Monday, October 26, 2009

சிகாகோ... get.. set.. go..



தேதி: அக்டோபர் 10
நேரம்: மாலை 6:30

திரு கார்கில் ஜெய் அலைபேசியில் அழைத்து, "என்னப்பா நாளைக்கு காலைல மாரத்தான் போலாமா?" என்றார்.
"போலாமே ஆனா என்கிட்ட சாதாரண ஷூ தான் இருக்கு" என்றேன்.
"டேய், ஓடரத்துக்கு இல்லடா பாக்கறத்துக்கு" என்றார்.
"என்ன என்னால ஓட முடியாதுன்னு நெனச்சீங்களா? நான் 30 கீ.மீ தூரத்த, 11 மணி நேரத்துல நடந்துருக்கேன்" என்றேன்.
"டேய் இவங்கலாம் 2 மணி நேரத்துல ஓடி ரெகார்ட் பண்ணுவாங்கடா! வரயா வரலையா? " என்று கூறிய கோப சூட்டில் என் காதுகள் பழுத்துவிட்டது. நேரில் இருந்திருந்தால் நெற்றிக் கண்ணை திறந்திருப்பார்.
"எத்தன மணிக்கு?" - நான்.
"மார்னிங் 6:30"
"சிகாகோ குளிருல அந்த டைம்-ல அனிமல்ஸ் கூட எந்திரிக்காது, வர ட்ரை பண்றேன்" - என்று நான் போனை வைத்தேன்.

என்னதான் நான் சலித்துக்கொண்டாலும், சிகாகோ என்றாலே நிதி நிறுவனங்கள் மற்றும் பலமாடி கட்டிடங்கள் மட்டுமே இருக்கும் என்று நினைத்த எனக்கு, இது ஒரு புது அனுபவமாக இருக்கும் என்று நம்பினேன். அந்த எண்ணம் வீண் போகவில்லை.

டைம்-அ எப்படி போக்கலாம்னு யோசிக்கும்போது, ஒரே மேகமூட்டம், சாம்பராணி வாசம் எங்க தாத்தா என் முன்னாடி வந்து 'எப்போதும் போல எது செய்வதற்கு முன்னாடியும் அதை தெரிஞ்சு செய்யனும்'னு சொன்னாரு. சட்டுன்னு மேகம் கலஞ்சுது. சரி நாம மாரத்தான் பத்தி தெரிஞ்சுபோம்னு நம்ம தலிவர் கூகுளை கூப்பிட்டேன். இப்போ கேள்வி பதிலை பார்ப்போம்.

காவி: மாரத்தான்-னா என்ன?அதுக்கு பேர் எப்படி வந்தது?
தலிவர்: சுமார் 42.195 கீ.மீ அல்லது 26.385 மைல் ஓட வேண்டும், இதில் யார் ஓட வேண்டுமென்பது முக்கியம் இல்லை. வெற்றி பெற வேண்டும் என்ற வெறியுடன் இருப்பவர் தொடங்கி, தொடக்கத்தில் எடுக்கும் புகைபடத்தில் முகம் வர வேண்டுமென்று நினைப்பவர் வரை எவரும் ஓடலாம், ஆனால் கூட்டத்தில் அவர் முகம் வரும் என்பதற்கு கியாரண்டி கிடையாது.
அதுக்கு ஏன் இந்த பேரு வந்துச்சுன்னா, முன்னொரு காலத்தில் கிரேக்க படை பெர்சியா படையை வென்றது, இதை அறிவிக்க ஒரு தூதுவன் மாரத்தான் என்னும் ஊரிலிருந்து பெர்சியா வரை நிற்காமல் ஓடிச்சென்று அங்கு மக்களவையில் தங்களது வெற்றியை அறிவித்து மயங்கி விழுந்து உயிரை விட்டான். அதிலிருந்து இந்த தலை தெறிக்க ஓடும் போட்டிக்கு மாரத்தான் என்ற பெயர் வந்தது. (பாவம் உயிர் விட்ட அந்த தூதுவனின் பெயரை வைத்து இருக்கலாம்). அவர் எவள்ளவு தூரம் ஓடினார் என்று எவருக்கும் தெரியவில்லை, ஆனால் மாரத்தான்-இன் தூரம் 1921-இல் தான் முடிவு செய்யப்பட்டது, அதற்கு முன்பு வரை தனக்கு தோன்றிய தூரமென போட்டி அமைப்பாளர் முடிவு செய்யலாம்.

காவி: சிகாகோ மராத்தானை பற்றி கொஞ்சம் சொல்லு தலிவா
தலிவர்: சிகாகோ மராத்தான் 1905-ல ஆரமிச்சாங்க. சிகாகோ downtown-ல தெருத்தெருவா ஓடுவாங்க. லேக் மிச்சிகன்-ல ஆரமிச்சு அப்படி, இப்படி போய் மறுபடியும் அங்கேயே வந்து முடிப்பாங்க. இந்த தடவ எங்க சுத்துராங்கனு நீயே மேப்ப பார்த்து தெரிஞ்சுகோ. இந்த தடவ இத பேங்க் ஆப் அமெரிக்க நடத்தறாங்க. முதல் ஆளு ரெகார்ட் முறியடிச்சா $100,000 தரதா சொல்லிருகாங்க. இதுக்கு மேல நேர்ல பாத்துக்கோ.

நன்றி தலிவா!!!

நாளைக்கு காலைல கிளம்பனும். அலாரம் வைப்போம், சரி ஒரு 5:30-க்கு அலாரம் வைப்போம்.

தேதி: அக்டோபர் 11
நேரம்: காலை 6:15

என்னதான் அலாரம் வெச்சாலும் நான் இந்த டைம்-க்கு தான் எந்திரிச்சேன். நம்ம தலைவருக்கு போன் பண்ணினால், அவர் அங்கு நின்று போட்டோ எடுத்துக் கொண்டிருந்தார். சீக்கரம் கெளம்பி வா என்ற அவரது ஆணைக்கு இணங்கி சடாரென கெளம்பினேன். அங்கு போய் அந்த கூடத்தில் அவரை தேடி கண்டுபிடிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.

அவர் எனக்கு எல்லாரும் ஓட ஆரமித்ததை சொல்ல ஆரமித்தார்.
'சும்மா பெரிய கூட்டம், நான் கூட ஓடலாம்னு நெனச்சேன்னு' சைக்கிள் கேப்புல, சரி பையன் என்ன சொன்னாலும் நம்புவான்னு அவருக்கு நெனப்பு. நானும் நம்பிட்டேன்.
'அதுவரைக்கும் நான் அவ்வளவு கூட்டத்த பாத்தது இல்ல, நாம அந்த பக்கமா போய் நின்னு அந்த ரோடு-ல வரும்போது போட்டோ எடுப்போம்'னு சொன்னாரு. நானும் போனேன். அதோட அவுட்புட்டை நீங்கள் இந்த போட்டோக்களில் பார்க்கலாம்.





'எவ்வளோ கஷ்டம் தெரியுமா, என்ன ஸ்டாமினா வேணும் தெரியுமா?' என்று அளந்து கொண்டிருந்தார்.
'இதெல்லாம் என்ன சித்தப்பு, நான் கூடதான் $2000 ஷூ, அங்க அங்க gatorade, இத்தன பேரு கைத்தட்டுனா ஓடுவேன். this is not that big, you know' என்றேன்.
நீங்களே சொல்லுங்க இத்தன வசதி இருந்த ஏன் ஓட மாட்டாங்க. நம்ம ஊருல வசதி கம்மி, நம்ம ஊருல உட்ட நாம கிராமத்து பசங்கலாம் சாதரணமா ஓடுவாங்க. infrastructure, facility நம்ம ஊருல இல்ல, அதுதான் மேட்டர்.
சிலபல போட்டோகளை எடுத்துவிட்டு, நாங்கள் முடிவடையும் இடத்திருக்கு வந்தோம். அங்க ரெண்டு பேரு பேசிட்டு இருந்தாங்க. நம்ம ஒலிம்பிக்ஸ் சாம்பியன் சாமி வாஞ்சிறு வந்துருக்கார், அவருதான் அந்த $100,000 வாங்க போறாருன்னு. நமக்கா, என்னடா பேரு சாமி வாஞ்சிறு-ன்னு... சாமியவே திட்ட சொல்லி பேரு வச்சுருக்காங்க அப்படினு போட்ட மொக்கைக்கு சிரிக்கும் முன்னரே.
'வராங்க.. வராங்க..' கார்கில் எழுப்பினார்.
'எங்க..எங்க..' என்று நான் வினவ. அங்கு நம்மாளு சும்மா கூலா கைய ஆடிட்டு வந்துட்டு இருந்தாரு.
'யோவ், சீக்கரம் வாயா, அவனவன் நீ $100,000 வாங்கரயானு பாக்க வந்துருக்கான். நீ என்னடான மெதுவா ஆடி அசஞ்சு வர.' என்று சத்தமாக திட்டினேன்.
04......
03.....
02....
நம்ம ஆளு சட்டுன்னு உள்ள பூந்து ஒரு செகண்ட்-ல $100,000 -அ தட்டிட்டு போய்ட்டான், குடுத்துவச்சவன் மாதிரி.
இன்னும் நான் சொல்லிட்டு இருந்தேன். என்ன இருந்தாலும் இவளோ facilities இருந்த யார் வேணாலும் ஓடலாம். அப்படி சொல்லிட்டு திரும்பி வரும்போதுதான் நம்ம வாழைப்பழ காமெடி நடந்தது.

இதுல இன்னொரு சிறப்பு என்னன்னா, பெண்களுக்கு தனி தூரம். பள்ளிகூட மாணவர்கள் கூட ஓடினார்கள். இங்க வந்தபோதுதான், மராத்தான்-ல ஓடி பல பேரு செத்துபோயிருக்காங்க-ன்னு கேள்விப்பட்டேன். எனக்கு உடனே நாம மராத்தான் தூதுவன் ஞாபகம் வந்தது. ஒருவேளை எல்லா போட்டியிலும் அவன் ஆவியா வந்து ஒரு உயிரை கொண்டுபோரானோ-ன்னு எனக்கு சந்தேகம். இந்த ஈரம் படம் பாத்ததுல இருந்தே இப்படித்தான்.

இப்படி சும்மா சும்மா நான் இது இல்ல அது இல்லன்னு பேசிட்டு வந்துட்டு இருக்கும்போது, எதுவும் தேவை இல்ல, மனசு இருந்த போதும். அத்தோட உழைப்பும் சேர்ந்தால் எதிலும் வெற்றி பெறலாம் என்று நிரூபித்தார் ஒருவர். அவர் போட்டோ கீழே.


பி.கு: நான் செய்த இத்தனை torture-களுக்கு நடுவிலும் இவ்வளவு போட்டோக்களை அங்கும் இங்கும் தொங்கி தொங்கி எடுத்த நம்ம கார்கில் ஜெய்... ரெம்பா நல்லவர்ர்னு உங்களுக்கு சொல்லிக்கறேன்


0 Comments:

Related Posts with Thumbnails

blogger templates | Make Money Online