Monday, November 02, 2009

வேலைய பாருங்கப்பா!!!

இது கொஞ்சம் controversial topic-தான் இருந்தாலும் நம்ம மனசுல பட்டத சொல்வோம். யாரு மனசும் புண் படாத வரைக்கும் நல்லது. யாரோ சொல்லி நான் கேள்விப்பட்டிருக்கேன், 'உனது சுதந்திரம் உன் கையை ஓங்கும் வரையில்தான்' அப்படினு. ஆனா இத பல பேரு புரிஞ்சுக்காம பேசறதும் எழுதறதும் அவர்களது குறுகிய பார்வையைத்தான் காட்டுகிறது. அது சரி எனது பார்வை சரியா? அது நீங்கதான் சொல்லணும். என்னடா சங்கத்துல திடீர்னு சீரியஸ்-அ பேசறாங்களே அப்படின்னு யாரும் நினைக்க வேண்டாம். இரவுன்னு இருந்தா பகல்ன்னு ஒன்னு வேணும் இல்ல.. அதுக்குதான் இந்த டிபரன்ஸ்.

-------------------------------------------------------------------------------------------------------------

நானும் கொஞ்ச நாளாவே சில வலைப்பதிவுகளை படித்து வந்தேன். (அதன் பெயரை சொல்லி, அவர்களுக்கு வீண் விளம்பரத்தை ஏற்படுத்த விரும்பவில்லை). அவர்கள் பெரியாரின் வாரிசுகள். யாருடைய வாரிசாய் இருந்தால் நமக்கென்ன, நாம் பார்க்க போவது அவர்கள் எழுதுவதைத்தான். கருத்துக்களை சொல்லுகிறேன் என்ற போக்கில் அவர்கள் எப்போதும் ஒரே சமூகத்தை சாடுவது சரியா.

அது சரி நம்ம அமைதியா பேசினது போதும், இப்போ இன்னும் கொஞ்சம் சீரியஸ் ஆவோம்.

எனக்கு தெரிஞ்சு பெரியார் பகுத்து அறியணும் அப்படினு சொல்லிருகார். எனக்கு சொல்லியவர்கள் பகுத்தறிவை புகட்டும் போது அவர்கள் பார்பன எதிர்ப்பை அதில் sub-set போல கொண்டிருந்தனர் என்றனர். ஆனால் இப்போதுதான் தெரிகிறது, பார்பன எதிர்ப்பிற்கு அவர்கள் போர்த்தியிருக்கும் போர்வை பகுத்தறிவு என்று.

இதில் ஒருவர் சொல்லுகிறார், மனைவி கணவனை 'அண்ணா' என்று கூப்பிடுவது எந்த சமூகத்திலும் இல்லாதது என்று. 'எவன் வீட்டுல எவன் பொண்டாட்டி எவன எப்படி கூப்பிடராங்கரத' பாக்கறதுதான் இவர்கள் வேலையோ என்று எனக்கு தோன்றுகிறது. இந்தக் காலத்தில் பாதி பேரு கணவனை 'போடா... வாடா...' என்று பேசுகிறார்களே, இதெல்லாம் அவங்க காதுல 'இன்ப தேனாய்' விழுகின்றது போல.

அடுத்து, பிராமணர்கள் தங்களுக்கு இட ஒதுக்கீடு இல்லை என்று சொல்லவதால் அவர்களுக்கென்று ஒரு கல்லூரி கட்டிக்கொண்டு அதில் போய் படிக்க வேண்டுமாம். இவரு பெரிய கல்வி மந்திரி ஐடியா குடுக்கிறாராம். இதே இவர்களது செய்திகளை பிராமண ஆதிக்க ஊடகங்கள் ஒளிபரப்பவும், எழுதவும் செய்வதில்லை என்று கதறுகின்றனர். இதையே இவர்களுக்கும் சொல்லலாம் இல்லையா? வேண்டுமென்றால் நீங்கள் ஒரு ஊடகத்தை தொடங்குங்கள், எத்தனை பேர் பார்கிறார்கள் என்று பாப்போம்.

மூன்றாவது, திராவிடர்களும் ஆரியர்களும் ஒன்று சேர மாட்டார்கள் என்றும், பிராமணர்கள் அப்படி சொல்லிக்கொண்டு இருந்தாலும் அப்படி ஒருபோதும் நடக்காது என்கிறார் நம்ம ஆசாமி. எனது நண்பர்களில் பிராமணர்களை விட, மற்ற சமூகத்தினர்தான் அதிகம். (இதை படிக்கும் நண்பர்கள் தவறாக எடுத்து கொள்ள வேண்டாம், சில விஷயங்களை தெளிவுபடுத்த இதை சொல்லியாக வேண்டியுள்ளது) எனவே ஏதோ சில விஷயங்களை மேம்போக்காக பார்த்துவிட்டு சும்மா சொல்லக்கூடாது. அது சரி, ஒன்று சேரமாட்டாங்க அப்படின்னு சொல்ல இவங்க யாரு.

நாலாவது, ஒருவர் சொல்லுகிறார், அவரது நாளிதழ் வேலையில் பிராமண ஆதிக்கத்தால் அவரு வெளிய வந்தாராம். அதுக்கு அப்புறம் ரொம்ப நாள் முன்னாடியே ப்ளாக் செய்ய ஆரமித்து அதிலும் பிராமண ஆதிக்கத்தால் அவரால் சோபிக்க முடிலயாம். உட்டா அவர் வீட்டுல பல்பு எரியலேனா உடனே பிராமண சமூகம்தான் காரணம்னு சொல்லுவாரு போல இருக்கு. ப்ளாக் என்பது நம்ம கைல இருக்கும்போது, அந்த பழிய பிராமணர்கள் மேல போடுவது அநியாயமா இல்லையா?

வேட்டியை வேஷ்டி என்று சொல்லுகிறார்களாம், அத்திம்பேர், ஆத்துக்காரர் என்று அருவருக்கத்தக்க வகையில் பேசுகிறார்களாம், சமஸ்க்ருதம் ஒரு பாஷையே இல்லையாம். சில இடங்களில் அத்தையை அயித்தை என்று அழைப்பதில்லையா, அது போல இவர்களுக்கு ஏன் எடுத்துக்கொள்ள தோன்றுவதில்லை? அட அவங்க எப்படி அப்படி சொல்லாம் அப்படின்னு எப்பவும் குறை கண்டுபிடிக்கறது. ஆகாத பொண்டாட்டி கை பட்டா குத்தம் கால் பட்டா குத்தம் அப்படின்னு சொல்வாங்க அந்த மாதிரி இல்ல இருக்கு.

வேட்டியை கேவலமான முறையில் கட்றாங்களாம். அவங்க காசு போடு வாங்கறாங்க அவங்க கட்றாங்க, உனக்கு என்னய்யா போச்சு. உன் வேட்டிய வாங்கியா அவங்க கட்றாங்க.

இப்படி சொல்லிடே போலாம். சாமியும் இல்ல பூதமும் இல்லன்னு சொல்றாங்களே, ஏன் இத மத்த மதத்துக் காரங்ககிட்ட சொல்லலாம் இல்ல.. பகுத்து அரிஞ்சுருவாங்கனு பயம் போல. சூரியன பாத்து நாய் குறைச்சு சூரியன் பதில் சொல்லலேன சூரியனுக்கு பயம்னு அர்த்தமில்ல. இந்த பதிவும் கூட யாரையும் புண்படுத்த அல்ல, நம்ம ஜனத்தை பண்படுத்ததான். நமக்கு நட்பு கரம் நீட்டித்தான் பழக்கம்.

அவங்கள மாதிரி அடுத்தவங்கள புண்படுத்தி பதிவு போடறதுக்கு பதில வேற எதாவது வேல இருந்தா போய் பாக்கலாம், இல்லாட்டி இட ஒதுக்கீட்டை நம்பாமல் புள்ளைங்களுக்கு வீட்டுப் பாடம் சொல்லிக் குடுக்கலாம்.


1 Comment:

Ananya Mahadevan said...

நான் இதெல்லாம் கண்டுக்கறதில்லை கார்த்திக். நிச்சயமா நான் எழுதுவதற்கு மாற்று கருத்து இருக்கலாம். ஆனா ஏனொ தெரியலை, இது வரை கேவலமான பின்னூட்டம் எதுவும் வரலை. அப்படியே வந்தாலும் பிரசுரிக்கமாட்டோம்ல ஹீ ஹீ. நியாயமான கோபம். நன்னா எழுதி இருகாய்.

Related Posts with Thumbnails

blogger templates | Make Money Online