டு போய்ட்டான்.. மூளையே கொழம்பீடுச்சு... நாத்தம்.. செம நாத்தம்... என் சாக்ஸ், அத நான் காப்பத்தணும்..எழுந்திரி... எழுந்திரி..."

[லோ...சீ....மீ...ஓஒ....வூஊ...]

'என் பேரு அன்புச்செல்வன்... அழுக்கு சாக்ஸ் அன்புச்செல்வன்..கடலை ஒழிப்பு சங்க உறுப்பினர்...பேருக்கு முன்னாடி இருக்கே அதுதான் என் தவம்... கடலை போடறவன கண்டாலே எனக்கு பிடிக்காது.. எங்க டீம்ல நாலு பேரு.. சாக்கடை ஸ்ரீகாந்த், இஞ்சி இடுப்பழகன் இளமாறன், ஆக்சிஜென் அருள். எங்கள கடலை ஒழிப்பு சங்கத்துல போட்டபோதுதான், வாஸ் பேசின் வாசுதேவன் வந்தாரு. பாம்பே ஐ. ஐ. டி ல கடலைய ஒழிச்சவர்... முப்பது பேரு மூஞ்சில சாக்ஸ் போட்டு மயக்கம் போட வெச்சவரு... ஹி இஸ் கொன்ன லீட் அஸ்'

எங்க மீட்டிங் போது நான் சொன்னேன்...
'சார்... நம்ம காலேஜ்-ல இருக்கற மிகப்பெரிய கடலை பசங்க லிஸ்ட் இது. வெறும் சட்டிலையே சும்மா கருப்பு புகை வர அளவுக்கு கடலை வறுப்பாங்க. கடலை குமார் - இவன் எப்பவுமே பொண்ணுங்க கூடதான் இருப்பான். மைதா மனோகர் - இவர் கொழு கொழுன்னு இருக்கறதால பொண்ணுங்களுக்கு பிடிக்கும். செல்போன் சிவகுமார் - இவன் செல்போன்-ல மரண கடலை போடுவான். இவங்க எல்லாம் வரப்போற அன்னுவல் டே-ல மரண கடலை போடபோறதா தகவல் வந்துருக்கு. நாலு மாசம் துவைக்கத சாக்சோட வேட்டைக்கு நாங்க தயார்'

அப்போதான் வாசுதேவன் சொன்னார். 'நான் முப்பது பேரு மூஞ்சில சாக்ஸ் போட்ருக்கேன். அதுல ஒருத்தன் மட்டும் கடலை போடல, சப்ஜெக்ட் டிஸ்கஸ் பண்ணினோம் அப்படினு என் மேல கம்ப்ளைன்ட் குடுத்தான்... எல்லாரும் அத பத்தி மட்டும்தான் பேசினாங்க... சோ நீங்க ஜாக்கிரதையா சாக்ஸ் போடணும்'

நாங்க நாலு பேரு.. எங்கள அன்டச்சபில்ல்ஸ் அப்படினு சொல்லுவாங்க... அப்படி நாறும் எங்க சாக்ஸ்...

லேப்-ல மைதா மனோகர் இருக்கறத எங்களுக்கு தகவல் வந்தது... சுத்திப் போய் எல்லாரும் அவன் மூஞ்சில சாக்ஸ் போட்டு அவன மயக்கம் போட வெச்சோம். இதுதான் எங்களுக்கு பெரிய வெற்றி...இதே மாதிரியே பிளான் பண்ணி, நாங்க கடலை குமார போட்டு தள்ளினோம், அவன சங்கத்துக்கு முன்னாடி நிறுத்தலாம்னு எல்லாரும் சொன்னாங்க, நான்தான் அதெல்லாம் வேஸ்ட் அப்படினு தூரத்துல இருந்தே சாக்ஸ் தூக்கி போட்டு மயக்கம் போட வெச்சேன். என்னதான் என்னோட ஒரு சாக்ஸ் போனாலும், நம்ம லட்சியத்த அடைஞ்சோம் இல்ல அப்படினு அவங்ககிட சொல்லி பெருமைப்பட்டேன். அவங்களுக்கும் அதுல ஒரு சந்தோஷம். இந்த டைம்-ல தான் அவள பாத்தேன், ஆயா... டாய்லெட் கழுவுற ஆயா..

ஷி இஸ் எ பேண்டசி..ல..ல லா....
ஒரு ஊரில் அழுக்கே உருவாய் ஒருத்தி இருந்தாலே...
அவள் அருகே போனால் நாத்தத்தில் துரத்தி அடிப்பாளே...

அவகிட்ட எனக்கு பிடிச்சதே அவ போட்டுட்டு வர அந்த அழுக்கு சாக்ஸ்தான், எப்போ துவைச்சாளோ தெரில... ஆனா எங்க சாக்ஸவிட கொஞ்சம் எக்ஸ்ட்ரா நாத்தம்தான்.

இந்த டைம்ல, செல்போன் சிவகுமார் வீக்-எண்டு ஊருக்கு போறபோது, கவிதா கூட போறத எங்களுக்கு தகவல் வந்தது. உடனே நாங்க நாலு பேரும், எங்ககிட்ட இருக்கற அழுக்கு சாக்ஸ் எடுத்துட்டு பஸ் ஸ்டாண்ட் போனோம். அங்க அவன் எங்கள பாத்ததும் உஷார் ஆயிட்டான். ஆனா நாங்க அவன தொரத்தி புடிச்சோம்.

ஸ்ரீகாந்த்: 'அன்பு இவன போட்றனும் அன்பு'
நான்: 'டேய் சிவகுமார், தப்பிக்கலாம்னா பாத்தா... டேய் அருள்.. ஒன்னு போடறா...'
இளமாறன்: ஐயோ... சாக்ஸ் போட சொன்னா நீ என்னத்தடா போட்ட... நாத்தம் தாங்கல.. சாக்ஸ் போடறா....
சிவகுமார்: ஹா...ஹையோ... இதுக்கு அந்த சாக்சே பரவா இல்லையே... ஹாஆஅ.... [மயக்கம் போடுகிறான்]

இப்படி சில சமயம் அருள் சாக்ஸ்க்கு வேல இல்லாம பண்ணுவான், அதுக்குதான் அவன் பேரு ஆக்சிஜன் அருள்.

இதெல்லாம் நடந்துட்டு இருக்கும் போது.... டைரக்டர் கட் சொல்லி... அடுத்த பதிவுல படிங்க அப்படினு சொன்னா எப்படி இருக்கும் அப்படினு யோசிச்சாரு....


Wednesday, March 10, 2010

ஜொள்ளாத மனமும் ஜொள்ளும் - என் டீன் கதை - 2


என்னடா கொசுவத்தி போட்டு போனவன் ஆளக் காணோம் என்று எண்ணி, சந்தோஷப் பட்ட அனைவருக்கும் இன்று கனவில் என் கொசுவத்தியே வரக்கடவது என்று தண்ணீர் தெளித்து சாபம் விடுகிறேன்......

நான்: மே ஐ கம் இன்..
டாக்டர்: நீயா....
நான்: வொய்... நீங்கதான வர சொன்னீங்க...
டாக்டர்: சாரி... சரி வா.. நாம அந்த ரூம் போகலாம்...

உள்ளே சென்ற பின்..

டாக்டர்: ஸ்டார்ட் பண்ணிதொல..

எட்டாவது மற்றும் ஒன்பதாவதில் எங்கள் பள்ளி ஆசிரியை, விசுவின் அரட்டை அரங்கம் புகழ், வத்சலா மிஸ், அன்னுவல் டே-க்கு டிராமா போடுவாங்க. எல்லா வருஷமும் நமக்கு ஒரு ரோல் இருக்கும். நானும் இந்த வருஷம் நமக்கு ஒரு டூயட் இருக்காதா அப்படின்னு ஏங்கி போவேன். அவங்க எல்லா வருஷமும் போல இந்த வருஷமும் பெண்கள் முன்னேற்ற டிராமாவ போட்டு அதுல படிக்காத முட்டாப்பயலா நான்...அறிவாளியா வீட்டு வேல செய்யற தங்கச்சி... எப்படிதான் கண்டிபிடிக்கராங்களோ....நாம வந்தாலே முட்டாப்பய வேஷம்தான்... இல்லாட்டி கோர்ட் சீன்ல தோத்து போற ஒரு லாயர்... என்ன கொடும.. இந்த டென்ஷன் தீர நான் பத்தாவது பள்ளிக்கூடம் மாறிட்டேன். எங்க அப்பா வேல பாக்கற ஸ்கூல்... பாய்ஸ் ஸ்கூல். பத்தாவதுல எந்த விஷயமும் மாட்டல... நானும் எந்த விஷயத்துலயும்மாட்டல...

பதினொன்னாவது... வந்த உடனே.. டியுஷன்..."நதிர்தனா... திரனனா..நா...." அப்படினு இப்போ பேமஸ் ஆனா மியுசிக், அப்போவே எனக்குள்ள ஓடிச்சு. முன்னாடி ரோல, பொண்ணுங்க, பின்னாடி ரோல பசங்க... எங்கத்த படிக்கறது... காலைல தலைக்கு குளிச்சுட்டு வர அவங்க தலைல இருந்து சொட்டற தண்ணில அப்படி நாம மனசு குளுந்து போய்டும். ஆனா ஒண்ணுங்க... பசங்க எல்லாம் மாங்கு மாங்குன்னு சைக்கிள்-ல வருவோம்.. அவங்க சும்மா டர்ன்னு வண்டில வந்துடு போயிட்டே இருப்பாங்க.. நாங்களும் வேகமா தொரத்துவோம், ஆனா பவுண்டரி போற பந்த தொரத்தர இந்திய கிரிக்கெட் வீரர் மாதிரி சொங்கி போய்டுவோம். இப்படியா சைக்கிள்-ல சாகசம் காட்றது... அப்படி இப்படினு போயிடு இருந்தது வாழ்க்கை... ஆனா, ஒரு இடத்துல மட்டும் நான் சண்டித்தனமே பண்ண மாட்டேன். கணக்கு டியுஷன் ல... ஏன்ன எங்க அப்பதான் எனக்கு கணக்கு டியுஷன் எடுத்தார்... பள்ளிகூடத்தில்கூட அவர்தான் எனக்கு கணக்கு. அதனால், கணக்கு டியூஷனில் யாரையும் கணக்கு பண்ண முடியவில்லை. சில பொண்ணுங்கள அவங்க அப்பா கூட்டிட்டு போக வருவாரு... அப்போ அவங்க கீழ வெயிட் பண்ணினா.. நாங்க அப்படியே சைக்கிள் பக்கதுல நின்னு பேசிட்டே இருப்போம்.. அதும் ஸ்டடீஸ் பத்திதான்... சில நேரங்கள்ல, மழை விழற ஸ்பீட் வெச்சு, க்ராவிடி கால்குலேட் பண்ற லெவெலுக்குபோவோம்.

இப்படியா பதினொன்னு, பன்னிரண்டு எல்லாம் நல்லபடியா போக. முதல் நாள் கவுன்சிலிங். எனக்கு முன்னால் நின்ற பெண், 'விச் காலேஜ் யு ஹவ் ஆப்டேட் ஃபார்' என்றாள்.. எனக்கு அவளது வேக இங்கிலீஷ் புரியவில்லை. 'மீ.. மீ... அம்ரிதா கோயம்புத்தூர்' என்று கூறி ஒரு புன்னகை பூத்தேன். அப்படியே அவள் கேட்ட கேள்வியையே நானும் திருப்பி கேட்டேன்.. நம்ம இங்கிலீஷ் சும்மாவா... 'வெங்கடேஸ்வரா' என்றாள்... 'குட் காலேஜ்' என்று சர்டிபிகேட் குடுத்தேன்.... புன்னகைத்தாள்... அந்த புன்னகை என்னும் மின்னலில் ஒடிந்த இதயம், இன்றும் விரிசல்களுடனே இருக்கிறது.

முதல் வருடம், மின்னலே பார்த்துவிட்டு கல்லூரிக்குள் சென்றேன். அங்கு பெண்களுடன் பேசுவதை தவிர்க்க வேண்டும் என்ற எண்ணத்துடனே சென்றேன். அதிகம் பெண்களுடன் பேசும் பசங்க... அப்பாஸ் போலவும்... நான் மாதவன் போலவும் எனக்கு நெனப்பு... (நெனப்பு - கவனிக்க) என்னதான் நாம அடக்கி வெச்சாலும். சுஜாதா சொல்ற மாதிரி அந்த ஹைட்ரோஜென், ஆக்சிஜென் மாதிரி இருக்கற ஹார்மோன் எக்ஸ்ட்ரா டைம் வேல பாக்க ஆரமிசிடுச்சு. வந்த முதல் நாளே நானும் என் நண்பனும், என் வகுப்பில் இருந்த பெண்களுக்கு மார்க் போட ஆரமித்தோம்.. 'மச்சி.. ஒரு நாப்பது..' என்று அவன் சொல்ல... 'மச்சி.. நீ வாத்தியார போனா எல்லாரும் பாஸ் ஆயிடுவாங்க' என்று நாங்கள் கலாய்க்க. இப்படியான வறண்டு போன பாலைவனத்தில்தான் நான் நான்கு வருடம் படித்தேன்.

லேப்பில் சில அழகான பெண்கள் அருகே இருக்கும் கணினியில் அமர்ந்தால் போதும். நாங்கள் பேசும் பாஷையே வேறு மாதிரி ஆகிவிடும். 'மச்சி.. இந்த ப்ரோக்ராம் python -ல பண்ணலாம்' என்று ஏதோ தெரிந்த மாதிரி அடித்து விடுவோம். வகுப்பில் ப்ரொபசர் எதாவது கேள்வி கேட்டல் எழுந்து நின்றுகொண்டே இருப்போம். வெளியே போக சொன்னாலும். கெத்து காமித்து வெளியே போவோம்.
ஆக எனது டீன் ஏஜ் வாழ்க்கை கெத்திலே தொடங்கி கெத்திலே முடிந்தது......

டாக்டர்: போதும்.... நிறுத்து...
நான்: சார்.. எனக்கு என்ன பண்றதுன்னு நீங்கதான் சொல்லணும்...
டாக்டர்: [இப்போ நான் பட்ட கஷ்டத்தை எல்லாரும் படணும்] தம்பி... நீ உன் மனசுக்குள்ள எல்லாத்தையும் போட்டு அழுத்தி வெச்சுருக்க.. அத நீ ஏன் புஸ்தகமா போட கூடாது...
நான்: என்ன சார் சொல்றீங்க...
டாக்டர்: இல்ல.. இத நீ ஒரு சுயசரிதம எழுதினா... வருங்கால சந்ததியினர் படிச்சு தெரிஞ்சுபாங்க இல்ல...
நான்: அப்படியா சொல்றீங்க...

இப்படியாக எனது கொசுவத்தி சுற்றியது... டீன் ஏஜ் முடிந்தது... இதன் பிறகு நடந்த விஷயங்களை... எனது சரித்தர புத்தகம் வெளிவரும்போது படித்து தெரிந்துகொள்ளுங்கள். முதல் பதிவு பார்த்தவுடனே... பெரிய பெரிய பதிப்பகத்தில் இருந்து ஏகப்பட்ட கால்கள், நீங்க உங்க சுயசரிதம் எழுதுங்க என்று. அதனால் 'சத்யாவிற்கு சோதனை' என்ற எனது சுயசரிதம் சீக்கிரம் வெளிவரும் என்பதை மிகவும் பெருமையுடன் கூறிகொள்கிறேன்.

கொஞ்சம் லேட்தான் என்றாலும், கொசிவத்தியை சுத்த, கார்கில் ஜெய் அவர்களை அழைக்கிறேன்.


Tuesday, February 16, 2010

ஜொள்ளாத மனமும் ஜொள்ளும் - என் டீன் கதை - 1

சங்கிலிப் பதிவிற்கு என்னை அழைத்த அனன்யா அக்காவிற்கு முதலில் நன்றி....



சரி மேட்டேர்க்கு வருவோம்.. ஒப்பனிங்க்ல ஒரு ஆஸ்பத்ரிய காமிக்கறோம்....
நர்ஸ்: நெக்ஸ்ட்....
நான்: யா இட்ஸ் மீ...
நர்ஸ்: யூ கேன் கோ இன்...
நான்: நோ வே!!!
நர்ஸ்: வொய்!!!
நான்: யூ ஆர் ஸ்டான்டிங் ஆன் த வே...
நர்ஸ்: ஓ.. சாரி...
நான்: சரி...

டாக்டர்: கம் இன்...
நான்: சார், நாம தமிழ்ல பேசுவோமே...
டாக்டர்: வொய் நாட், சொல்லுங்க என்ன பிரச்சனை?
நான்: நைட் தூங்கும் போது ஒரே ஃபிகரா வருது டாக்டர்
டாக்டர்: என்ன மாதிரி ஃபிகர்
நான்: சின்ன வயசுல பாத்த பிகர் மாதிரி இருக்கு
டாக்டர்: நீங்க சின்ன வயசுல மாத்ஸ்-ல ரொம்ப நல்ல மார்க் வாங்கிருபீங்க போல இருக்கே... வாங்க நாம கண்டுபிடிப்போம். ஹிப்னடைஸ் பண்ணி பாப்போம்.
நான்: சார்.. நான் சொல்றது அந்த ஃபிகர் இல்ல....
டாக்டர்: ஐ நோ எவரிதிங்... யூ கம்... திஸ் இஸ் எ சிம்பிள் ப்ரோப்ளம்...

இப்போ நாம ஹிப்னடைஸ் ரூமிற்கு போகிறோம்.
டாக்டர்: நீங்க இப்போ மெதுவா தூங்க போறீங்க. அப்புறம் கதை சொல்லுவீங்க.
நான்: சார்... நான் தூங்க... நீங்கதான் கதை சொல்லணும்.. நான் எதுக்கு சொல்லணும்...
டாக்டர்: யோவ்.. பேசாம படுய்யா...
நான்: [டொயின்]...

டாக்டர்: இப்போ நீங்க உங்க பதிமூனாவது வயசுல இருந்து பத்தொன்பதாவது வயசு வரைக்கும் என்ன நடந்ததுனு சொலுங்க....
நான்:
நான் இப்போ எட்டாவது படிக்கறேன், கோ எஜுகேஷன். எங்க பாத்தாலும் சும்மா பொண்ணுங்க லட்டு மாதிரி இருக்கு. 'கொடும கொடுமன்னு கோயிலுக்கு போன அங்க ஒரு கொடும ஜிங்கு ஜிங்குனு ஆடித்தான்' மாதிரி, அந்த ஸ்கூல்-ல ஒரு ஒரு கிளாஸ்-லயும் ஒரு பாய்ஸ் செக்ஷன், அதுல நான். பக்கத்து கிளாஸ் ல பொண்ணுங்க. மத்த பசங்க எல்லாம் பக்கத்து கிளாஸ்-க்கு டவுட் கேக்க அடிக்கடி போவாங்க. நாம என்ன டவுட் வந்தாலும் அந்த பக்கம் போக மாட்டோம், சுனா பானா கெத்து மெயின்டெயின் பண்ணுவேன். ஆனாலும் அந்த கவிதா, தீபா, தனலக்ஷ்மி, வித்யா அவங்களுக்கு மட்டும் நம்ம கெத்துல இருந்து கொஞ்சம் விதி விலக்கு. நான் சின்ன வயசுல இருந்தே ஒரு பெரிய தி. மு.க ஆதரவாளன். ஹிந்தி அப்படினாலே நமக்கு அலர்ஜி. எங்க அக்காக்கு ஹிந்தின்னா உசுரு. அத அமிர்கான் படம் பாக்கறதோட நிறுத்தாம, என்னவோ டெல்லி போற தூதர் மாதிரி பரிட்சையா எழுதி தள்ளிட்டா. அம்மாவும், அப்பாவும் ஹிந்தி படி ஹிந்தி படின்னு ஒரே டார்ச்சர். எனக்கு 18-ஆம் தேதி ஹிஸ்டரி ஹோம் வொர்க் இருக்கு, என்று நானும் நம்ம கவுண்டர் ரேஞ்சுக்கு முயற்சி பண்ணினேன். மூச்சு முட்ட முட்ட முயற்சி பண்ணியும் முடியாமல் அங்க போய் சேர்ந்தாச்சு. ஆ... என்ன.. இவளா... நம்ம தனலக்ஷ்மி... அவ முன்னாடி கெத்து காமிக்க... ஹிந்தி ஜி நமக்கு முன்னாடியே தெரிந்தவர் அதனால்... "ஜி...மே ஃபிர் ஆத்தா ஹூன்... அப் ஜாதா ஹூன்...ஜூனுன் சீரியல் கா டைம் ஹை" என்று குதிரையை ஓட்டிவிட்டு, அவளைப் பார்த்து செஞ்சுரி அடித்த சச்சின் போல புன்னகையை உதிர்த்தேன். அப்புறம் காப்பி அடித்து எப்படியோ பாஸ் செய்துவிட்டேன்.

எட்டாவது படிக்கையில் என் அக்கா பனிரெண்டாவது, எனவே அப்பாவிடம் டியுஷனுக்கு வரும் பெண்களிடம் நம் தவறாக பார்த்தல் விஷயம் நேராக நளினி காதுக்கு போய்டும்... அவளை ஏன் நளினி-ன்னு சொல்றேன்ன இப்போ வர சீரியல்ல எல்லாம் அவள்தானே வில்லி... எங்க அக்காவும் அப்படிதான்... ஆனால், நான் ஒன்பதாவது போனவுடன்... அப்பா எப்போடா சண்டே வெளியில் போவார் நாம டெஸ்ட்க்கு சுபெர்விஷன் போகலாம் என்று காத்துக் கொண்டிருப்பேன்... சுபெர்விஷன் பார்க்கும் போது அப்படியே தாத்தா கடையில் இருந்து சுட்டு வந்த இங்கிலீஷ் புத்தகத்தை கையில் வைத்து பொம்மை பார்த்துக் கொண்டிருப்பேன். கெத்துதான்... டக்கென்று நிமிர்ந்து பசங்களை நோட்டம் விடுவேன்...உசாரா இருக்கேனாம்... அப்படி பார்த்துவிட்டு பெண்களின் பக்கம் ஒரு நோட்டம்... அவர்கள் நாம் உசாரா இருக்கறத கவனிச்சாங்கள அப்படினு... அப்போ வாங்க ஆரமிச்ச பல்பு... ரொம்ப நாள் தொடர்ந்தது.

ஒன்பதாவதில் சண்டை போட்டு ஒரு ஹெர்குலஸ் MTB சைக்கிள் வாங்கியாகிவிட்டது. பின்ன அக்காவுக்கு BSA SLR வாங்கின சும்மா இருப்போமா... நம்ம மருவாதைக்கு இழுக்கு இல்ல.. எங்க ஸ்கூல்ல ஒரு கயிறு இருக்கும், பிரேயர் ஸ்டார்ட் பண்ண அப்புறம் யார் வந்தாலும் அந்த கயிறுக்கு பின்னால நிக்கணும். நாம ஒரு பத்து நிமிஷம் முன்னாடியே போய், சைக்கிள் கயிறுக்கு பின்னாடி நிப்பாட்டிட்டு அங்கே நின்னுட்டு ஆட்டோ-ல வர போற பொண்ணுங்கள பாக்கற சுகம் இருக்கே... அட அட அட... யப்பா... டைம் மெஷின் சீக்கரம் கண்டு புடிங்கப்பா...உலகத்துல முதல்ல ஆம்ஸ்ட்ராங் நிலவுக்கு போனான்.. கார்த்திக் 1998 கு போனான்னு சரித்திரம் சொல்லட்டும். அப்போ பிரேயர் ஆரம்பிச்சுடும், லேட்டா வர மாப்பிளங்க அப்போதான் வருவாங்க, டேய் மச்சான் உனக்காகத்தான் வெயிட் பண்ணினேன் என்று ஒரு பீலாவை அவிழ்த்துவிட்டு பிரேயர் முடிந்ததும் கிளாஸ்-க்கு போவோம். அப்படியே கெத்தா உள்ள போறது, லேட்னாலேகெத்துதானே . அப்போதுதான் அந்த மேட்டர் நடந்தது. எனக்கு ஒரு பொண்ணு லெட்டர் குடுத்தது. அட உண்மையாதாங்க... பண்பாடு கருதி அந்த தோழியின் பெயரை நான் சொல்லவில்லை. அதும் கவிதைன்ன பாருங்களேன்...

'தரிசு நிலமாக இருந்த என்னை,
விளை நிலமாகிவிட்டு-
வேலி போட மறுப்பது ஏன்?'

படிச்சு பார்த்துட்டு மனதிற்குள், 'டேய் நீ இவளோ நாள் பட்ட பாடு வீண் போகலடா...' என்று என்னையே பாராட்டிக் கொண்டு அவளிடம்...'கவித நல்லாயிருக்கு, எதாவது போட்டியா?' என்றேன். 'போடா வெண்ணை' என்று அவள் சென்று விட்டாள். ம்ம்ம்.. இதெல்லாம் சரித்திரம்.

என்னதான் மனதிற்குள் நான் ஒரு பெரிய மன்மதன் என்று நினைத்தாலும், வெளியில் நான் ஒரு பெரிய பழம்தான். சாதா பழம் இல்லை பலாப்பழம். நெஞ்சு வரை பேன்ட் போட்டு இன் பண்ணிக்கொண்டு, பட்டையை இட்டுக்கொண்டு சாயிந்தரம் ஆனால் வேத கிளாஸ் போவதும். வர இறுதியில் கீ-போர்டு கிளாஸ் போவதுமாய் எனது நேரம் கழியும். அப்போதெல்லாம் கிளாஸ் போகும்போது, எங்க தெருவில் பசங்க விளையாடுவாங்க. என்னடா நம்ம வாழ்க்கை மட்டும் இவ்வளவு கொடுமையா போச்சே அப்படினு பீல் பண்ணுவேன்.

டாக்டர்: தம்பி... இந்த எபிசொட்-க்கு இந்த மொக்க போதும்... அடுத்த வாரம் இன்னொரு செஷனுக்கு வா... இப்போ நீ கெளம்பு...
நான்: சார்.. நான்
தூங்கும்போது என்ன சொன்னேன்...
டாக்டர்: டேய்.. நீ இன்னும் கெளம்பலையா....
நான்: [எஸ்கேப்]......


Friday, January 29, 2010

'மிலே சுர் புதியது' - ஒரு அபத்தம்

இந்தியா என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது அதன் வேற்றுமையில் ஒற்றுமை. இதை நிலைநாட்டும் வகையில் 80-களில் வந்த 'மிலே சுர்' அனைவரையும் கட்டிப்போட்டது. இன்றும் அதைப் பார்த்தால் நமது இந்தியாவை எண்ணி என் கண்களில் கண்ணீர் துளிர்க்கும், மயிர்க் கூச்செறியும். அந்த பழைய மிலே சுர் இதோ, உங்களுக்காக.



இன்று சினிமாவில் ரீமிக்ஸ் என்ற பெயரில் பாடல்களை அதிரி குதிரி செய்துகொண்டிருப்பது பத்தாது என்று இந்த மிலே சுர் பாட்டையும் கசாமுசாவென்று மாற்றி நாறடித்துவிட்டனர். இந்தியாவை பறைசாற்ற சினிமா நடிகர் மற்றும் நடிகைகளை தவிர வேறு யாருமே இல்லை போல. அதிலும் தீபிகா படுகோனே கிங் பிஷர் காலெண்டர் படத்தில் இருப்பது போல உடையை அணிந்துள்ளார். அந்த அந்த மாநிலத்தின் தலைசிறந்த மூன்றோ அல்லது நான்கு பேரையோ வைத்து செய்திருந்தால் மிக சிறப்பாக இருக்கும். அப்துல் கலாம் எங்கே? சச்சின் எங்கே? கங்குலி எங்கே? மணிரத்தினம் எங்கே? வாய்ப்பாட்டு இசைக் கலைஞர்களை காணவில்லை. ஒவ்வொரு மாநிலத்திலும் சினிமா நடிகர்கள்தான் பெரியவர்களோ? அல்லது வேறு யாரும் சாதனை படைக்கவில்லையோ. என்ன கொடுமை இது? வந்தே மாதரம் எடுத்த பாரத் பாலவா இது என்று கேள்வி எழுப்ப வைத்துவிட்டனர். அதுவும் இல்லாமல் ஆந்திராவை முதியோர் இல்லம் போல காண்பித்துள்ளனர். என்னைக்கேட்டால் இதை உடனே தடை செய்யவேண்டும். இதையே இரண்டு பாகங்களை வெளியிட்டு, இதிலேயே பிரிவினையை காட்டியுள்ளனர். அதுவும் உங்கள் பார்வைக்கு.





இதற்கு ஏதோ ஒரு ஆபீசில் வேலை செய்யும் சிலர் செய்திருக்கும் இது எவ்வளவோ தேவலை...




இதுதான் இப்படியென்றால், பத்மா விருதுக்கு சந்திரயான் குழுவில் இருந்து எவரும் இல்லை, ஆனால் சைப் அலி கானுக்கு விருது. எங்க போகிறது என் நாடு?


Friday, January 15, 2010

மலையாள படம் சீன் எடுப்பது எப்படி?


தலைப்பை பார்த்துவிட்டு அவசர அவசரமாய் ஓடிவந்த ரசிகப் பெருமக்களுக்கு, நான் சொல்லியிருப்பது ஒரு குடும்பப் படத்தை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

இது அனைத்தும் நான் பார்த்த மலையாள படங்களை வைத்து எழுதியது. இது சிரிக்க மட்டுமே, யாரையும் புண்படுத்த அல்ல.

தேவையான பொருட்கள்:
முற்றத்துடன் கூடிய வீடு - 1
ஹேண்டி கேம் - 1 (நீங்கள் சாதாரணமாக உபயோகிக்கும் டிஜிட்டல் கேமரா கூடப்போதும்)
மோகன்லால் - 1 (மம்மூட்டி இருந்தாலும் ஓகே)
சுகுமாரி - 1
தங்கை - தேவைக்கேற்ப்ப
வெளிச்சம் - முற்றம் இருந்தால் தேவையில்லை.

செய்முறை:
1. ஹேண்டி கேம் நல்ல முறையில் இயங்குகிறதா என்று பார்த்துக்கொள்ளவும். சுகுமாரியை சமையற்கட்டில் உட்கார்ந்து பத்திரத்தை வெறித்துப் பார்க்க சொல்லவும். அங்கு சென்று அவரை ஒரு ஐந்து நிமிடம் படம் பிடிக்கவும்.
2. தங்கைகளை படிக்குமாறு சொல்லி வேறு ஒரு அறையில் உட்கார வைக்கவும். அதையும் ஒரு ஐந்து நிமிடம் படம் பிடிக்கவும். அவ்வப்போது அசைவதும் நகம் கடிப்பது போல் இருந்தால் படமாக இருக்கும் இல்லையேல் போட்டோ போல இருந்துவிடும். கவனம் தேவை.
3. வெளியே இருந்து மம்மூட்டியயோ, மோகன் லாலையோ வரச்சொல்லவும். வந்ததும் அவர்கள் தூணருகே நின்று ஒரு முறை இருமச்செய்யவும், அல்லது வீட்டில் இருக்கும் மற்றவர்கள் கேட்கும் அளவிற்கு எந்த சத்தமானாலும் பரவாயில்லை. இதில் ஒரு ஐந்து நிமிடம்.
4. சுகுமாரியும், தங்கைகளும் வெளியே வந்தபின். நமது ஹீரோவை சோகமாய் முகத்தை வைத்துக்கொண்டு ஏதாவது பேசச் சொல்லவும். (மற்றவர்களுக்கு வசனம் எழுத வேண்டும், மம்மூட்டியும், மோகன் லாலும் நிறைய படங்களில் இதுபோல் வந்துள்ளதால் வசனம் அவர்களுக்கு தேவையில்லை)
'ஞான் பரயும்ம்...ஈ லோகத்தில் எண்ட சஹோதரிகளுக்கு கல்யாணம் ஆயிட்டில்லா...' என்பது போன்ற வசனங்களை பேசிவிட்டு கண்ணில் நீர்விட்டு வெளியே செல்ல வேண்டும்.

கட் சொல்லிவிடவும்.... அவ்வளவுதான்... இதை பத்து படங்களுக்கு பரிமாறலாம்.

இதற்காகும் செலவுக் கணக்கைப் பாப்போம்:

1. உடை: ஹீரோ வேட்டி சட்டை அணிவதால் அவர்களது உடையே போதும். சுகுமாரிக்கும் ஹீரோ வீட்டில் இருந்து ஒரு பழைய வேட்டியை எடுத்துவரச் சொல்லி சேலையைப் போல் உடுத்த சொல்லிவிடலாம். அவரிடமே ஏதாவது பழைய ப்ளவுஸ் இருந்தால் போட்டு வர சொல்லலாம். தங்கைகளுக்கு அவர்கள் அணிந்து வரும் தாவணியும், பாவாடை சட்டையும் போதுமானது. ஆகவே உடை செலவு இல்லை.

2. போக்குவரத்து: சுகுமாரியை தெரிவு செய்ததே அவர் அதே ஊரில் இருப்பதால்தான். அவருக்காகும் டவுன் பஸ் செலவு ஒரு ஐந்து ரூபாய். ஹீரோவிடம், சார் வீடு மாறி நுழைஞ்சதா நினைச்சுக்குங்க என்று கூறி சமாளித்து அவரது காரிலேயே அனுப்பிவிடலாம். தங்கைகள் அதே ஊர்காரர்களாய் இருந்தால் அந்த செலவும் இல்லை.

3. இதர செலவுகள்: தயாரிப்பாளர் வீட்டில் இருந்தே சாயாவை பிளாஸ்கில் போட்டு கொண்டுவந்தால் அந்த செலவு குறையும். கூட வந்த ஆட்களையும் அதையே கொடுத்து சமாளிக்கலாம். ஆக செலவுகள் கம்மியாகும்.

இதனால் மலையாள படங்களின் சீன்களுக்கு ஆகும் செலவு சொல்லப்போனால் ஒன்றுமே இல்லை.

மலையாள படங்களில் தொழில்நுட்ப வளர்ச்சியை உட்புகுத்த நினைக்கும் நம்மவர்கள், அங்கிங்கு பேருந்து செல்வதை காண்பியுங்கள். அருமையான வளர்ச்சி... மலையாள சினிமாவை வளர்த்த பெருமை உங்களை சேரும்.

இதையும் மீறி வெளிநாட்டில்தான் பணத்தைக் கொட்டித்தான் படம் எடுப்பேன் என்று அடம்பிடித்தால், நீங்கள் பாலிவுட்டில் முயற்சி செய்யவும்.
அடிதடி, பன்ச் டயலாக் போன்ற மசாலா சமாச்சாரங்கள் வேண்டும் என்றால் தமிழ் மற்றும் தெலுங்கு படத்திற்கு முயற்சி செய்யவும்.
"அழகான" ஹீரோவை வைத்து படம் எடுக்க வேண்டுமென்றால் கன்னட படங்களுக்கு செல்லவும்.

கேபிள் சங்கர் அண்ணன் மாதிரி போடலாம்ன்னு பாத்தேன். ஏதோ என்னால முடிஞ்சுது....


Wednesday, January 13, 2010

அடக்கி வாசி....


முதல்ல கிறிஸ்துமஸ் வந்தது, அப்புறம் புது வருஷமும் வந்தது, கோவா, விண்ணைத்தாண்டி வருவாயா மாதிரி நல்ல பாடல்களும் வந்தது. இப்போ பொங்கலும் வந்தாச்சு. இதெல்லாம் வந்தபோது நல்ல சந்தோஷமா இருந்தேன். இப்போ என் செமெஸ்டர்-உம் வந்தாச்சு. படிக்கற வேலைய பாக்கதான இங்க வந்தோம், சரி அதையும் கொஞ்சம் பாக்கலாம்னு முடிவு பண்ணிருக்கேன்.

கை, ப்ளாக் எழுது எழுது என்று துடிக்கிறது
ஆனால் ப்ரொபசர் கொடுத்த அசைன்மென்ட் அதை அடக்கு அடக்கு என்கிறது.

அதனால இன்னும் கொஞ்ச நாளைக்கு அடக்கிதான் வாசிக்க போறேன். மன்னிக்கவும் அடக்கி எழுத போறேன். வாசிப்புல எந்த அடக்கமும் இல்ல, ப்ளாக் வாசிப்பு நடந்துகொண்டே இருக்கும்.

ஏதோ அப்போ அப்போ நம்ம கடை பக்கம் வந்து ஜிகர்தண்டா சாப்பிட்டு போங்க. :)

இப்போதைக்கு எல்லாருக்கும் எனது இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.


Tuesday, January 05, 2010

வெளியுலகம்-2


பாகம்-1

கிழக்கே வானம் வெளுக்க ஆரமித்திருந்தது. எப்போது கந்தசாமி அண்ணன் வருவார் என்று காத்திருந்தேன். இரவு முழுவதும் தூங்கினால்தானே விழிப்பதற்கு.

மணி ஆறரை இருக்கும். கந்தசாமி அண்ணன் வந்து கதவைத் தட்டி திறந்துவிட்டார். கண்களில் நீர் துளிர்த்து இருந்தது. 'தம்பி.. வாப்பா..போகலாம்..' என்றார். வெளியே வருகையில் அவரிடம் சொன்னேன். 'அண்ணே... நம்ம சகாக்கள்கிட்ட சொல்லிட்டு வரேன்' என்று கூறி அவரது ஒப்புதலுக்கு காத்திருந்தேன். தலையசைப்பிற்க்கு பின், எனது இரண்டு அறைக்கு அடுத்து இருந்த மார்த்தாண்டன் அறைக்குச் சென்றேன்.

'மார்த்தாண்டம் அண்ணே, ராஜேஷ் வந்துருக்கேன்...இன்னிக்கு எனக்கு ரிலீஸ்... வரேண்ணே'
கண்ணில் கண்ணீர் பெருக, கட்டியணைத்து 'குரு... போறேன்னு சொல்லுங்க குரு..நீங்க எங்கயோ இருக்க வேண்டியவன்..இந்த பாழாப்போன இடத்துக்கு வராத குரு' என்றார். எனக்கும் துக்கம் தொண்டையை அடைத்தது.
சுப்ரமணி, 'குரு.. போ குரு.. இந்த வெளியுலகம் உனக்காக காத்திருக்கு.. நானும் வரேன்.. எங்க இருக்கேன்னு மட்டும் சொல்லு குரு' என்றான் நட்புடன்.
மனோஜ், அறைக்குளிருந்தவாறே, கண்ணீரை அடக்க முடியாமல், 'நீ அப்படியே போயிடு குரு. என்னப்பாக்காத!!!' தூக்குதண்டனைக் கைதி. என்னை எப்போது மறுபடியும் பார்ப்பான். தெரியவில்லை.
வெளியே இருந்து உள்ளே வருகையில் எனக்கு யாருமில்லை, இப்போது நான்கு ஜீவன்கள் எனக்காக இருக்கின்றன, அழுகின்றன. வாழ்கையில் நானும் வெற்றிபெற்றுள்ளேன்.

கந்தசாமி அண்ணன் கையெழுத்து போடசொன்ன இடங்களில் கையெழுத்தைப் போட்டேன்.
'தம்பி, இத நீ போன வருஷமே பண்ணிருக்கணும். நெறைய முயற்சி பண்ணுனேன். குண்டுவெச்சவனுக்கு ரிலீஸ் குடுத்தானுங்க, உனக்கு குடுக்க மாட்டேன்னு சொல்லிடாங்க. எப்படியோ இப் நடந்துச்சே. சந்தோஷம். '
'பரவால்ல அண்ணே'
'போ தம்பி, வீட்டுக்கு வா அடிக்கடி. இந்த நம்ம அட்ரஸ். எப்பனாலும் வா' பாசத்துடன் அவர் கூறியது, என்னையறியாமல் கண்ணீரை வெளியேற்றியது.

வெளியே காலெடுத்து வைத்தேன் புது லட்சியத்துடன், யாராவது இருக்கிறார்களா என்று தேடினேன். இதுவரையில் வராதவர்களா, இப்போது வந்திருப்பார்கள். எவரும் இல்லை. உள்ளே வேலைப் பார்த்ததில் கொடுத்த நான்காயிரம் ரூபாய் எனது பாக்கெட்டில் இருந்தது. எங்கே செல்லலாம், என்னதான் கோவம் இருந்தாலும், அப்பாவும் அம்மாவும் இப்போது இருக்கும் நிலையில் ஏற்றுக் கொள்வார்கள், என்று கந்தசாமி அண்ணன் சொன்னது எனக்கு நம்பிக்கையளித்தது.

வண்டியேறினேன் ஊருக்கு, சிறைக் காலங்களை அசைபோட்டபடி பயணித்தேன். முன்னிரவு தூங்காத காரணத்தால், தூங்கியும் போனேன்.

என் பேருந்து நிறுத்தம், என் தெரு, என் வீடு. சென்று கதவைத் தட்டினேன், ஒரு குல்லா போட்ட சேட்டு வந்தார்.
'நிம்பிள்க்கி.. யார் வேணும்...'
'Mr. கோவிந்தராஜன், இங்க இருந்தாரே'
'நம்பிள்க்கி தெரியாது... நம்பிள் இப்போதான் வந்தாங்கோ' என்று கூறி கதவை சாத்தினார்.

பக்கத்து வீடு கோமளம் ஆன்ட்டி, தாடியுடன் இருந்தாலும் என்னை அடையாளம் கண்டுகொண்டார். 'அவங்க மூணு வருஷம் முன்னாடியே மாத்தலாகிப் போயிட்டாங்களே. எங்க போனாங்கன்னு தெரியாது' என்று முன்னாட்களில் வாங்கிய காப்பி பொடிக்கும், சக்கரைக்கும் விசுவாசமாய் இருந்தார். இதேதான் எதிர் வீட்டு ஆன்ட்டியும் அதே கதைதான். முக்குக் கடை பாய் கூட தெரியாது என்று சொன்னது எனக்கு ஆச்சிர்யமாய் இருந்தது. மிட்டாய், பப்பிள் கம் மற்றும் ஊர்க் கதை என பல விஷயங்களை பகிர்ந்த எனது நண்பர் ஆச்சே அவர். சிறைக்கு சென்ற நேரத்தில், எனக்கு எதிர்ப்பார்ப்புகள் இல்லை. அனுபவம் புதியதாய் இருந்தது. இங்கு எதிர்பார்ப்புடன் வந்த எனக்கு ஏமாற்றம் கசந்தது.

திலக், அவனுக்கு என்னை ஞாபகம் இருக்குமா என்று கூட தெரியாது. முயற்சி செய்து பாப்போம், என்னைப் பற்றி அவனுக்கு தெரியுமே. கல்லூரிக்கு சென்றால் அவனது முகவரியை கண்டுபிடித்துவிடலாம். மீண்டும் எனது பைகளை எடுத்துக்கொண்டு, சென்னை நோக்கி பயணமானேன். கல்லூரி, முற்றிலும் புதிய தோற்றம். எல்லாமே மாறி இருந்தது. ஆபிஸ் எங்கிருக்கிறது என்று கண்டுபிடிக்கும் முன்பு நாக்கு வறண்டதால், டீ குடிக்க கண்டேன் சென்றேன். அவளை நான் சந்திப்பேன் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை.

'நீங்க ஊர்வசிதான?'
'நீங்க.... ராகுல்...'
'ராஜேஷ்'-திருத்தினேன்
'ஓ.. சாரி.. ரொம்ப நாள் ஆச்சில்ல அதான்'
'பரவால்ல.. இருக்கடும்ங்க. எப்படி இருக்கீங்க?'
'நான் நல்ல இருக்கேன்... நீங்க?'
'நான் இப்போதாங்க வந்தேன். உங்ககிட்ட ஒரு விஷயம் கேட்கணும். திலக் எங்க இருக்கானு தெரியுமா?'
'அவன் அமெரிக்கா-ல அவங்க பிசினஸ் பாத்துட்டு இருக்கான்...'
'அப்போ நீங்க?'
'நான் இங்க லெக்சரர். என் வீட்டுக்காரர் இந்த ஊர்ல வேல பார்க்கறார். நானும் இங்க சேர்ந்துட்டேன்'- அவர்க பிரிந்துவிட்டனர் என்பதை நானே புரிந்துகொண்டேன். இவளிடம் என்ன கேட்பது. திலக், ஆறு வருடத்தில் என்னை பார்க்க வராதவன். அவனை நம்பி என்ன பிரயோசனம்.
'நன்றிங்க, நான் வரேன்'
'ஏதோ கேக்க வந்தீங்க. காபி, டீ ஏதாவது சாப்பிட்டு போறீங்களா?'
'இல்லேங்க வேண்டாம்.'-என்று கூறி நகர்ந்தேன்.

சொந்தம், விட்டுச் சென்றது. நட்பு, பறந்து சென்றது. இனி என்னை நானே நம்பவேண்டியதுதான். படிப்பு இருக்கிறது என் கையில், யாரை நம்பவேண்டும் நான். ஏதாவது பள்ளியில் ஆசிரியர் வேலைக்கு விண்ணப்பிக்கலாம் என்று முடிவெடுத்தேன். ஜெய் மெட்ரிக் பள்ளியில் ஆசிரியர் தேவை என்று விளம்பரப்படுத்தியிருந்தனர். விண்ணப்பித்தேன், அழைப்பும் வந்தது.

'வாங்க ராஜேஷ், உக்காருங்க'
'நன்றி சார்'
'நல்ல மார்க்ஸ் வாங்கி இருக்கீங்க, உங்களுக்கு அனுபவம் இருக்கா? நீங்க எங்க படிச்சீங்க?'
'அனுபவம் இல்ல சார். நான் கரஸ்பாண்டன்ஸ் கோர்ஸ்ல படிச்சேன்'
'ஓ.. பணக்கஷ்டமா?'
'இல்ல சார்... நான் ஜெயில்ல இருந்து படிச்சேன்'

அதுவரை நன்றாக பேசிக்கொண்டிருந்த அவர், தனது பேச்சை மாற்றினார். 'சாரி ராஜேஷ், இப்போ அறிவியல் ஆசிரியர்களுக்கு தேவை இல்லை. நீங்கள் அடுத்த முறை முயற்சியுங்கள்' என்று எனது ஃபைலை மூடினார்.

என்ன செய்ததால் இந்த உலகம் என்னை ஏற்றுக்கொள்ளும். செய்யாத தவறுக்கு, சிறையில் இருந்தேன். என்னால் முடிந்தவரை நல்லவனாய் இருந்தேன். என்ன தவறு செய்தேன். சிறையிலிருந்த எனது சகாக்கள் அளவுகூட வெளியுலகத்தில் அன்பு இல்லையா. நான் இப்போதுதான் சிறையில் இருப்பதாய் உணர்கிறேன். என்ன செய்ய இப்போது. மீண்டும் வெளியே முயற்சி செய்யலாம், ஆனால், இந்த பாழாய்ப் போன வெளியுலகத்தில் வாழ எனக்குப் பிடிக்கவில்லையே.
எல்லாரும் எல்லாரிடமும், எதையாவது எதிர்பார்த்துக் கொண்டுள்ளனரே. கந்தசாமி அண்ணனிடம் சென்று சிறையில் எதவாது வேலை இருந்தால் கேட்போமே. 'ஒன்றே செய் அதுவும் நன்றே செய், அதுவும் இன்றே செய்', அண்ணனை தேடித் போனேன் அவர் கொடுத்த விலாசத்திற்கு, அவர் அங்கு இல்லை. கண்டிப்பாக அவர் சிறையில்தான் இருப்பார். சென்று பார்த்துவிடுவோம்.

வெளியிலிருந்த காவலாளியிடம், 'அண்ணே, கந்தசாமி அண்ணனே பாக்கணும்.'
'பர்மிஷன் இல்லாம பாக்கமுடியாதுப்பா'
'அண்ணே, கொஞ்சம் அவசரம். வேல விஷயமா பாக்கணும். யார்க்கிட்ட பர்மிஷன் வாங்கணும்'
'அட அதுக்கெல்லாம் பெரிய எடத்துக்கு போகணும்ப்பா. இடத்த காலி பண்ணு'
'கொஞ்ச நேரம்ன்னே. அந்த பர்மிஷன் வாங்க இப்போ டைம் இல்லன்ன. கொஞ்சம் தயை பண்ணுங்க' - கெஞ்சினேன்
'டேய், உனக்கெல்லாம் ஒரு தடவ சொன்னா புரியாது. சோறுதான திங்கற?'-போலிஸ் போலவே எகிற ஆரமித்தார்.
'அவர இப்போ எப்படி பாக்கனும்னு எனக்கு தெரியும்'
'டேய், என்ன ரொம்ப தொகுருற, அடிபட்டு சாகாத நாயே. எப்படி பாக்கரன்னு நானும் பாக்கறேன்.'
போலிசும் என்னை மதிப்பதில்லை.

ஐந்து நிமிடம் கழித்து.....

இரண்டு போலிஸ்காரர்கள் என்னை இழுத்துக்கொண்டு சென்றனர். திரும்பிப் பார்த்தேன், அந்த காவலாளி மூக்கைப் பிடித்துக்கொண்டு நின்றிருந்தார், ரத்தம் வழிந்துகொண்டிருந்தது.
அதோ, கந்தசாமி அண்ணன்....



Monday, January 04, 2010

வெளியுலகம்-1


அந்த கிழக்கு மேற்கை பார்த்த அந்த சிறிய அறையில், தற்போது வெயில் இல்லை. காலையிலும், மாலையிலும் வணக்கம் சொல்லிச்செல்ல வரும் கதிரவன், தனது வேலையை நேர்க்கோட்டில் செய்துகொண்டிருந்தான். இந்த ஒளியிருந்தும், இல்லாத நேரத்தில் புத்தகம் படிப்பது ஒரு தனிசுகம். கண்டிப்பாக மணி பனிரெண்டை தாண்டியிருக்க வேண்டும். அது சோத்துக்கட்சியின் தட்டு தட்டும் கூடம் வெளியே வந்துவிட்டதே.

விட்டதை வெறித்து பார்த்துக்கொண்டிருந்தான்.
'டிங்...டிங்...டிங்.. ராஜேஷ் தம்பி..சாப்பிட வாப்பா..இங்க நீ சாப்பிட போற கடைசி மதியசோறு.. உனக்கு நினைவிருக்கில்ல நாளைக்கு உனக்கு ரிலீஸ் தம்பி..' அவர் சொல்லிச்சென்று பத்து நிமிடங்கள் ஆகியிருக்கும், இருந்தாலும் அவரது வருத்தம் தரித்த வரிகள் இவன் காதில் இன்னும் ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தது. அவனது துன்பத்தில் கை கொடுத்த ஒரே ஜீவன் ஜைளீர் கந்தசாமி அண்ணன்தான். புத்தகங்கள், படிக்க உதவியது என்று சிறையில் இவர்தான் அவனதுதந்தை.

ராஜேஷ் இங்கு வந்து ஆறு ஆண்டுகள் ஆகிவிட்டன. நல்ல குடும்பத்தில் பிறந்த பையன். அப்பா கவர்மென்ட் ஆபிசில் குமாஸ்தா. நன்கு படிக்கவேண்டும் என்ற ஆர்வம் இவனுக்குள்ளும் இருந்தது. சில விஷயங்களை அவர் அவர்களே சொன்னால் நன்றாக இருக்கும்.

நான் ராஜேஷ், வயது 17. பனிரெண்டாம் வகுப்பில் ஏதோ அதிர்ஷ்டவசமாக நல்ல மதிப்பெண்கள் எடுத்ததால் இன்று இந்த பொறியியல் கல்லூரியில் படிக்கிறேன். சென்னை, புதிய நண்பர்கள், பெண்கள். நான் படித்த பள்ளிகளில் எல்லாம் பசங்கதான். இன்று புதியதாய் பெண்களை பார்க்க ஒரு மாதிரியாய் இருந்தது. காரிலே வந்தே இறங்கி அங்கே இங்கே என்று வேடிக்கைப் பார்த்து நின்றிருந்தேன். சாமான்களை எடுத்து வைக்குமாறு அப்பா அதட்டியதில், 'எடுத்து வெச்சுட்டுதான் இருக்கேன், சும்மா கத்தாதீங்க!!!' என்று கத்தினேன். எனது கோவம் உலகறிந்தது. எங்கு போனாலும் கோவப்படுவேன், எனது பள்ளியில் எனக்கு மதிப்பெண் போடாத வாத்தியாரை திட்டியதில் பத்து நாள் சஸ்பென்ஷன் வாங்கினேன். நான் கத்தி அடங்கியபின் எனது அப்பா அம்மா, 'புது இடம், புது மக்கள் கோவப்பட்டு, ராகிங் அது இது ன்னு எந்த பிரச்சனையும் இல்லாம பாத்துக்கோ கண்ணு' என்று சொல்லிச் சென்றனர். 'சரி கிளம்புங்க, கப்பித்தனமா பேசிகிட்டு ' என்று மனதிற்குள் அவர்களை வைதேன். அவழ்த்து விட்ட கழுதை இல்லையா..

திலக், எனது ரூமில் இருந்த நண்பன். அவன் ஊரு கோயமுத்தூர். ஊட்டியில் படித்தானாம். ஆங்கிலத்தில் சும்மா வெளுத்துக்கட்டுவான். அவன்கூட இருந்தால் ஆங்கிலம் பேசக் கற்றுகொள்ளலாம் என்று எனக்கு எண்ணம். எங்கேயும் சேர்ந்துதான் சுத்துவோம். கான்டீன், கேர்ள்ஸ் ஹாஸ்டல் பின்னால் இருக்கும் ரோடு என சுற்றுவோம். அப்போதுதான் ஆரமித்தது வினை. ஒரு நாள் நாங்கள் கேர்ள்ஸ் விடுதி பக்கம் போகையிலே பிடித்தான் வெற்றி. எங்கள் சீனியர். பகலிலேயே குடிப்பான் போல, கண்கள் சிவந்து கேப்டன் கண்கள் போல இருந்தது. அவன் MLA பையன். என்னைவிட திலக் கொஞ்சம் ஸ்மார்டாக இருப்பான். அவனை வம்பிற்க்கிழுப்பதே அந்த சிவந்த கண்ணனின் வேலை. கோவம் பொத்துக்கொண்டு வந்தாலும், பல்லைக் கடித்து அடக்கிக் கொள்வேன்.

ஊர்வசி, எங்கள் வகுப்பில் இருக்கும் ஒரு தேவதை. பதிவேட்டில் அடுத்தடுத்த பெயராய் இருப்பதால் திலக் பென்சில் பேனா என்று வாங்கி ஓரிரு மாதத்தில் அவளை மடக்கிவிட்டான். அதெப்படி இவனுங்களுக்கு மட்டும் அப்படி அமையுதோ. இது ஒருபுறமிருக்க, ஒரு அழகான பெண் ஜூனியராய் வந்துவிட்டால் இந்த சீனியர் பசங்க விடும் ஜொள்ளை சொல்லிமாளாது. அப்படி அவளைப்பார்த்து வெற்றியும் ஜொள்ளு விட்டான். இந்த விஷயம் தெரிந்த திலக் அவளிடம் வகுப்பறையில் பேசும்போதெல்லாம், வெற்றி வருகிறானா என்று பார்த்து சொல்லும் வேலை எனக்கு. இதை கேவலமாக பல நண்பர்கள் ஓட்டி தள்ளுவார்கள். 'ஊரார் காதலை ஊட்டி வளர்த்தால்... எனக்கொரு காதல் அமையாதா' என்று நம்பிக்கையுடன் அவனுக்கு உதவி செய்தேன். இவனிடமிருந்து அங்கு சிட் பாஸ் செய்வதும், அங்கிருந்து இங்கு பதில் வருவதுமாய் அவர்களது காதல், சாரி நட்பு, நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளர்ந்தது.

இப்படி ஒருநாள் நான் வெளியே நின்று காவல் காக்கையிலே வந்தான் அந்த கருத்தமச்சான் வெற்றி.
'டேய்.. எங்கடா அந்த ****'
'அண்ணே... யாரு..'
'அதாண்டா உன் கூடயே சுத்துவானே...அந்த நாதாரி...' சத்தம் கேட்டு வெளிய வந்தான் திலக்.
'டேய்.. இன்னாடா அவ பின்னாடி சுத்துரியாமே... அவ உன் அண்ணிடா டோமரு...' என்று கத்தினான்.. கூட்டம் கூட ஆரமித்தது.
'நீங்க வீணா எங்க விஷயத்துல தலையிடுறீங்க..நல்லதில்ல' திலக் எதிர்த்து பேசினான்...
'என்னடா தல வாலுன்னு பேசற... பேண்ட்ட கழட்டுரா' என்றான்.. இப்போது கண்கள் கோவத்தில் சிவந்திருந்தன...
'கழட்டுரா நாயே'
'இங்க வேணாம் அண்ணே.. நைட் உங்க ரூம்க்கு நானே வந்து கழட்டுறேன். பொண்ணுங்கல்லாம் இருக்காங்க' திலக் கெஞ்சினான்.
'நைட் நீ என்னடா ரூம்க்கு வரது... அவளையே என் ரூம்க்கு வர வைப்பேன்டா.. இப்போ கழடுரா இல்ல என் ஆளுங்க உன் பேண்ட்ட அவுப்பங்க' என்றான் திமிராய்...
எனக்கு வந்த கோவத்தில்,'டாய்...' என்று கையை ஓங்கி முன்னால் ஒரு அடி எடுத்து வைத்தேன். சுவற்றில் உட்கார்ந்திருந்த அவன், பின்னால் சாய தலைக் குப்புற கீழே விழுந்தான். நான்கு மாடி அவன் சென்றதை பார்த்தேன், ரத்தம் வெளியே வந்து கொண்டிருந்தது. க்ஷண நேரத்தில் என்னை எல்லாரும் கொலைகாரனைப்போல் பார்க்க. அவன் ஆட்கள் MLA-விற்கு அலைபேச. நாள் கொலைகாரானாக ஆகிவிட்டேன். ஆக்கப்பட்டேன்.

அதற்குபிறகு, நான் சுயநினைவிற்கு வருவதற்குள் போலீஸ் அங்கு இருந்தனர், கல்லூரியிலிருந்து என்னை விளக்கியிருந்தனர். அப்பா, அம்மா வந்துகொண்டிருந்தனர். MLA அவரது பிள்ளை மீது படுத்து கதறி, என்னை சும்மாவிடப்போவதில்லை என்று சூளுரைத்துக் கொண்டிருந்தார். என்ன அருகில் வரக்கூட என் கல்லூரி, மன்னிக்கவும் எனது முன்னாள் கல்லூரி நண்பர்கள் தயங்கினர். திலக் உட்பட.

அப்பா அம்மா அங்கு வந்து சேர்ந்தனர். விஷயம் அறிந்ததும், அவர்களும் எனது கோவத்தை சாக்காய் வைத்து நான்தான் செய்திருப்பேன் என்று நம்பினார். அவர்கள் என்ன செய்வார்கள், சுற்றி இருக்கும் சாட்சியங்கள் எனக்கு எதிராய் அமைந்துவிட்டதே.
'ஏண்டா, எத்தன தடவ சொல்லிட்டு போனோம்...இப்படி பண்ணிடையே டா...' அம்மா கண்ணீருடன் கத்தினார்...
'அம்மா... இல்லம்மா...நான் இல்லம்மா'.. அவர்களது சத்தத்தில் எனது சத்தம் அமிழ்ந்துபோனது.
'இனிமேல் ஊர்க்காரங்க மூஞ்சில எப்படிடா முழிப்பேன், நம்ம குடும்ப மானத்த வாங்கிட்டயேடா.' அப்பா தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
'இனிமேல் என் மூஞ்சிலையே முழிக்காதடா... வாடி போகலாம்' அப்பா அம்மாவையும் கூடிச்சென்றார்.... வருவார்.. என்று நம்பினேன்... நம்புகிறேன் இன்றுவரை...

பிறகு வழக்கு கோர்ட் அங்கு இங்கு என்று சென்று எனக்கு ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை என தீர்ப்பு வந்தது. எனக்கென அழுக ஒரு கண்கள் கூட இல்லை, என் கண்கள் கூட இல்லை.

சிறை, கொள்ளையர்கள், கொலைகாரர்கள் கூடாரம் என்று எண்ணிய நான், என்னைப்போலவும் சிலர் இங்கு இருப்பர்களோ என்று எண்ணத்தொடங்கிய இடம். வந்த ஒரு மூன்று மாதங்கள் யாருடனும் தொடர்பற்று இருந்தேன். சிலர் கந்தசாமி அண்ணன், உறவுகளற்ற எனக்கு ஒரு உறவை இருந்தவர், அவருடன் மட்டும்தான் நான் பேசுவேன். எனது கதையைக் கேட்ட அவர், ஏதாவது படிக்கிறயா என்று கேட்டு கார்ல் மார்க்ஸ் மற்றும் சேகுவேரா போன்றவர்களின் புத்தகங்களை வாங்கிக் கொடுத்தார். எனக்காக மேலிடத்தில் போராடி சென்னை பல்கலைகழகத்தின் அஞ்சல் வழி முறையில் இளங்கலை அறிவியல் பட்டம் படிக்க உதவினார். ஓரிரு மாதங்கள் கழித்து, என்னிடம் வந்த கந்தசாமி அண்ணன். 'தம்பி, இங்க இருக்கறவங்க எல்லாரும் தப்பானவங்க கிடையாது. ஏதோ சந்தர்ப்ப சூழ்நிலை அவங்கள குத்தவாளியா ஆக்கிருச்சு. அவங்களுக்கும் படிக்கணும், தெரிஞ்சுக்கணும்னு ஆசை இருக்கு. நீ ஏன் இவங்களுக்கு சும்மா தெரிஞ்சதை சொல்லித்தரக்கூடாது? உனக்கு எல்லா புத்தகங்களும் நான் வாங்கித்தரேன்' எனக்காக இவ்வளவு தூரம் உதவி செய்த பெரியவரின் பேச்சை என்னால் தட்ட முடியவில்லை. சரி என்று ஒத்துக்கொண்டேன்.

எனது வகுப்பறை மாணவர்கள்,

மார்த்தாண்டம், தன் மனைவியை கொன்றுவிட்டு வந்தவர். எதனால் என்று நான் கேட்கவில்லை. ஆயுள்தண்டனை கைதி.
சுப்ரமணி, சின்ன சின்ன திருட்டுகள் செய்து வருபவன். வயிற்றுப் பிழைப்புக்காக.
மனோஜ், கூலி வேலை செய்து வந்தவன், தன் முதலாளியை அடித்துவிட்டு வந்திருந்தான்.

இவர்களுக்கு அ, ஆ முதல் எனக்கு தெரிந்த எல்லாவற்றையும் சொல்லித்தந்து வந்தேன். அவர்களும் என்னை செல்லமாக குரு என்று அழைப்பார்கள். மார்க்ஸ் மீது ஏற்ப்பட்ட பற்றினால் நானும் தாடி வளர்க்க ஆரமித்தேன். இங்கும் அரசியல் மற்றும் ரவுடித்தனம் செய்து வந்த சிலர் இருந்தனர். அவர்கள் இல்லாத பக்கமாய் பார்த்து கந்தசாமி அண்ணன் எங்களுக்கு தச்சு வேலை செய்யும் இடத்தில் வேலைப் போட்டுக் கொடுத்தார். கைத்தொழில் ஒன்றையும் கற்றுக் கொண்டுவந்தேன். மூன்று வருடங்கள் ஓடின. வகுப்பில் மாணவர்கள் அவ்வப்போது கூடியும் குறைந்தும் இருந்தனர். நானும் நல்ல மதிப்பெண் எடுத்து இளங்கலை பட்டம் முடித்துவிட்டேன். மீண்டும் படிக்க இருந்த ஆர்வத்தால் முதுகலைப் பட்டத்திற்கு விண்ணப்பித்து அதுவும் கிடைத்தது.

புத்தகங்கள், எனது உற்ற நண்பன். எனது அறை முழுவதும் புத்தகங்கள். வேலை நேரம், பாட நேரம் தவிர மீதிநேரம் புத்தகத்துடன் கழிந்தது. சுஜாதா, பாலகுமாரன், கர்ட் வன்னகேர்ட், அயன் ராண்ட், கப்ரியல் க்ராசியா மார்குவேஸ் போன்ற பல எழுத்தார்கள் என்னுடன் அந்த சிறை அறையில் வாழ்ந்தனர். நானும் சில கதைகள் மற்றும் கட்டுரைகளை எழுத ஆரமித்தேன். இப்படியாக அடுத்த இரண்டு ஆண்டுகள் ஓடின. முதுகலையும் முடித்துவிட்டேன். வெளியே சென்றால் நல்ல வேலை கிடைக்குமென கந்தசாமி அண்ணன் நம்பிக்கை தெரிவித்தார். அப்படி சொல்லும்போதெல்லாம், அவரது கண்ணில் நீர் துளிர்க்கும். நான் அவரைவிட்டு செல்கிறேன் என்ற காரணத்தால்.

இந்த ஆறு வருடத்தில் என்னை பார்க்க யாருமே வரவில்லை, ஒரு வேளை நான் நன்கு படித்து பக்குவமடைந்தது தெரிந்திருக்காது. வெளியே சென்று சொல்லுவோம்வெல்லுவோம்.

நாளை நான் விடுதலை ஆகிறேன். யார் வருவார்கள் என்னை வரவேற்க? அப்பா அம்மாவிற்கு தெரியுமா எனக்கு விடுதலை என்று. இந்த நினைவுடன் கண்ணயர்கிறேன். நாளை பாப்போம்.

(தொடரும்)




Friday, January 01, 2010

கலீஜ் கவிதைகள்


இவை எண்ட்டர் கவிதையின் உட்பிரிவில் வகைப்படுத்தப்படும் கவிதைகள். கலீஜ் என்னும் சிறந்த வகை கவிதைகள், மொக்கைகாளாய்ப் பார்ப்பவர்கள் மொக்காழ்வார் எழுதிய சிறிய புராணத்தை புரட்டிப் பார்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

காதலி தேவை:
முள்ளை முள்ளா லெடுக்க
முள் தைக்கும்
வார்த்தை பேசும் மற்றொரு
காதலி தேவை!!!!

பைக் காதல்:
அவளுக்காக பைக் வாங்க
நான் பஸ் ஏறினேன்
முன்சென்ற நண்பனின் பைக்கில்
அவள் ஏறினாள்!!!

- கவிஞர் ஜிகர்தண்டா


Related Posts with Thumbnails

blogger templates | Make Money Online