Friday, October 23, 2009

ஆஹா வந்துருச்சு!!!

"வானம், நிலா, நீலம்...."
"பூ, வண்ணம், வண்டு, தேன்....."

அட சே, நமக்கு காதல் வந்தாச்சு ஆனா கவித வர மாட்டேங்குதே. அது சரி, பல்லு இருக்கவன் பக்கோடா சாப்பிடுவான், நம்ம அதெல்லாம் ட்ரை பண்ண முடியுமா? மேட்டர்-க்கு வருவோம். நம்ம அழகிய தீயே படத்துல சொல்ற மாதிரி எனக்குள்ளயும் பூம் வந்துருச்சு. அவ அவ்வளோ அழகு, எவ்வளோ அழகுன்னா, அவ்வளோ அழகு. அவள வடிச்சவனே நான்தானே. கற்பனையா பூ.. அப்படினு துப்பிட்டு browser-அ க்ளோஸ் பண்ணாதீங்க. உண்மையாத்தான் சொல்றேன்.

ரெண்டு வரில தான் பேசிட்டு இருந்தா, நான் அவள மூணு வரில பேச வச்சது நான். எனக்கு பிடிச்சவங்கள மத்தவங்களுக்கு தெரிய வைக்கணும்னு நெனச்சேன் அதுக்கு வழி செஞ்சது அவதான். என்ன யார் யார்க்கு பிடிக்கும், என் எழுத்து யார் யார்க்கு பிடிக்கும்னு சொல்றதும் அவதான். அவளுக்கு பாட்டுனா ரொம்ப பிடிக்கும், அதனால பாட்டு சொல்லி தர FM மூலமா டீச்சர் செட் பண்ணிருக்கேன். நான் எழுதுனது எனக்கே மறந்தாலும் அவ ஞாபகப் படுத்துவா. இதுக்கு மேல ஒருத்தனுக்கு என்னங்க வேணும்.அவ போதும்ங்க எனக்கு. அவள பாத்துகரதுதான் என் வாழ்க்கைல முதல் லட்சியம்.

அவ பேரு... அவ பேரு... ஐயோ வெக்க வெக்கமா வருதே!!!!... அவ பேருதாங்க ஜிகர்தண்டா. இப்போ என் லவ்-க்கு சாங் dedicate பண்ணிருக்கேன், அதைத்தான் கேளுங்க, ப்ளே பட்டன பிரஸ் பண்ணுங்க.




2 Comments:

Ragavendran Madhusudanan said...

athu enna, rendu paatu odikitu iruku? I am not able to listen to your dedication song....

Ragavendran Madhusudanan said...

finally figured it out... stopped the FM radio on the right and then played the song... good one :-)

Related Posts with Thumbnails

blogger templates | Make Money Online